Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நகர் மத்தியை கழுவி, மருந்து விசிறும் இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகர் மத்தியை கழுவி, மருந்து விசிறும் இராணுவத்தினர்

April 22, 2021

32223-2.jpg

யாழ்.நகரின் மத்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வியாபர நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து , கிருமி தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

யாழ்.நகர் மத்தி பகுதியில் கடந்த மாதம் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து  அப்பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன அதன் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீளதிறக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்போது புத்தாண்டை முன்னிட்டு பெருமளவானோர் அப்பகுதியில் கூடி உடுபுடவைகள் வாங்கியிருந்தனர். 
இந்நிலையில் இராணுவத்தின் 51ஆவது படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நவீன சந்தை மற்றும் பஜார் வீதி ஆகியவற்றை நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததுடன் , கிருமி தொற்று நீக்கி மருந்தையும் விசிறினர்.

32223-1.jpg32223-2.jpg

32223-3.jpg

 

https://globaltamilnews.net/2021/159762/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்.நகர் மத்தியை கழுவி, மருந்து விசிறும் இராணுவத்தினர்

எங்கள் சித்தப்பா வீட்டில் வளரும் கிடாய்க்கு வலிமையான கூரிய கொம்புகள் உண்டு, ஆனாலும் அது யாரையும் முட்டிக் குத்துவதில்லை, எவர் தடவினாலும் சிலிர்த்து தனது அன்பை வெளிப்படுத்தும். புண்ணாக்கும், தவிடும் கலந்து குழைத்து முருக்கமிலையில் வைத்து மடித்துக் கிடாயின் தாடையை செல்லமாகப் பிடித்துச் சித்தப்பா ஊட்டும் அழகை நாங்கள் ஆனந்தமாக ரசிப்போம். கவுணாவத்தை கோவில் திருவிழாவின்போது மேள தாளத்துடன் கிடாயை தெருவில் கூட்டிச் செல்லும்போது நாங்களும் துள்ளிக் குதிப்போம். அடுப்பில் ஆட்டிறைச்சி வேகும் வாசனை மூக்கைத் துளைக்கும் போதும் ஆனந்தமாக கூத்தாடுவோம்.

அந்த வயதில் நடந்தவை அப்போது எங்களுக்குப் புரியவே இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

எங்கள் சித்தப்பா வீட்டில் வளரும் கிடாய்க்கு வலிமையான கூரிய கொம்புகள் உண்டு, ஆனாலும் அது யாரையும் முட்டிக் குத்துவதில்லை, எவர் தடவினாலும் சிலிர்த்து தனது அன்பை வெளிப்படுத்தும். புண்ணாக்கும், தவிடும் கலந்து குழைத்து முருக்கமிலையில் வைத்து மடித்துக் கிடாயின் தாடையை செல்லமாகப் பிடித்துச் சித்தப்பா ஊட்டும் அழகை நாங்கள் ஆனந்தமாக ரசிப்போம். கவுணாவத்தை கோவில் திருவிழாவின்போது மேள தாளத்துடன் கிடாயை தெருவில் கூட்டிச் செல்லும்போது நாங்களும் துள்ளிக் குதிப்போம். அடுப்பில் ஆட்டிறைச்சி வேகும் வாசனை மூக்கைத் துளைக்கும் போதும் ஆனந்தமாக கூத்தாடுவோம்.

அந்த வயதில் நடந்தவை அப்போது எங்களுக்குப் புரியவே இல்லை.  

இப்படி வளர்த்த கடாக்களும் மார்பில் பாய்ந்த சம்பவங்கள் உண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.