Jump to content

ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை

November 2, 2021

2094E8AA 31F8 472D A817 45AF98407748 696x522 1 ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை


 

ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச தலைவரான கோட்டாகய  ராஜபக்சா  பயணம் சென்றிருந்த நிலையில், அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள், ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(பிரித்தானியா) ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதில்,

“தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட் நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த்து இன்று 01-11-2021 திங்கட்கிழமை தாய் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் இயங்கும் அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடன்ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அணிதிரண்டு பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி இருந்தார்கள்.

இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக மாறிய காலத்திலிருந்து சிறிலங்கா பேரினவாத அரசு தமிழர் தாயகம் மீது இனவழிப்பை நடாத்தி வருகின்றது.

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் போது லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்பிற்கு அன்று மூல காரணமாய் இருந்தவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இதே கோத்தபாயவாகும்.

எமது தாயகப் பகுதியில் போர் உச்சம் பெற்ற வேளையில் ஐ.நா மன்றமும் சர்வதேசமும் போரை நிறுத்தி தமிழ் மக்களை காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பிலிருந்து தவறியதன் காரணமாகவே மிகப் பெரும் தமிழ் இனவழிப்பை சிறிலங்கா பேரினவாத அரசு அரங்கேற்றியது.

தமிழீழ மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கான நீதி வேண்டி தமிழர் தாயகத்திலும் உலகெங்கிலும் தொடர் அமைதிவழிப் போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தி வருகின்றபோது, Scotland Glasgow வில் நடைபெறும் Cop 26 சுற்றுச் சூழல் மாகா நாட்டிற்கு தமிழீழ மக்களை கொன்றுகுவித்த போர்வெறியன் கோத்தபாய அழைக்கப்பட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாண்பு மிகு பேராளர்கள் கலந்கொண்டு மானிடத்தினதும் அனைத்து உயிர்களுக்குமான புவி வாழ்வின் இருப்பிற்கான சுற்றுச் சூழல் மகாநாட்டில்  மனிதம் அழித்த கொடுங்கோலன் இணைந்திருப்பதை இனம் காட்டும் அரசியல் சனனாயக எதிர்ப்பின் வெளிப்பாடே உலகத் தமிழ் மக்களின் ஆதரவோடு இன்று நடைபெற்ற அறவழி எதிர்ப்புப் போராட்டமாகும்.

அனைத்துத் தேசிய இனங்களுக்குமான சமத்துவமான மாண்பையும் மனித உரிமைகளையும் தாங்கி நிற்கும் ஐ.நா மன்றமும் இதில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளும் நீதியின் வழி நின்று தமிழ் இனவழிப்பாளர்களை கண்டிப்பது மட்டுமன்றி எமது உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு வேண்டுகின்றோம்.

அன்பிற்குரிய எமது மக்களே அரசியற் செயற்பாட்டாளர்களே!
எமது தாயக விடுதலைக்காக எமது அழைப்பை ஏற்று இன்றைய போராட்டத்தில் உங்களது அன்றாட வாழ்வின் சுமைகளைத் தாங்கி, நீங்கள் அனைவரும் தேசியக் கடமையை உச்சமாக ஆற்றி இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்துள்ளீர்கள். எம்மோடு உணர்வால் ஒன்று பட்டு நின்று போராட்டத்திற்கு உரமூட்டிய உலகத் தமிழ் உறவுகளது கரங்களையும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தோழமையோடு பற்றிக் கொள்கின்றோம்.

மேலும் இப்போராட்டத்திற்கான பரப்புரைத் தளத்தை தாயகம் முதல் தமிழகம், கனடா, அவுஸ்ரெலியா, ஐரோப்பா வரை எடுத்துச் சென்று தமிழீழ வரலாற்றுக் கடமையை செவ்வனே செய்த ஊடக நிறுவனங்களுக்கும் எமது நன்றிகள். எமது தேச விடுதலையை உலக நாடுகளும் அதன் மக்களும் அங்கீகரிக்கும் திசை வழியில் எம்மோடு தோழமையோடு இணைந்து எமக்காக குரல் கொடுத்துவரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,கட்சி சார் பிரமுகர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.

எமது தாயக தேச மீட்புப் போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான நீதிக்காகவும் தமிழீழ தாயக விடுதலைக்காகவும் நாம் தொடர்ந்து போராடுவோம்” என்றுள்ளது.
https://www.ilakku.org/struggle-against-gotabhaya-in-scotland/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.