Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன

July 14, 2021

CTB-Bus.jpg?resize=650%2C433

 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக  பேருந்து  திருப்பி அனுப்பப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு பேருந்து ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்தது. குறித்த பேருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உள்படுத்தியதில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.

அதனால் அத்தியாவசிய தேவைகளின்றிய பயணிகளை ஏற்றிச் சென்றதாக பேருந்து ஈரப்பெரியகுளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2021/163380

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து மாகாணங்களைக் கடந்து யாழ்ப்பாணம் வரும் பேரூந்துகளில் கொண்டுவரப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு எப்படியான அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் வழங்கப்படுகிறது....????🤔 

  • கருத்துக்கள உறவுகள்

தாடியர் மாஸ்கும் போடாமல்.. கிளிநொச்சி கொழும்பு என்று சுத்தி திரியுறார்.. அவரோட ஒரு கூட்டம்.. அதுவும் மாஸ் போடல்ல. இதெல்லாம் எந்த சட்டத்தால் ஆளப்படுகின்றனவோ..?! 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.