Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈ.பி.டி.பியினருக்கு, பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பியினருக்கு, பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும்!

ஜ செவ்வாய்கிழமைஇ 10 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.டி.பி. யின் அலுவலகங்களில் இருந்து வரும் டக்ளசின் தோழர்கள் கடந்த ஐந்து நாட்களாக பச்சைத் தண்ணியுடனும் வெறும் பருப்புக் கறியுடனும் சோறுசாப்பிட்டு வருகின்றனர். என்னப் பிரச்சினை என்று கேட்டால்! கடைத் தெருவுக்கு வந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பனாகொடை புகழ் கருணாவின் நபர்கள் மிரட்டல்கள் விடுத்திருக்கின்றராம். இதனால்தான் பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும் சாப்பிடவேண்டியுள்ளது. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இனிய பாரதி (இப்போது புளித்த பாரதி) ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை தலைகீழாக தொங்கவிட்டுக்கொண்டு அலுவலகம் முன்பாக மோட்டார் சைக்கிளில் அங்குமிங்குமாக பல தடவைகள் அலைந்துள்ளார். காவலுக்கு நின்ற காவல்துறையினரும் எதுவும் செய்யாது துட்டனைக் கண்டவர்கள் போல் தூர விலகிநின்றனராம். இதனை பார்த்த தோழரின் நபர்கள் கடந்த ஐந்து நாட்களாக மூன்று நேரம் பருப்பும் அரிசியும்தான் உணவு என்ற நிலையை அடைந்துள்ளனர். டக்ளஸ் தோழர் மந்திரியாயிருந்தும் எந்தப் பயனுமில்லை. காவல்துறையினரின் தயவில்தான் இந்தப் பருப்பும் அரிசியும் கிடைக்கிறது. மந்திரியும் பனாகொடை கருணாவும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றால் அடுத்த ஒரு கிழமைக்குள் ஈ.பி.டி.பி. நபர்கள் மட்டக்களப்பு அம்பாறையிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்கள். சிங்கள அரசைப் பொறுத்தவரை டக்கிளஸ் முக்கியமானவர். இராணுவத்தைப் பொறுத்தவரை பனாகொடை கருணா முக்கியமானவர். அதேவேளை கருணாவை விட இப்போது பிள்ளையான் முக்கியமானவராகத் திகழ்கிறார். சமரசத்துக்கு டக்கிளஸ் தயார். கருணாவுக்கு சொந்தப் புத்தி கிடையாது. பனாகொடையிலிருந்து கொண்டு தொலைபேசியில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் சொல்வதைத்தான் இவர் கேட்டாகவேண்டும் மிரட்டினோம் டக்ளஸ் நபர்கள் மிரண்டுவிட்டார்கள். இந்த மிரட்டலைத் தக்கவைத்துக்கொண்டால் மட்டக்களப்பு அம்பாறை எங்கள் காலடியில். பங்கு போட யாருமில்லை என்று பாரதி, தீலிபன், மொட்டைமாமா போன்றவர்கள் உறுதியான நம்பிக்கையாகச் சொல்லும் பொழுது பனாகொடை கருணா மறுப்புச் சொல்ல முடியாது. எனவே சமரசம் இயலாத காரியம் என்பது புலனாய்வு முடிவு. மந்திரி டக்ளசுக்கு ஓர் ஆறுதலான செய்தி சொல்லப்பட்டுள்ளது அரசத்தரப்பினால். அது என்னவென்றால் ஒரு கிழமை பொறுத்துக்கொள்ளுங்கள் அனைத்தையும் சரி செய்கிறோம் என்பதுதான் அந்தச் செய்தி! அது என்ன ஒரு வாரம் தவனை என்பதனை கூர்ந்து கவனித்தால், பனாகொடையிலிருந்து கிழக்கின் மீட்பர் கருணா ஐரோப்பா புறப்படப் போகிறார். அவர் சென்றதும் பிள்ளையானது கட்டுப்பாட்டில் ரி.எம்.வி.பி. வந்துவிடும். அப்போது சுலபமாக இரண்டு பிரிவினரையும் சமரசம் செய்து விடலாம் என்பது புலனாய்வு துறைகளின் திட்டங்களாக இப்போதைக்குச் சொல்லப்பட்டுள்ளன. கருணா கடந்த நான்கு மாதங்களாகத் தப்பி ஓட பெரு முயற்சி செய்து வருகிறார். ஆனால் முடியவில்லை. அரசாங்கமும் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்கியும் முடியாமல் இருக்கிறது. லண்டனிலிருந்து புங்குடி தீவு கிருஸ்ணன் அடிக்கடி தொலைபேசியில், ?நீங்கள் நேரடியாக லண்டனில் வந்து இறங்கிவிடாதேயுங்கோ! யு.என். காரங்கள் சொல்லிக்கொடுத்து உள்ள பிடிச்சுப் போட்டுவிடுவாங்கள்? என்று இலவச ஆலோசனை வழங்க கருணாவுக்கு கடுப்பாகிவிட்டதாம். நான் மாறுவேடத்தில் வந்தாலும் இவன் காட்டிக்கொடுத்து விடுவான் போல இருக்கிறது. என்று புலம்பிக்கொண்டு இருக்கிறாராம் கருணா! எது எப்படியோ. கருணா தப்பி ஓடுவதில் பெரும் நின்மதியடைபவர் டக்கிளஸ் தோழர், விடுபடுபவர்கள் கிழக்குத் தமிழர்கள, லாபம் கிடைப்பது இலங்கை அரசுக்கு.

குறிப்பு:-கடந்த வாரம் மட்டக்களப்புக்குச் சென்ற புளொட் முக்கியஸ்தரான பீற்றர் என்பவர், கருணாவின் நபர்களால் வழி மறிக்கப்பட்டு கிழக்கில் உங்களுக்கு வேலையில்லை, திரும்பிச் சென்று விடுங்கள் என்று மிரட்டியதைத் தொடர்ந்து அவர் திரும்பிச் சென்றுவிட்டார். வெளியில் தெரியவந்தால் பலவீனமாகத் தெரியும் என்பதால், இச்சம்பவம் பெரிதுபடுத்தப்படாமல் மறைத்து மறந்துவிட்டனர் சம்பந்தப்பட்டவர்கள்.

இந்த செய்தி ஈ.என்.டி.எல்.எவ் இணையத்தில் வெளியானது வாசகர்கள் அறிய சில விடயங்கள் இதில் இருப்பதால் இதனை இங்கு இணைக்கிறோம்.

http://www.nitharsanam.com/?art=23673

என்ன பச்சைத் தண்ணியும், சோறும், பருப்புக்கறியும் என்றால் அவ்வளவு இளக்காரமாக இருக்கிதோ? எத்தனை ஆயிரம் சனம் வெறும் சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கிதுகள். உந்த கூலிகளிற்கு இதுவே ரொம்ப ஓவர் ஆக தெரிகின்றது. உதுகளுக்கு வெறும் சோற்றினுள் சிறிதளவு உப்பைத் தூவி கஞ்சியாக கொடுத்தாலே போதும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.