Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து பிரஜை தூத்துக்குடியில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.றொசேரியன் லெம்பேட்

பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியமை தொடர்பில் வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று (11) மாலை  தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வெளிநாட்டவரை மடக்கிப் பிடித்து கியூ பிரிவு பொலிஸார் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதன்போது குறித்த நபர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணத்தை வைத்திருந்தமை தெரியவந்தது.

மேலும் குறித்த நபர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்தது.

இவர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்துள்ளார். 

அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9 ஆம் திகதி   தூத்துக்குடிக்கு வந்துள்ளார். 

தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில்  தங்கி இருந்ததாகவும், பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக கடற்கரையில் நின்ற போது பிடிபட்டுள்ளதாகவும் விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ 'கேட்டமைன்' போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். 

இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்ட உள்ளார். எனினும் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் இருந்து உள்ளார்.

பின்னர் பரோலில் வெளியில் வந்து உள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.

இதைத் தொடர்ந்து கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து பிரஜை கைது

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மதுரை,

இன்னிக்கு தூத்துகுடி,

நாளைக்கு தங்கச்சி மடமா?

🤣 டெய்லி இனி இலங்கை தமிழன் கஞ்சா கடத்தினான்…அப்படி இப்படி செய்தி வரும் போலயே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

தூத்துக்குடியில் இருந்து படகு  ஊடாக சட்டவிரோதமான முறையில்  இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி- தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர்,  சந்தேகிக்கும் விதமாக சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று நேற்று (வெள்ளிக்கிழமை ) மாலை கிடைத்துள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகபரை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்துள்ளதுடன்  கோவாவில் இருந்து விமானம்  ஊடாக பெங்களுர் வந்துள்ளார்.

அதன்பின்னர் அங்கு வாடகைக்கு கார் ஒன்றினை எடுத்துக்கொண்டு, கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்தடைந்த அவர் பிரபல ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார்.

இதன்போது தூத்துக்குடியில் இருந்து படகு ஊடாக உரிய அனுமதி ஆவணமின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு  கடற்கரையில் நின்ற போதே பிடிபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதை பொருளை பறிமுதல் செய்து  இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன் கடந்த 2019 ஆம்  ஓகஸ்ட் மாதம் வரை  சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

அதன்பின்னர் பிணையில் வெளியில் வந்த அவர், இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது, கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1222073

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நேற்று மதுரை,

இன்னிக்கு தூத்துகுடி,

நாளைக்கு தங்கச்சி மடமா?

🤣 டெய்லி இனி இலங்கை தமிழன் கஞ்சா கடத்தினான்…அப்படி இப்படி செய்தி வரும் போலயே.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

வெள்ளைக்கார துரை தான்... கள்ளத்தோணியிலை  போக, கடற்கரையில் நின்றிருக்கிறார். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.