Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!

 

spacer.png
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும் 14 கிலோ மீட்டர் சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்குப் பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்று மாநில நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பெயர்மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஈ.வெ.ரா.சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979ல் பெயர் சூட்டினார். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, மோடி பிறப்பித்த ஆணையை, எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கனவே, சென்னை விமான நிலையத்திலிருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்து இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடி பழனிசாமி, தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ ஈ.வெ.ரா.சாலையை நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உடனடியாக அதை இணைய தளத்திலிருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/04/13/29/tamilnadu-political-leaders-vaiko--stalin-k-veeramani-condemns-renaming-of-evr-periyar-salai

பி.ஜே.பி , ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் பினாமி கட்சிகள் தங்கள் மதவாத, அடிப்படைவாத, இனவாதக் கருத்துகளை தமிழகம் ஏற்காமல் இருப்பதற்கான காரணம் பெரியாரிசம் என்பதை புரிந்து வைத்து இருப்பதால் எப்பாடுபட்டாவது அதை ஒழிக்க நினைக்கின்றனர். தென்னிந்தியாவில் தம் பிரதான எதிரியே பெரியாரிசம் என நம்புகின்றனர். அதை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற நினைக்கின்றனர். ஆனால் அது மீண்டும் மீண்டும் அவர்களையே திருப்பி தாக்கி வருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றம்!

spacer.png

 

நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்டு, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பெரியார் பெயரை நீக்குவதா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை இணையதளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாசாலையின் பெயர் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு எனவும், காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயர் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கமோ, பதிலோ கொடுக்கப்படாத நிலையில், அண்ணாசாலை, காமராஜர் சாலை பெயரும் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் சென்னை காமராசர் சாலையின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமராசருக்கும் செய்துள்ளனர்!. விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை. விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்! அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா?. அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்’’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்?. உடனடியாக இந்த உத்தரவுகளைத் திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

https://minnambalam.com/politics/2021/04/14/56/annasalai-kamarajar-salai-name-changed

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பெரியார் சாலை பெயர் மாற்றம் : அரசியல் நடவடிக்கையா? எதார்த்த செயல்பாடா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.