Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரிமைகளை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம் : அரசிற்கு ஆதரவளிக்கும் மு.கா. உறுப்பினர்களின் காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைகளை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம் : அரசிற்கு ஆதரவளிக்கும் மு.கா. உறுப்பினர்களின் காரணம்

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் கூட, அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக இராஜதந்திர ரீதியில் தீர்வு காணவே முயற்சிக்கின்றோம். கடந்த கால பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

வெறுமனே அரசாங்கத்தை வெளியில் இருந்து விமர்சிப்பதால் மட்டும் சமூகத்தை பாதுகாத்துவிட முடியாது என அரசாங்கத்துக்கு தெரிவித்துவரும் ஆதரவுக்கான காரணத்தை சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நியாயப்படுத்தியதுடன், தாம் அரசாங்கத்தை ஆதரிக்க ஐந்து சதமேனும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினர்.

Muslims.JPG

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகம் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு எமது சமூகம் முகம்கொடுத்து வருகின்றது, இந்நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ற வகையில் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் பேசி தீர்த்துவைப்பதா அல்லது இந்த பிரச்சினையை பேசி முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்லியம் அடைவதா என்ற இரண்டு நிலைமையில் இருக்கின்றோம். எமது மூத்த முஸ்லிம் அரச தலைவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை அவர்கள் ஆளும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்த்த வரலாறு இருக்கின்றது.

அதேபோன்றுதான் தற்காலத்தில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக நாங்கள் அனைவரும்  குரல்கொடுத்தோம். 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்துக்கு வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரச தலைவர்களுடன் கலந்துரையாடி எமது ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பொதுவான பொறிமுறை அமைக்கவேண்டும் என தெரிவித்து முஸ்லிம் காஸ்கிரஸ் உறுப்பினர் 4பேரும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 3பேரும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோம். 

அதேபோன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட பிரச்சினை வந்தபோது அதுதொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடி அதில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருநாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணியின் தலைவராக ஞானசார தேரரை நியமித்ததன் மூலம் எம்மை பெரும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தது. என்றாலும் அமைச்சர் அலிசப்ரியுடன் நாங்கள் இதுதொடர்பாக கலந்துரையாடினோம். அதன் மூலம் அமைச்சர் ஜனாதிபதி, பிரதமருடன் சாமர்த்தியமான முறையில் பேசி, செயலணியின் அதிகாரங்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன.

 அதேபோன்று மாடறுப்பு தடை தொடர்பாகவும் நாங்கள் சமூக ரீதியில் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடி, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அதனால் இதற்கு நல்ல முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  எமது காணிகள் தொடர்பான தீர்மானம் அந்த ஆணைக்குழுவே எடுக்கப்போகின்றது. அரசாங்கத்தின் தீர்மானங்களுடன் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமே எமது பூர்விக இடங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்துவந்தால் இந்த பிரச்சினைகளை அரசாங்கத்துடன் யார் கதைப்பது? என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கவேண்டும் என்றார்.

இதேவேளை, நஸீர் அஹமட் கூறுகையில்,

நாங்கள் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த நாளில் இருந்து எங்களை விமர்சிக்க மாத்திரமே ஒரு சில கூட்டம் செயற்பட்டுக்கொண்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை எவ்வாறு நாம் வெற்றிகொள்ள வேண்டும், அல்லது எவ்வாறு ஜனநாயக ரீதியிலே ராஜதந்திரமாக காய்நகர்த வேண்டும் என்பதை பற்றி புரிந்துகொள்ளாமல், நாட்டின் நிலைமைகளை புரிந்துகொள்ளாமல்  வெறுமனே வெளியில் இருந்து பேசிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவொரு பயனையும் அடைந்துவிட முடியாது.

