Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Tamilmirror Online || நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்

உணவுப் பற்றாக்குறை காரணமாக அவசரகால நிலை என்று பிரெஞ்சுச் செய்தி ஒன்று சொல்கிறது.

https://www.lemonde.fr/international/article/2021/08/31/le-sri-lanka-qui-traverse-une-grave-crise-economique-declare-l-etat-d-urgence-alimentaire_6092852_3210.html

வங்கிகள் உணவு இறக்குமதிக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் உணவுப் பதுக்கல் விலையேற்றம் ஆகியவற்றிற்கெதிராக இருக்கும் உணவினைப் பகிர்ந்தளிக்கலாம்.

நான் நினைக்கிறேன், பெற்றோல் கொள்வனவுக்காக நடந்த பேச்சுவார்த்தையும் சரிவரவில்லை என்று. பெற்றோலியத் தட்டுப்பாடு நுகர்வுப் பொருட்கள் அத்தனையிலும் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது அவசரகால விதிமுறையை பிரகடனப்படுத்த இயலாது - .சுமந்திரன்

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள என்ற தோரணையில் தற்போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 

இதனை கடுமையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

 

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அவசரகால நிலைமை நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நாட்டுக்கு ஆபத்து காணப்பட்டால் , பாதுகாப்பிற்கு ஆபத்து காணப்பட்டால் அதனோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கே இந்த சட்டத்தை பாவிக்க முடியும்.

இதனால் தான் பொது மக்கள் பொது சுகாதார அவசரகால நிலைமைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தோம்.என்றார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது அவசரகால விதிமுறையை பிரகடனப்படுத்த இயலாது - .சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பட்டினி போட்டு சாக விடாவிட்டால் சரி.

ஊர்ப்பக்கம் நிலமை இறுகி செல்கின்றது.

வியாபாரிகள் பொருட்களை பதுக்குவது ஒருபுறம், திருட்டுதனமாக சனங்கள் ஒன்றுகூடுவது மறுபுறம், கொரனா தொற்று இவற்றுக்கு இடையால் என்று பல அலைகள் அடிக்கின்றன.

கடைசியில் உணவு பொருட்களை நாம் இங்கு இருந்துதான் பாசலில் அனுப்ப வேண்டி வரப்போகுதோ தெரியவில்லை.

வெளிநாட்டு உறவுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு தனி கப்பலை ஒழுங்கு செய்து அங்குள்ள எமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்பிவிடாலாம். இப்படியான ஒரு முயற்சி 2008/9 காலத்தில் முயற்சி செய்யப்பட்டது.

காலம் தாழ்த்தாமல் இப்போதே சம்மந்தப்பட்டவர்கள் மாற்று வழிகளை யோசிப்பது நல்லது கடைசி நேரம் வரை காத்து நிற்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் இறைமைக்கு இழுக்கு என்று அப்பவும் வம்பு பண்ணும் போக்கத்த அரசு. 2009 காலத்தில் வந்த உணவை இறக்கவிடாமல் தடுத்து வைத்திருந்தது இன்னும் நினைவில் இருக்கு. இப்போ சிங்களவரும் அதே படகில் பயணிப்பதால் நிலை மாறலாம். தன்வாயாலேயே புலம்பெயர் தமிழரை இரஞ்சும் காலம் வெகு சீக்கிரம் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மக்களை பட்டினி போட்டு சாக விடாவிட்டால் சரி.

ஊர்ப்பக்கம் நிலமை இறுகி செல்கின்றது.

வியாபாரிகள் பொருட்களை பதுக்குவது ஒருபுறம், திருட்டுதனமாக சனங்கள் ஒன்றுகூடுவது மறுபுறம், கொரனா தொற்று இவற்றுக்கு இடையால் என்று பல அலைகள் அடிக்கின்றன.

கடைசியில் உணவு பொருட்களை நாம் இங்கு இருந்துதான் பாசலில் அனுப்ப வேண்டி வரப்போகுதோ தெரியவில்லை.

