Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் SLIIT

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் SLIIT

க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் SLIIT

 

2020 உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத் துறையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய முதல் மூவருக்கு SLIIT முழுமையான புலமைப் பரிசில்களை வழங்கி கல்விசார் சிறப்பிற்கு வெகுமதியளித்துள்ளது. ஒவ்வொரு புலமைப் பரிசிலும் தலா வருடமொன்றுக்கு கல்விக்கான கட்டணம் மற்றும் வாழ்க்கைக்கான கொடுப்பனவான 160.000 ரூபா வீதம் நான்கு வருடங்களை உள்ளடக்கியதாகவிருக்கும்.

இந்தப் புலமைப்பரிசில்களின் மொத்தப் பெறுமதி பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.6 மில்லியன் ரூபாவும் கணினி மற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு 1.72 மில்லியன் ரூபாவுமாகும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கப்படும் உரிமம் பெற்ற பாடநெறிகள் உள்ளடங்கலாக ஏனைய துறைகளுக்கும் இந்தப் புலமைப்பரிசிலை விரிவுபடுத்த SLIIT திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெறும் அல்லது லண்டன் கேம்பிரிட்ஜ் க.பொத. உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெறும் மாணவர்களுக்கு SLIIT ஏற்கனவே வழங்கிவரும் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட புலமைப்பரிசில்களுக்கு மேலதிமாகவே இந்தப் புதிய புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய முயற்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த SLIIT இன் கல்விக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், ´விதிவிலக்கான மாணவர்களை அங்கீகரிப்பதிலும் SLIIT இல் கல்வி கற்பதன் ஊடாக தமது தொழிலுக்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதாலும் நாம் கௌரவிக்கப்படுகின்றோம். இலாப நோக்கற்ற கல்வி நிறுவனம் என்ற ரீதியில் கல்வி பட்டக் கல்விகளின் தரம் மற்றும் பட்டதாரிகளின் வேலைத் திறன் என்பவற்றுக்கே SLIIT முன்னுரிமையளிக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு மேலும் மாணவர்களுக்கு அவர்களின் லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற வழிகாட்டும் வாய்ப்புகள் உள்ளகப் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதில் SLIIT புகழ்பெற்றது´ என்றார்.

2019 / 2020 காலப் பகுதியில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் 64 மில்லியன் ரூபா பெறுமதியான புலைமைப்பரிசில்களை வழங்கி புதிற வரலாற்றை நிறுவனம் உருவாக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வர்த்தகம் பொறியியல் கல்வி விஞ்ஞானம் கட்டடக்கலை அளவு மதிப்பீடு உயிரியல் தொழில்நுட்பம் உளவியல் தாதியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் பட்டத்தைத் தொடரும் மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்துறை மற்றும் பெருநிறுவனத்துறையில் SLIIT கொண்டுள்ள தலைமைத்துவ நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்துக்குப் பல வெளிப்புற அனுசரணையாளர்களிடமிருந்து புலமைப்பரிசிலகள் கிடைக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் BSc பட்டத்தைப் பூர்த்திசெய்ய IFS நிறுவனம் மற்றும் ஏனைய முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் கம்பனிகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் LOLC ஆகியன இதில் அடங்குவதுடன் உள்ளகப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புக்கள் என்பனவும் வழங்கப்படுகின்றன.

இந்த உதவித்தொகை திட்டங்களைத் தவிர தகுதியான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்துக்கும் SLIIT ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்தக் கடன் திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு SLIIT மானியம் வழங்குகிறது. ஆரம்பம் முதலே உயர் கல்வித் துறையில் SLIIT இன் பங்களிப்புகள் இணையற்றவை இதன் விளைவாக இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள தொழில் மற்றும் வணிகங்களுக்கு சேவை செய்யும் ஆயிரக்கணக்கான திறமையான பட்டதாரிகள் மற்றும் ஏராளமான தொழில்முனைவோர் தங்கள் வணிக முயற்சிகளுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

க. பொ.த உயர்தரம் முடிவுகள் கடந்த மாத இறுதியில் வெளியாகும் என்று சொன்னார்கள். வந்துவிட்டதா?

இப்போது 30 வருடங்கள் முன்னம் காணப்பட்ட நிலமையை விட உயர்தரம் கற்ற பிள்ளைகள் தொடர்ந்து கற்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இது நல்லதொரு முன்னேற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

க. பொ.த உயர்தரம் முடிவுகள் கடந்த மாத இறுதியில் வெளியாகும் என்று சொன்னார்கள். வந்துவிட்டதா?

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.