Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கிறார் ரணில்..!: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் தேசிய பொருளாதாரம் பாதாளத்தில் விழும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கிறார் ரணில்..!: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் தேசிய பொருளாதாரம் பாதாளத்தில் விழும்

(எம்.மனோசித்ரா)

ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டடும் என முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Ranil_Wickramasinghe.jpg

பிடிவாதத்துடன் செயற்பட்டு ஜி.எஸ்.பி. சலுகை இழக்கப்படுமாயின் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் தேயிலைக்கு காணப்படும் வாய்ப்ப்புக்களை இழக்க நேரிடும். ஏற்கனவே பங்களாதேஷிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்நிலை தொடர்ந்தால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் விலை 300 ரூபாவை தாண்டும் எனவும் ரணில் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று ஞாயிறுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பெற்று நாம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தினோம். ஆடை தொழிற்துறை, மீன்பிடித்தொழில் என்பன இதனால் மேம்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அற்றுப்போகக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று எமது சுற்றாத்துறை சார் வணிக செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளன. அதே போன்று மீன்பிடித்தொழிற்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எம்மிடம் நிதியின்மையால் பங்களாதேஷிடம் கடன்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது எமக்கு ஆடைதொழில்துறை மற்றும் தேயிலை தொழிற்துறை மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நீக்கப்படுமாயின் அந்நிய செலாவணி குறைவடையும். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரிக்கக் கூடும். வேலை வாய்ப்புக்கள் அற்றுப் போகும். எனவே அரசியலை புறந்தள்ளி அரசாங்கமானது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்த வேண்டாம். நாட்டை சீரழிக்க வேண்டாம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/107452

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் பெரிதும் பாதிக்கப்படபோவது மீனவர் சமூகமே..!: எம்.எ.சுமந்திரன்

(ஆர்.யசி)
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு பிரேரணையை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும். அவ்வாறான நிலையில் மீனவர் சமூகமே பாரிய அளவில் பாதிக்கப்படப்போவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெருவித்தார்.

European_Parliament__Fisheries__Economy_

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மேற்கு கரையோரத்தில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கப்பலொன்றால் ஏற்பட்ட தாக்கம் மிக மோசமாக எமது நாட்டை பாதிக்கப்போகின்றது. இது பொருளாதார ரீதியில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீனவர் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் சொற்ப அளவிலானவர்கள். இவ்வாறான நிலையில் மேற்கு கடற்கடை மீனவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் தொழில் செய்ய விடுவதற்கான முயற்சிகள் நடைபெறக்கூடும்.

இந்த விடயத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் என்பவர் நாட்டினுடைய மீன்பிடித்துறை அமைச்சராக செயற்பட வேண்டும். நாட்டில் எந்தப்பகுதியில் மீனவர்களுக்கு இடர் ஏற்பட்டாலும் அவர் அதனை கவனிக்க வேண்டும். அதனை விடுத்து கப்பல் பிரச்சினை வந்திருப்பதன் காரணமாக வடகிழக்கு மீனவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் வடகிழக்கு மீனவர்களையும் இது பாதிக்கும் வித்தல் அமையலாம். ஏனைய இடங்களில் தொழில் செய்ய முடியாதவர்கள் இங்கு வருவதற்கான நிலை உருவாகும். அதனை அவரே கொண்டுவந்து நிறுத்திவிடுவார். ஆகவே மீன்பிடித்துறை அமைச்சர் தமிழ் மக்களுக்கான அமைச்சர் என சொல்லிக்காட்டுவதும், அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறான ஒரு விடயமாகும்.

மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றப்படுகின்றது என்ற வாக்குறுதியின் பெயரிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டிருந்தது. இப்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாத காரணத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு கூறியுள்ளனர். அது விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் பெரியளவில் பாதிக்கப்படப்போவதும் மீன் ஏற்றுமதியே  எனவும் அவர் கூறினார். 

