Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் அல் - ஹைடா தேடுதலின் போது பிரபாகரனின் ஆயுதமுகவர் அருணாச்சலம் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அல் - ஹைடா தேடுதலின் போது பிரபாகரனின் ஆயுதமுகவர் அருணாச்சலம் கைது

[05 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

அல்-ஹைடா இயக்கப் பயங்கரவாதிகள் லண்டனில் பாரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராகி வருவதாக அண்மையில் வெளியாகிய தகவல்களைத் தொடர்ந்து லண்டனில் அல்-ஹைடா இயக்கத்தவர்கள் என்றோ ஆதரவாளர்கள் என்றோ சந்தேகிக்கப்பட்டவர்கள் பலர் லண்டன் பொலிஸாரின் விசாரணைக்குள்ளாகியதுடன் சந்தேகத்துக்குரிய நிலையங்களும் சோதனைகளுக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அல்-ஹைடாவுக்கு எதிரான நடவடிக்கைகளை லண்டன் பொலிஸார் ஆரம்பித்தவுடனேயே புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுகளுக்காக பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதி எனக்கருதப்பட்டுவரும் லண்டனில் வசித்து வருபவரான அருணாச்சலம் எனப்படும் பிரமுகரையும் லண்டன் பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி அருணாச்சலம் கடந்த ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகச் செயற்பட்டவர் எனவும் இவ்வாறு சமாதானப் பேச்சுகளுக்கான பிரதிநிதி என்ற போர்வையில் இவர் புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லண்டனில் வசிக்கும் இவர் இந்த ஆயுதக் கொள்வனவுகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு நவீனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்து புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும், இவ்வாறு ஸ்ரீலங்கா கடற்படையினரின் "டோறா" தாக்குதற் படகுகளை அழிப்பதற்காக சக்திவாய்ந்த வெடிகுண்டுப் பொருட்களையும் உபகரணங்களையும் மற்றும் 30 மில்லி மீற்றர் வகைச் சுடுகலன்களையும் இவர் கொள்வனவு செய்தார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விதமாக லண்டன் பொலிஸார் அல்-ஹைடா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை லண்டனில் ஆரம்பித்தவுடனேயே புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகவும் நடவடிக்கைகளைச் சமாந்தரமாகச் செய்துள்ளனர். இதனாலேயே அல்-ஹைடா சந்தேக நபர்கள், நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கையின் போதே லண்டனில் செயற்படும் புலிகள் இயக்கத்தினர் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் நபர்களின் விடுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே அல்-ஹைடா சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் செயற்பாட்டுடன் சேர்த்து புலிகள் இயக்கச் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக மேலும் லண்டன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அல்-ஹைடா மற்றும் புலிகள் இயக்க பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டபோது முதன்முதலாக லண்டன் நகரெங்கும் ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. அல்-ஹைடா சோதனை நடவடிக்கை ஆரம்பித்தவுடனேயே லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தின் வீடு மற்றும் நிலையங்களைச் சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட பத்திரங்கள் கடிதங்களிலிருந்து அருணாசலத்தின் ஆயுதக் கொள்வனவு சம்பந்தப்பட்ட பல தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அருணாச்சலம் ஜெனீவா சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய சந்தர்ப்பங்களிலேயே புலிகள் இயக்க கடற்புலிகள் படையணியின் தாக்குதல் படகுகளுக்கு வேண்டிய அதி சக்திவாய்ந்த உயர் குதிரை வலுக்கொண்ட படகு இயந்திரங்களை விலைக்கு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அல்-ஹைடா சந்தேக நபர்களைத் தேடுவது போலவே புலிகள் இயக்க சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் லண்டன் பொலிஸார் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருணாச்சலத்தின் அனைத்துத் தொடர்புகள் பற்றியும் தீவிர மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவயின: 02.07.2007

http://www.thinakkural.com/news/2007/7/5/s...s_page30512.htm

  • கருத்துக்கள உறவுகள்

உந்தத் திவயினக்காறர் சிங்கள ஆக்கள முட்டாள்களாக்கிறதிலேயே மிச்சம் கவனமாயிருக்கிறாங்கள். அல்கையிடா எல்ரிரி எண்டு அடிக்கடி ரெண்டையும் சேர்த்துச் சேர்த்துச் சிங்களத்தில எழுதி ஏதோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டால் சர்வதேசமும் அதை வாசிச்சு ஆஹா ஓஹோ எண்டு ஏதோ எல்ரிரிக்கும் அலகைடாவுக்கும் தொடர்பிருக்குதாக்கும் எண்டு நினைக்குமெண்டு நிகை;கிறாங்கள் போல. அவல நினைச்சி உரலை இடிக்கிறமாதிரி ஏதோ தங்களுக்குத்தெரிஞ்ச எல்லா வித்தையையும் காட்டினம். கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு. இப்ப வருசக்கணக்காப் போயிற்றுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.