Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் :  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் :  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா

அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா , இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது  பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

jeyshankar.JPG

மேலும் பாகிஸ்தானுக்கான அறிவிப்பின் போது  பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பதே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முக்கிய நோக்கமாகும். எனவே பயங்கரவாத நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்றும் நினைவு கூர்ந்தார்.

பிராந்தியத்தின் மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பிளவு குழுக்கள் மத்திய ஆசியாவில் பரவக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் அண்டை நாடுகளுக்கு (ஈரான் மற்றும் மத்திய ஆசியா) பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்சிஓ மற்றும் அதன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (ராட்ஸ்) உடனான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இந்தியா மிகுந்த அக்கறை காட்டியுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் மற்றும் மாஸ்கோவிற்கான தனது பயணங்களைத் தொடர்ந்து, மத்திய ஆசியாவிற்கான பயணத்தில்  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஈடுப்பட்டுள்ளார். தலிபான் எழுச்சிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/109587

 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 19:32, கிருபன் said:

பிராந்தியத்தின் மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பிளவு குழுக்கள் மத்திய ஆசியாவில் பரவக்கூடும்

அந்த பிராந்தியம் முழுக்க முழுக்க மதசார்பு தன்மையுடையது,,,,,பிறகு என்ன மதச்சார்பற்ற தன்மை என்ன ஜெய்சங்கர் கதை அளக்கிறார்

அமெரிக்கன் பேசாமல் விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் சீனாக்காரனோட மத்திய ஆசியா நாடுகள் பிரச்சனை படட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்போம் என்று தான் ....சீனாக்காரன் ஆப்காணித்தானுக்கு உதவி செய்ய அதை பார்த்த தலிபான் சீனாக்காரனுக்கு குண்டு வைக்க ......சீனாக்காரன் ஆப்கானிஸ்தானுக்கு விமானதாக்குதல் நடத்த.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அந்த பிராந்தியம் முழுக்க முழுக்க மதசார்பு தன்மையுடையது,,,,,பிறகு என்ன மதச்சார்பற்ற தன்மை என்ன ஜெய்சங்கர் கதை அளக்கிறார்

அமெரிக்கன் பேசாமல் விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் சீனாக்காரனோட மத்திய ஆசியா நாடுகள் பிரச்சனை படட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்போம் என்று தான் ....சீனாக்காரன் ஆப்காணித்தானுக்கு உதவி செய்ய அதை பார்த்த தலிபான் சீனாக்காரனுக்கு குண்டு வைக்க ......சீனாக்காரன் ஆப்கானிஸ்தானுக்கு விமானதாக்குதல் நடத்த.....

மரபு ரீதியான ராணுவமாக இல்லாமல், கொரில்லா படையணியாக இருந்திருந்தால், புலிகளிடம் கூட, இந்தியா இப்படி கோரிக்கைகளை தான் வைத்துக் கொண்டிருக்கும்.

வன்னி துடைத்தெடுக்கப்பட்டு, வவுனியாவா, யாழ்பாணமா அடுத்த புலிகள் இலக்கு என்று சிங்களம் தடுமாறியபோது, இந்தியாவின் கோரிக்கையினை புலிகள் கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால், இன்று கதையே வேற...

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.