 

https://www.virakesari.lk/article/107460

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த விடயத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் என்பவர் நாட்டினுடைய மீன்பிடித்துறை அமைச்சராக செயற்பட வேண்டும். நாட்டில் எந்தப்பகுதியில் மீனவர்களுக்கு இடர் ஏற்பட்டாலும் அவர் அதனை கவனிக்க வேண்டும். அதனை விடுத்து கப்பல் பிரச்சினை வந்திருப்பதன் காரணமாக வடகிழக்கு மீனவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் வடகிழக்கு மீனவர்களையும் இது பாதிக்கும் வித்தல் அமையலாம். ஏனைய இடங்களில் தொழில் செய்ய முடியாதவர்கள் இங்கு வருவதற்கான நிலை உருவாகும். அதனை அவரே கொண்டுவந்து நிறுத்திவிடுவார். ஆகவே மீன்பிடித்துறை அமைச்சர் தமிழ் மக்களுக்கான அமைச்சர் என சொல்லிக்காட்டுவதும், அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறான ஒரு விடயமாகும்.

இவர் பேசாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிங்கள தேசியக் கூட்டமைப்பாக மாற்றலாமே.

தமிழ் மீனவர்களை கடலுக்குள் இறங்க விடாமல்.. சிங்களக் கடற்படை எத்தனையோ கொடுமைகளை கெடுபிடிகளை செய்த போது வராத வருத்தம்.. சிங்கள மேற்குரை மீனவர்களுக்கு வந்ததும்.. இவர் அதிகம் கவலைப்படுவது ஏன்..??!

ஏலவே... ஹிந்திய ஆழ்கடல் மீன்பிடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மீனவர்களை சிங்கள மீனவர்களையும் கூட்டி வந்து வளத்தை சூறையாட விடுவதற்கு.. இவரும் டக்கியும் போடுற போட்டி இருக்கே.. இதனை தமிழ் மீனவர்களின் நலனைக் காப்பதில் போடலாமே..???!

வல்வை மீனவ சமூகத்தில் ஒரு கைது என்ற போது மூச்சும் விடாதவர்கள்.. சிங்கள மீனவர்களுக்கு பாதிப்பு என்றதும்.. அவர்களை வடக்கிற்கு.. கிழக்கிற்கு நகர்த்துவமா என்று சிங்களத்து ஆலோசனை வழங்குகின்றனர்.

இவர்கள் தானா.. தமிழ் மக்களின் விடுதலைக்கு சர்வதேச அரங்கில் குரல்கொடுக்கப் போகிறார்கள்.

சிங்களப் பொருளாதாரம் வீழுதாம் என்றதும்.. கலங்கி அழும் சுமந்திரன்.. தமிழர்கள் மீது ஒரு இராணுவ ஆக்கிரமிப்பே இருப்பதை தமிழர்கள் சுயமாக ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்ப முடியாமல் அவதிப்படுவது குறித்து அறியாமலா இருக்கிறார். இவர் எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதி ஆனார்..??!

இவரும் டக்கிளசும்.. சிங்களவர்களின் நலனை தேசத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். வாழிடத்துக்கு.. வாழ்வாதாரத்துக்கு ஏன்..  கக்கூசுக்கு வழி இல்லாமல் இருக்கும்.. தமிழ் மக்கள் பற்றி அல்ல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் ஒரு விடயத்தை கசிய விட்டிருக்கிறார். தென் பகுதி மீனவர்கள் வடக்கை நோக்கி இடம் பெயர்ந்து வருவார்கள் என்று.

எனவே தமிழரே இத்தடைக்கு எதிராக போராட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டடும் என முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்

இந்த சலுகை எல்லாம் சீனாவின் துட்டுக்கு முன்னால் ஜுஜுப்பி...என்பது ரணிலுக்கு தெரியாததா என்ன?இந்த சலிகையின் பெருமதியை விட நூறு மட்ங்கு பெருமதியான் தொகையை சீனா கொடுக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.