Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கத் தயாராகும் ரெலோ, புளொட்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கத் தயாராகும் ரெலோ, புளொட்..!

(ஆர்.ராம்)
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகியன முன்னெடுத்துள்ளன. 

இதற்கான முதலாவது கட்டப்பேச்சுக்கள் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் மூலம் உறுதி செய்ய முடிந்துள்ளது. 

இந்த உரையாடலின்போது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் சுகவீன விடுமுறை எடுத்துள்ள நிலையில் தற்போது அந்தப் பாத்திரத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வகித்து வருகின்றார். 

அத்துடன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளை மாற்றுவது தொடர்பில் சம்பந்தனுடன் ரெலோவும், புளொட்டும் கொள்கை அளவில் இணக்கம் கண்டுள்ள போதும் தற்போது வரையில் அது செயல்வடிவம் பெறவில்லை.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொறடா பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில் தற்போது சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக அப்பதவியை பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வகித்து வருகின்றார். 

இவர் இப்பதவியினை பொறுப்பேற்ற பின்னரும் பங்காளிக்கட்சிகளுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பிலான பாரபட்சமான நிலைமைகள் நீடிக்கவே செய்கின்றது. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தொடாரின் போது கூட ரெலோ தலைமை  உரையாற்றுவதற்கான நேரம் கோரியிருந்தபோதும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் ரெலோவும், புளொட்டும் இணைந்து தாம் பாராளுமன்றில்சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சபாநயகருக்கு எழுத்துமூலமாக அறிவிப்பதோடு தமக்கான நேர ஒதுக்கீடு உள்ளிட்ட இதர விடயங்களை தனியாக ஒதுக்கீடு செய்யுமாறு கோரவதற்கு முதற்கட்டமாக இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில்சந்தித்து அவருடைய உடல்நலம் தொடர்பில் விசாரித்ததோடு சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

https://www.virakesari.lk/article/107399

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே தமிழரை நிற்கதியாக்குவதே!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்பதான் ஒற்றுமையா இருந்திருக்கீங்க. வவுனியாவில் நின்று சொந்த மக்களை காட்டிக்கொடுப்பதிலும்... கொலை செய்வதிலும் கூட போட்டி தானே. இப்ப மட்டும்..???!

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்னைகள் உள்ளன! ஆனால், கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்

 
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%
 5 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி ரெலோ மற் றும் புளொட் கட்சிகள் சுயாதீன மாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்க வில்லை என புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். கந்தரோடையில் உள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த தாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுவுக்குள் இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் ரெலோவுடன் பல தடவைகள் பேசி யுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் எமக்கான நேரப் பங்கீடு என்பது பல வருடங்களாகப் பிரச் சினைகளுக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் என்பது அரிதாகவே கிடைக்கின்றது. அதுவும் கஷ்டப்பட்டுப் பெறவேண்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு பேசிய பின்னர் இந்த விவகாரம் தொடர் பாக முடிவை நாம் எடுப்போம்.

எங்களுக்கு வாக்களித்த மக்கள் மத்தி யிலே எம் மீது தப்பான அபிப்பிராயமொன்று காணப்படுகின்றது. நாம் நாடாளுமன்றில் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லை என அவர்கள் நினைக்கின் றனர். ஆகவே, இந்த விடயத்தில் கவன மெடுத்துச் செய்ய வேண்டிய தேவையுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத் தியோகபூர்வமான பேச்சாளரோ அல்லது கொறடாவோ இல்லை. உத்தியோகப்பற்ற வகையிலேயே அவை செயற்படுகின்றன. இவற்றைச் சீர்செய்யுமாறு சம்பந்தனிடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனா லும், அவை சீர்செய்யப்படவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் உருவாகின்றன” என்றார்.

 

https://www.ilakku.org/?p=52266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.