Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு,  புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தபோதிலும்31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1206172

  • கருத்துக்கள உறவுகள்

31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் – விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

996-696x414.png
 60 Views

தமிழ் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் 31 தமிழ்ப் புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று அதிகாலை ஜேர்மனியின் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலாத்காரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

2-1.jpg

நேற்று பகல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரகசியமாக இவர்கள் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இலங்கை நேரம் 1.00 மணியளவில் அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

ஸ்பானிஸ் விமானமான Wamos Air flight PLM / EB 308 விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடுகடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்திவந்தன. ஜேர்மனியிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் நேற்றுப் பகல் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து நூற்றுக்கணக்கான தமிழர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டுள்ளார்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் பலருடைய தொலைபேசிகள் நேற்று மாலையுடன் செயலிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் சிலர் நாடு கடத்தப்படவுள்ளவர்களை விமான நிலையத்தில் சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான அனுமதி இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டது. இதனால், அவர்கள் கடும் ஏமாற்றமடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

1-242.jpg

 டுசில்டோவ் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு ஜேர்மன் நேரம் 9.16 மணியவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.00 மணழயளவில் புறப்பட்ட விமானத்தில் இந்த 31 புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக ஏற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு வரையில் விமான நிலைய சுற்றாடல் தமிழர்களால் நிறைந்திருந்ததுடன், பதற்றமான நிலையும் காணப்பட்டது.

https://www.ilakku.org/?p=45981

 

 

தற்போது ஜேர்மனி விமான நிலையத்தில் தமிழர்கள் நாடு கடத்தல் முயற்சியை எதிர்த்து போராட்டம்! கடைசி நொடி வரை நாம் போராடுவோம்... ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100-க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவா்களை 30-ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாலம் மாடிக்குதான் கொண்டுபோவர்கள்.

 

எனக்கு தெரிந்து 1979ம் ஆண்டுகளில் ஜெர்மனிக்கு சென்றவர்கள் உள்ளர்கள். 

பலருக்கு வீசா கொடுத்த நாடு இப்பொழுது இவ்வாறு நடந்து கொள்வதேன்?

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்ட தமிழர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு இலங்கை குடிவரவு துறை உத்தரவு

 
996-696x414.png
 81 Views

ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இன்று கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடுகடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்திவந்தன. ஜேர்மனியிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களை நாடு கடத்த முழு நடவடிக்கையையும் ஜேர்மன் அரசு முன்னெடுத்திருந்தது. அதே போல் சுவிட்சர்லாந்திலிருந்தும்  சிலர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கொழும்புக்கு வந்தடைந்த நாடுகடத்தப் பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் அவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி ஜேர்மனியிலிருந்து 20 பேர், சுவிட்சர்லாந்திலிருந்து 4 பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு,  புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தபோதிலும் 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1206351

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்பியனுப்பபட்ட அனைவரும் ராணுவத்தின் பிடியில் உள்ளதாக ஒரு தகவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.