Jump to content

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது.

முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒருசில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது மற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டுவிதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது. ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்டகால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும். ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய  ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக்காவலில் நீண்டகாலம் வைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்டகாலம் ஒருவரை தடுப்புக்காவில் வைத்துக்கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கவேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சட்டமா அதிபருக்கு இனி வேலையில்லை. இதை பரிந்துரைக்க நந்தன எந்த சட்டக்கல்லூரியில் படித்தவராக்கும்? நந்தன என்றால்; பயங்கரவாதம்,  இனவழிப்பு என்று இலங்கையில் பொருள் கூறலாம். அவர் எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆலோசனைக்குழு, இவர் தீட்டியதை தனது பரிந்துரை என்று அறிவிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்போ சட்டமா அதிபருக்கு இனி வேலையில்லை. இதை பரிந்துரைக்க நந்தன எந்த சட்டக்கல்லூரியில் படித்தவராக்கும்? நந்தன என்றால்; பயங்கரவாதம்,  இனவழிப்பு என்று இலங்கையில் பொருள் கூறலாம். அவர் எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆலோசனைக்குழு, இவர் தீட்டியதை தனது பரிந்துரை என்று அறிவிக்கும்.  

இலங்கையில் சட்ட மா அதிபருக்கு எப்போதுமே வேலை இருந்ததில்லை.

வெறும் ரப்பர் ஸ்ராம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவி, சீருடை, தலையாட்டல்அதோடு அவர்களின் வேலை முடிந்தது. பாவம் நந்தன எல்லா திணைக்களங்களின்  பொறுப்புகளையும் சுமந்து கொண்டு தவிக்கிறார். பதவி இறங்கும் போது ஆதாரம், தடயம் எல்லாவற்றையும் வழித்து, துடைத்துக்கொண்டு வெளியேறினால் இவர்  செய்த ஊழலுக்கு எதிராக யாரும் சட்டநடவடிக்கை எடுக்க முடியாதே.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.