Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில்  மிக மிக இரகசியமாக காணாமல் போனவர்கள் தொடர்பான  அலுவலகம் (OMP) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

IMG20210819141312.jpg

குறித்த அலுவலகம்  கடந்த 12.08.2021 அன்று காலை  அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி  எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக  பயிற்சி  நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான  குறித்த (OMP)  அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார்  நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில்  வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG20210819141333.jpg

 இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும்  தமக்கு தெரியாது என்றும்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது  என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில்  OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது  என்றும் அவர்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம்  தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் காணாமல் போகக்கூடியவாறு அமைத்துள்ளர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

விரைவில் காணாமல் போகக்கூடியவாறு அமைத்துள்ளர்கள்...

காணாமல் போனாலும் இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவாறு அமைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கும் தெரியாத  போலியான அலுவலகம், போலியான உறவுகள், அறிக்கைகள், எல்லா தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து தன்னை புனிதனாக நிறுவ முயற்சியோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம்  தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலக தலைமை காரியாலயம் அப்படிக் கோரவில்லை எனத் தெரிகிறது. அப்படியானால் இது கவுண்டமணி செந்தில் வாழைப்பழக் காமெடியாக இருக்குமோ?😂🤣

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.