வெளிநாட்டு உறவுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு தனி கப்பலை ஒழுங்கு செய்து அங்குள்ள எமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்பிவிடாலாம். இப்படியான ஒரு முயற்சி 2008/9 காலத்தில் முயற்சி செய்யப்பட்டது.

காலம் தாழ்த்தாமல் இப்போதே சம்மந்தப்பட்டவர்கள் மாற்று வழிகளை யோசிப்பது நல்லது கடைசி நேரம் வரை காத்து நிற்காமல்.

அரசு எங்களுக்கு அனுப்புவதை பறிச்சு அங்கால குடுத்தால் என்ன செய்வது? ஐ.நா போன்ற அமைப்புகள் பொறுப்பெடுத்து செய்வார்களா?

இதுவே வேறு நாடாக இருந்திருந்தால் தோல்வியடைந்த குடும்ப அரசியலுக்கு எதிராகப் புரட்சி வெடித்திருக்கும். மக்கள் எதையும் பொறுப்பார்கள் ஆனால் உணவுப் பஞ்சம் வரும்போது பொறுமை காக்க முடியாது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலேயொழிய பொருளாதார மாற்றம் வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்குடும்பத்தின் கோரத்தாண்டவம் தெரிந்தபடியால் சனம் பயத்தில் பேசாமல் இருக்குது. குழம்பினால் இல்லாமல் ஆக்கப்படுவோம் என்பது சகலரும் அறிந்ததே. கொரோனாதான் இவர்களின்  கொட்டத்தை அடக்கவேண்டும். எனக்கென்னவோ மஹிந்தவின் ஆட்டம் முடியும் நேரம் நெருங்குகிறது என்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
30 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால விதிமுறைகளை அறிவித்துள்ளது அரசு.

அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

இதன்படி, செட்பம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு உத்தரவாத விலை

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் தட்டுப்பாடு

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

வர்த்தக நிலையங்களில் மக்கள் தொடர்ச்சியாக நீண்ட வரிசைகளில் இருந்தவாறு கடந்த காலங்களில் பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஜுன் மாத முதல் வாரத்தில் 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சீனி, தற்போது திடீரென 220 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர் பகுதியில் 220 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டாலும், பின்தங்கிய பிரதேசங்களில் 240 ரூபாவிற்கே சீனி விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், 150 ரூபாவிற்கு ஜுன் மாதம் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பு, தற்போது 250 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, பால் மா, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடந்த ஓரிரு மாதங்களில் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சீனி மொத்த வியாபாரிகள், சீனிகளை பதுக்கியிருந்தமையும், கடந்த ஓரிரு தினங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 10,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதியினால் இந்த அவசர கால விதிமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

எதிர்கட்சிகள் அழுத்தம்

இலங்கை
 
படக்குறிப்பு,

ரஞ்ஜித் மத்துமபண்டார, பொதுச் செயலாளர் - ஐக்கிய மக்கள் சக்தி

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால விதிமுறை நிலைமையை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகரும் என்ற உள்நோக்கம் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால், அரசாங்கம் வருமானத்தை இழந்துள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புக்களும் குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

இலங்கை
 
படக்குறிப்பு,

எம்.ஏ. சுமந்திரன்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே, இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால நிலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, விசேட அறிவிப்பொன்றின் ஊடாக, சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார நிலைiமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டமொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுகாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டம் உருவாக்குவதற்கான தனிநபர் பிரேரணையொன்றை தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவம் அவர் குறிப்பிடுகின்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இவ்வாறான நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற போர்வையிலேயே, இந்த அவசர கால நிலைமையை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதன் ஊடாக, நாட்டில் இனி முழுமையாக ஜனாதிபதியின் ஆட்சியே நிலவும் என்பதே, இதிலுள்ள அபாயம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி, தான் விரும்பிய அவசரகால விதிமுறை சட்டங்களை வகுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால நிலைமை அறிவிப்பின் ஊடாக, சட்டங்களை ஜனாதிபதி நிறைவேற்றும் அதிகாரமும் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58407988

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.