சஹ்ரானின் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக முஸ்லிம் சமூகத்திடம் திட்டவட்டமான பாரிய பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் நல்லாட்சி காலத்தில் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சஹ்ரானை பற்றி நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட நேரத்திலும் நல்லாட்சி அரசாங்கத்தில் யாருமே அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அதன் விளைவுகளே இவை அனைத்தும் என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதால் நாம் எதனையும் சாதிக்க முடியாது. நாட்டிலே சிறுபான்மை சமூகமாக உள்ள நாம் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் கைகளை நகர்த்தி எமது விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நாட்டுக்கு பங்களிப்பு செலுத்தும் சமூகமாக, முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக இருந்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் எமது கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. எந்த இலாபத்திற்காகவும் இந்த அரசாங்கத்துடன் இணையவில்லை, இவர்களிடம் இருந்து ஐந்து சதமேனும் தேவையில்லை, எமது சமூகத்திற்காக பாராளுமன்ற பதவியை தூக்கி வீசவும் நாம் தயாராக உள்ளோம். ஆனால் எந்த இலாபமும் இல்லாது எந்த செயற்பாட்டையும் செய்யவில்லை, இதில் இராஜதந்திர நகர்வுகளை நாம் கையாண்டு வருகின்றோம்.

நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற காரணத்தினால் தான், எமது சமூகம் சார்ந்த பல விடயங்களை பேசக்கூடியவர்களாக உள்ளோம். அரசாங்கத்தை தூற்றுவதால் மாத்திரம் எதனையும் சாதிக்க முடியாது. ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட வேளையில் எமது இரத்தம் கொதித்தது, இன்றும் அதனை எண்ணி நாம் வேதனையடைகின்றோம். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தான் ஓட்டமாவடியில் முதல் முதலாக இரண்டு ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அப்போதும் ரணில் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தும் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். எனினும் இன்றைய ஆட்சியில் இடம்பெறும் செயற்பாடுகளை எவ்வாறு அடக்குவது என மிகக் கவனமாக் கையாண்டு வருகின்றோம்.

அதேபோல் மாடறுப்பு விடயத்திலும், ஏனைய முஸ்லிம் பிரச்சினைகளில் தீர்வு காண கவனமாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். காணிப்பிரச்சினைகள் பல உள்ளன, அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசங்கத்துடன் இணைந்து எமது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம், அதில் நாம் வெற்றி காண்போம் என்றார். 

 

 

https://www.virakesari.lk/article/117557

  • கருத்துக்கள உறவுகள்

ஆக கல்முனை நகரசபை விடயத்தில் மட்டும் வெற்றி....வேறை என்ன உங்களுக்கு கிடைத்தது...அடகினது அற்ப சலுகை...அது காலப்போக்கில் கிடைத்திருக்கும்...மாடுவெட்டத்தடை...முட்டாக்குப்போடத்தடை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஆக கல்முனை நகரசபை விடயத்தில் மட்டும் வெற்றி....வேறை என்ன உங்களுக்கு கிடைத்தது...அடகினது அற்ப சலுகை...அது காலப்போக்கில் கிடைத்திருக்கும்...மாடுவெட்டத்தடை...முட்டாக்குப்போடத்தடை..

அவனுக்கு அதாவது கிடைத்தது ,நமக்கு கிடைத்தது ....சிறுபான்மை குழு மட்டுமே 
மிகவிரைவில் சிறுபான்மை தனிநபர்கள் (Minority Individuals) ஆக வாழ்த்துக்கள் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவனுக்கு அதாவது கிடைத்தது ,நமக்கு கிடைத்தது ....சிறுபான்மை குழு மட்டுமே 
மிகவிரைவில் சிறுபான்மை தனிநபர்கள் (Minority Individuals) ஆக வாழ்த்துக்கள் 

இந்த விடையம் சுமந்துவின் ..அமெரிக்க வரும் ஆசை...கனடாவில் அது நிறைவேறிட்டுது...இப்ப வரிசையில் முதல் இசுலாமியரும் வருவினம்...அதன் பிறகு சிங்களவரும் வருவினம் ..10 வருடத்துக்குள்  இது நடக்கும்...உரக்கப்பல் விசயம் ஒரு உதாரணம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.