Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன?

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

``மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும். இப்படியா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நடத்துவது? அவர்கள் என்ன கொத்தடிமை பணியாளர்களா?'' - அதிரடி காட்டும் மம்தா... மே. வங்க அரசியலில் நடப்பது என்ன?

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பதவியேற்றதிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகிறது மேற்கு வங்க அரசியல் களம். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது, தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிமாற்றம் செய்தது என தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது மேற்கு வங்க அரசியல். மம்தாவை அசைத்துப் பார்க்க மத்திய அரசுத் திட்டம் தீட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸார் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வர, தன் அதிரடிகள் மூலம் மத்திய அரசுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார் மம்தா!

மம்தா பானர்ஜி
 
மம்தா பானர்ஜி
தீதி-யின் அதிரடிகளால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது மேற்கு வங்க அரசியல். `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..?' என மம்தாவின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் ஒருபக்கம் குவிந்த வர, `அரசியல் நாடகம் நடத்துகிறார் மம்தா' என பா.ஜ.க-வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எங்கு தொடங்கியது பிரச்னை?

யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை ஆய்வு செய்யக் கடந்த 28-ம் தேதியன்று மேற்கு வங்கம் சென்றார் பிரதமர் மோடி. பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பிரதமரை மட்டும் தனியாக 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். பின்னர், வேறு பணிகள் இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மம்தாவின் இந்தச் செயல் பா.ஜ.க-வினரை ஆத்திரமடையச் செய்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``மம்தாவின் செயல் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது'' என்று கூறினார். மம்தாவோடு இணைந்து பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தாமதமாக வந்த மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டியோபாத்யாவை மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் பயிற்சி மையத்துக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி
 
பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி

தலைமைச் செயலாளரை அனுப்ப மறுத்த மம்தா!

மே 31-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளரை பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மம்தாவோ, ``இந்த நெருக்கடியான நேரத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது'' எனப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார். முன்னதாக மே 31-ம் தேதியோடு முடியவிருந்த அலபன் பண்டியோபாத்யாவின் பதவிக்காலத்தை, மம்தாவின் கோரிக்கையை ஏற்று மூன்று மாத காலம் நீட்டித்திருந்தது மத்திய அரசு.

மம்தா
 
மம்தா

இதற்கிடையில், டெல்லியிலுள்ள பணியாளர் பயிற்சி மையத்தில் மே 31-ம் தேதியன்று பணியில் இணையாத காரணத்தால் அலபன் பண்டியோபாத்யாவுக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தனது அரசுப் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் அலபன் பண்டியோபாத்யா. பதவி விலகிய அவரை தனது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மம்தா. அலபன், இந்தப் பணியில் மூன்று ஆண்டுக்காலம் நீடிப்பார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

மம்தா ஆவேசம்..!

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, ``கொரோனா தடுப்பு பணிகளிலும், புயல் நிவாரண நடவடிக்கைகளிலும் தீவிர பங்கெடுத்து வரும் தலைமைச் செயலாளர் அலபன் பண்டியோபாத்யாவை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் பிரதமரும் அவரது அரசும் எந்த மாதிரியான செய்தியை நாட்டுக்குச் சொல்ல வருகிறது.

மம்தா பானர்ஜி
 
மம்தா பானர்ஜி

மாநில அரசுடன் ஆலோசனை நடத்தாமல், மாநில அரசுப் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்துக் கொள்ள முடியாது. மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும். இப்படியா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நடத்துவது? அவர்கள் என்ன கொத்தடிமை பணியாளர்களா?'' என்று கேள்வியெழுப்பினார்.

மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்... மிஸ்டர் பிஸி ப்ரைம் மினிஸ்டர்... மிஸ்டர் `மான் கி பாத்' ப்ரைம் மினிஸ்டர்... என்ன வேண்டும் உங்களுக்கு? உங்களால் என் கதையை முடித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? அது நிச்சயம் முடியாது!
மம்தா பானர்ஜி

மேலும், ``எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம். அலபன் பண்டியோபாத்யாவுக்காக மட்டும் நான் பேசவில்லை. நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்காகவும் நாம் ஒன்றிணைவோம். அவர்கள் இருவரும் (பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா) வைத்ததுதான் சட்டமா?'' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் மம்தா.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/mamata-vs-modi-amit-shah-what-is-happening-in-west-bengal-politics

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் செய்யவில்லை போல! அதனால தான் ஒன்றிய அரசை கடுமையா எதிர்க்க முடிகிறது. 
இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தலில் நின்று வென்றால் தான் முதல்வராக தொடரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

BJP அரசுக்கு நன்றி. 

இதே அசுர ஆட்டத்தை BJP தொடர்ச்சியாக நடாத்த வேண்டும். மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும். இந்தியா சீரழிய வேண்டும். 

வாழ்த்துக்கள் BJP. வாழ்த்துக்கள் மம்தா..

இதே வழியை தமிழகமும், கேரளாவும், கர்நாடகமும் பின்பற்ற வேண்டும். .

Good Luck Guys.

😜 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.