Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே?

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை ( Channi Anand )

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்க வைப்பவையாகவுள்ளன.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தை தருபவையாக உள்ளது.

கொரோனா பாதிப்பு
 
கொரோனா பாதிப்பு Twitter

அரசு கொடுக்கும் முரணான தகவல்

ஒரு கட்டத்தில் இடுகாடுகளில் இடம் இல்லாமல் உடல்களை திறந்தவெளிகளில் எரிப்பது போன்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. சூழல் இப்படி இருக்க கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் என அரசு கொடுக்கும் எண்ணிக்கையும் நிஜத்தில் நிகழ்பவையும் ஒன்றோடு ஒன்றோடு தொடர்பற்றது போல உள்ளது என குஜராத் மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

குஜராத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என அரசு கொடுக்கும் எண்ணிக்கை குறைவானதாக உள்ளது என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தின் சூரத் நகரில் நிலைமை மோசமானதாக உள்ளது. அங்கு ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் கொரோனாவால் வெறும் 22 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்நகரில் உள்ள இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா உயிரிழப்பு
 
கொரோனா உயிரிழப்பு

உருகிய எரி உலை

இது மட்டுமல்லாமல் சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு 8-10 மணி நேரங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதில் துயரத்தின் உச்சமாய் சூரத்தில் உள்ள இடுகாடு ஒன்றில் தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்படுவதால் எரி உலை உருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள நபர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

 

குஜராத்தின் அகமதாபாத் நகரில் மருத்துவமனை ஒன்றில் நுழைய நீண்ட வரிசையில் அவசர ஊர்திகள் காத்துக் கொண்டிருக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் காண முடிந்தது. அகமதாபாத் மருத்துவ கூட்டமைப்பு, நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

மகராஷ்டிராவிலும் இதே நிலைமை

குஜராத்தில் மட்டுமல்ல மகராஷ்டிராவிலும் இதே நிலைதான். அம்மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் கொரொனா தொற்றால் 30 லட்சத்துக்கும் அதிகாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 

தொடரும் கும்பமேளா

மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்க, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கும்பமேளாவில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது என அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கும்பமேளா தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 61, 695 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 22,339 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மூன்றாவதாக டெல்லியில் 16, 699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 1,185 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளன.

 

 

https://www.vikatan.com/government-and-politics/politics/corona-virus-gujarat-situation-at-worst-whats-going-on-there

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி மொழிப்பரப்ப கொட்டிய நிதியை  விட கொர்னோவுக்கு கூட  சிலவளித்து இருந்தால் கட்டுக்குள் கொண்டுவந்து இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎fire, outdoors and ‎text that says '‎மோடி ஆட்சியின் சாதனையால் Lucknow உபி மபி کاஉ & மபி மின்னும் காட்சி‎'‎‎

ஒளிர்வது... எல்லாம், எரியும் பிணங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.