Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடாமுயற்சி -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடாமுயற்சி -
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஜோடி கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தன.. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன..
ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.. குருவிகள் மனம் பதறிக் கதறின.. கடல் நீரில் விழுந்து, கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன..
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது.. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும்.. இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது..
ஆண் குருவி சொன்னது.. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது.. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது.. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது.. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும்.. முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.. என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது..
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.. எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும்.. நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம்.. மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம்.. இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும்.. நமது முட்டைகள் வெளிப்படும்..
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின.. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன.. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன.. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின.. கொண்டுபோய் தொலைவில் கக்கின.. இப்படியே இரவு பகல் என அந்நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்..
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.. மகா சக்திகள் நிறைந்த மகான் அவர்.. ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார்..
இரண்டு குருவிகள் பறந்து போவதைத்கண்டு சிரித்தபடியே நடந்தார்..
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம்.. குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன.. எதையோ அள்ளின.. மீண்டும் பறந்தன..
இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு.. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்..
உடனே அந்த மகான் கண்களை மூடினார்.. உள்ளுக்குள் அமிழ்ந்தார்.. மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின..
அவர் மனம் உருகியது.. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும், கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும்.. அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.. உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார்.. மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது.. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன.. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன.. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன..
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக..
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்..
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா?
படித்ததில் பிடித்தது,,முக நூலில் இருந்து
இல்லை.. முனிவரின் அருளால்..
ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது. ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின..
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.. அவரை மனம் நெகிழ வைத்தது எது..? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான்.. ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான்.. முனிவராலும் தான்..
முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது.. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது..
ஆகவே.. உழைத்துக் கொண்டேயிருப்போம்..
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எமக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இல்லை  நாம்

எமது  பலத்தை எமது ஒற்றுமையை சிதறடித்து  விட்டு

இந்தியா  தரும்

ஐநா  தரும் என வானத்தை  பார்த்தபடி?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடாமுயற்சி -

 

ஒரு          நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.

பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.

அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.http://www.sirukathaigal.com/சுட்டி-கதைகள்/விடாமுயற்சி/ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடாமுயற்சி

ஒரு விவசாயி வளர்த்து வந்த
வயதான பொதி சுமக்கும்
கழுதை ஒன்று தவறி அவன்
தோட்டத்தில் உள்ள வறண்ட
கிணற்றில்
விழுந்துவிடுகிறது
உள்ளே விழுந்த கழுதை
அலறிக்கொண்டே இருந்தது 😮 அதை எப்படி
கிணற்றிலிருந்து
வெளியேற்றி
காப்பாற்றுவது என்று
அவன் விடிய விடிய
யோசித்தும்🙇 ஒரு யோசனையும்
புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு
பிடிக்ககூடியதாக இருந்தது
.
அந்த கிணறு எப்படியும்
மூடப்படவேண்டிய ஒன்று.
தவிர அது மிகவும் வயதான
கழுதை என்பதால் அதை
காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று
முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை
உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை
மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.
கழுதை நடப்பதை உணர்ந்து
தற்போது மரண பயத்தில்
அலறியது.
ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை
இவர்கள்
தொடர்ந்து மண்ணை அள்ளி
அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம்
கழித்து அதன் அலறல் சத்தம்
அடங்கிவிட்டது .
ஒரு பத்து நிமிடம் மண்ணை
அள்ளி கொட்டியவுடன்
கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க,
அவன் பார்த்த காட்சி அவனை
வியப்பிலாழ்த்தியது.
ஒவ்வொரு முறையும்
மண்ணை கொட்டும்போது,
கழுதை தனது உடலை ஒரு
முறை உதறிவிட்டு,
மண்ணை கீழே தள்ளி,
அந்த
மண்ணின் மீதே நின்று வந்தது
இப்படியே பல அடிகள் அது மேலே
வந்திருந்தது
இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது,
உடலை உதறி உதறி மண்ணை
கீழே தள்ளி தள்ளி அதன் மீது
ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத
இந்த முயற்சியால்
அனைவரும் வியக்கும்
வண்ணம் ஒரு வழியாக
கிணற்றின் விளிம்பிற்கே
வந்துவிட்டது🙇
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி
தோட்டத்திற்குள் சென்று
மறைந்தது🙇😊.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்
இப்படித் தான் நம்மை
படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும்,
மண்ணையும் நம் மீது
கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும் இந்த உலகம் 🌍
ஆனால் நாம் தான்
இந்த கழுதை🐴 😊 போல
தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கொண்டு, அவற்றை உதறித்
தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும்
ஒவ்வொரு கல்லையும்
சாமர்த்தியமாக பிடித்து
படிக்கற்க்களாக்கிக்
கொள்ளவேண்டும்,
எத்தனை பெரிய குழியில்
நீங்கள் விழுந்தாலும்..🙌🙌
நன்றி இல்லாத, நண்பர்கள்👬, குடும்பத்தார் 👪,பணியிடத்தின் முதலாளி💂, இப்படியாக எல்லாராலும் ஒதுக்கபட்டு, உங்களை அழிக்க நினைத்தாலும் 👆👀
“இத்தோடு நம் கதை
முடிந்தது” என்று
கருதாமல் விடாமுயற்சி
என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். “நீங்கள் எதுக்குள்ளே
விழுந்தா என்ன, உங்க மேல
எது விழுந்தா என்ன
எல்லாத்தையும் உதறிட்டு,
நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..😊https://eluthu.com/kavithai/267188.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.