Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு கோரிக்கை

1629522223-1629511556-black_l.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்ற கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.

அத்துடன் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தங்கள் வீடுகளிலிருந்து ஜெபமாலை ஓதி பிரார்த்தனை செய்யுமாறும் கத்தோலிக்க திருச்சபை வேண்டியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=148933

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால்

எடுத்ததற்கெல்லாம் புலிகளை அழித்த எமக்கு இது ஒன்றும் பெரிதில்லை என்று வீறாப்பு கதைப்பவர்களின் வீரம் இவ்வளவுதான் ஆயரே! வெளிநாட்டுப்படைகளை அழையுங்கள், அவர்கள்தான் வெற்றியின் நாயகர்கள். அவர்களுக்கும் கொரோனா பயம் என்றாலும் கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்தை முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும்.. யூலை கலவரத்தின் போதும்.. இன்னும் பல படுகொலைகள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த போதும்.. ஏன் நவாலி தேவாலயம் மீது குண்டு வீசி ஒரே நாளில் 150 தமிழ் அப்பாவி பொதுமக்களை கொன்ற போதும்.. ஏன் கோர முடியவில்லை. அப்ப எல்லாம்.. அந்த மனித இனப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருந்தவர் தான் இந்த கொழும்பு.. மட்டக்களப்பு ஆயர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு நடை பெறவில்லை சிறிலங்காவில் ....சிறுபான்மை மதத்தினரின் மனித உரிமைகள் மீறப்படுகின்றது,,சிறிலங்காவில் என்று பிரச்சாரம் செய்யும் படி இந்த ஆயர்களை சர்வதேச கொள்கை வகுப்பாளர்கள் சொல்லியிருக்கலாம்...அன்று குரல் கொடுக்காதவர் இன்று குரல் கொடுப்பதன் காரணமாக இருக்காலம்...

இனப்பிரச்சனை இல்லை  ஆகவே தீர்வு தேவையில்லை என்று அந்த பைலை மூடி தூக்கியெறிந்து விட்டு .....மத சிறுபான்மையினருக்கு மனித உரிமை மீறப்படுகிறது என புது பைலை திறந்து இன்னும் 50 வருடம்  அரசியல் செய்வார்கள் சர்வதேசம்...

அது தான் சிறிலங்கா அரசு ஆயருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் இவர் தன் குரலை உயர்த்தி இருந்தால், இன்று இவரது குரலுக்கு மதிப்பளிக்கப்பட்டு இருக்கும். இப்போ  இவரது இரட்டை வேடம் கலைந்தது. இவரிடம் யாராவது, ஏன் தமிழர் அழிக்கப்படும்போது நீங்கள் குரல் எழுப்பவில்லை? என்று கேட்டால் என்ன சொல்வார் இந்த ஆயர்? அது வேறு நாட்டில் நடந்தது என்றோ, எனக்கு தெரியாது என்றோ சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பேராயரின் வேண்டுகோளை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன், படுகாயங்களும் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை எனக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றைக் அனுப்பியிருந்தது.
E9044E86-49A2-4C4E-AA25-1CD1CD9648A5.jpe

DA6BD85A-9835-4F43-B3B7-A20A262BB9BC.jpe

639013A0-BD51-4710-A647-644C48B053C8.jpe

2C07FB0E-CE07-45E9-A82C-246A18B2CA77.jpe

20ED16A4-501D-4D3C-81EA-0950387046FA.jpeஅதனடிப்படையில், தாக்குதலுக்குக் காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த தேவாலயத்திலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்படவில்லை.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்தில் கூட கறுப்புக்கொடியைக் காணமுடியவில்லை.

 

https://www.meenagam.com/பேராயரின்-வேண்டுகோளை-புற/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.