Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கப்பலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என வணிகக் கப்பல் செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் தீயை அணைக்க இடைவிடாமல் போராடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த இழப்பீடு பெற சட்டமா அதிபர் மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும் என்றும் இதற்கிடையில், கப்பல் உரிமையாளர்கள் கடற்கரை அனுமதிப் பணிகளுக்கு ஆதரவாக கூடுதலாக ஒரு இடைக்கால அறிக்கையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தமையால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு குறித்த கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்மியுல் யோஸ் கொவிட்ஸ் (Shmuel Yoskovitz) மன்னிப்பு கோரியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ள அவர், இந்த சம்பவம் குறித்து தான் பெரிதும் வருத்தமடைந்திருப்பதாகவும் இதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1220251

  • கருத்துக்கள உறவுகள்

வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை என்ன, அது வழங்கப்படும் திகதி,  ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நிதி  எப்படி  பயன்படுத்தப்படும் என்பன போன்ற விபரங்களை நாடறிய இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும். அதுமட்டுமல்ல தீவிபத்தில் சிக்கிய கப்பள் உள்ளே வர இந்தியா உட்பட பல நாடுகள் அனுமதி மறுத்திருந்தும் இலங்கை கடலுக்குள் வர  அனுமதிவழங்கிய பொறுப்பற்ற துறைமுக அதிகாரி அல்லது அரசியல்வாதி யார் என்பதையும்  கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

4 minutes ago, vanangaamudi said:

வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை என்ன, அது வழங்கப்படும் திகதி,  ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நிதி  எப்படி  பயன்படுத்தப்படும் என்பன போன்ற விபரங்களை நாடறிய இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும். அதுமட்டுமல்ல தீவிபத்தில் சிக்கிய கப்பள் உள்ளே வர இந்தியா உட்பட பல நாடுகள் அனுமதி மறுத்திருந்தும் இலங்கை கடலுக்குள் வர  அனுமதிவழங்கிய பொறுப்பற்ற துறைமுக அதிகாரி அல்லது அரசியல்வாதி யார் என்பதையும்  கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

சேதங்களை மதிப்பிட முன்னரே உரிமையாளர் விழுந்தடித்து நட்ட ஈடு தர தானாகவே முன்வருகிறார் என்றால் இந்த விசயத்தை விசாரணையின்றி அமுக்க முயல்கிறார்கள். விசயம் பெரிதாக இருக்கும்.

ITOPF, OSR, MV X-Press Pearl போன்ற கடல் மாசுபடுதலுக்கு எதிராகச் செயற்படும் அமைப்பிலுள்ள சர்வதேச அதிகாரிகள் இலங்கைக்குச் சென்றுள்ளனர்.

https://fr.news.yahoo.com/sri-lanka-experts-internationaux-face-072212810.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.