Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா

Oxygen cylinder

Oxygen cylinder ( AP Photo / Rajesh Kumar Singh )

`தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருக்கிறதா, இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கோர்ட் கூறியுள்ளது. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அந்த நிறுவனம் அனுமதி கேட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளா போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பு வைத்துள்ளது. அத்துடன் கோவா மாநிலத்தில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு 20,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜனை வழங்கி முன்மாதிரி மாநிலமாக வழிகாட்டியுள்ளது கேரளம். அவசரத் தேவைக்காக ஆக்‌ஸிஜன் வழங்கி உதவிய கேரள சுகாதாராத்துறைக்கு கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா டெஸ்ட்
 
கொரோனா டெஸ்ட்

கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே தனது ட்விட்டர் பக்கத்தில், ``கோவாவில் கொரோனா நோயாளிகளுக்காக 20,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் வழங்கி உதவிய ஸ்ரீமதி சைலஜா டீச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு கோவா மக்கள் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியில் கேரளம் முன்மாதிரியாகத் திகழ்கிறது என டெல்லி ஐகோர்ட்டு கூறியுள்ளது. டெல்லிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தது. நாடே ஆக்ஸிஜனுக்காக ஏங்கும்போது கேரளம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதுடன், மற்ற மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் வழங்குவது எப்படி அதற்கு சாத்தியமாகிறது என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கொரோனா முதற்கட்ட பரவல் சமயத்திலேயே அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைத்திருந்தோம்.

ஆக்ஸிஜன்
 
ஆக்ஸிஜன் Aijaz Rahi

அப்போது இருந்தே ஆக்ஸிஜன் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்துவந்தோம். இப்போது இரண்டாம் அலையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. எங்களுக்குப் போதுமான அளவு கையிருப்பு வைத்திருந்தோம். அந்த நேரத்தில், உயிர்காக்க கோவா மாநிலத்துக்குத் தேவை என்பதால் வழங்கினோம். இப்போது எங்களிடம் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, தட்டுப்பாடு என்ற நிலை ஒருவேளை ஏற்பட்டால் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டு வைத்துள்ளோம்" என்றார்.

 

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், ``கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள கேரளம் தயாராக உள்ளது. மருத்துவமனைகளை தயார்படுத்துதலிலும், தடுப்பூசி போடுதிலும், ஐ.சி.யு-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், மருத்துவ ஆக்ஸிஜன் தடையின்றி வழங்குவதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
 

ஆக்ஸிஜன் இருப்பை உறுதிப்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பெற்று மாநிலம் முழுவதும் வழங்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் 99.39 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்தது. அந்த சமயத்தில் நிமிடத்துக்கு 50 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் கேரளத்தில் ஆக்ஸிஜன் தினசரி கையிருப்பு 219 மெட்ரிக் டன். ஒரு நிமிடத்தில் 1,250 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டது.

இம்மாதம் 15-ம் தேதி கணக்குப்படி தினமும் 73 டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. நாங்கள் தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளோம்" என்றார்.+

 

https://www.vikatan.com/news/india/how-kerala-have-surplus-oxygen-when-most-states-facing-shortages-minister-explains

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவிலும் திராவிட ஆட்சியோ.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருப்பது சங்கியின் பினாமி அரசு. அதாவது நாம் தமிழரின் சித்தப்பா அரசு .🤪

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.