Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவிலும் தேநீர் 5 ரூபாவாலும் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கமைய உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர் அதற்கமைய உணவு பொதி ஒன்றின் விலை நாளை முதல் 20ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Articles Tagged Under: உணவு பொதி | Virakesari.lk

அதேபோல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய உணவு பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகரிப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் காரணமாக வாழ்க்கை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகவே பொருள் ஏற்றல் மற்றும் இறக்கல் ஆகியவற்றிற்கான கூலியை 15 ரூபாவினால் அதிகரிக்குமாறு வலியுறுத்தி புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு நாட்டாமிகள் நேற்று பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டார்கள்.

1989ஆம் ஆண்டு காலம் முதல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளோம் ஒரு முறை பொருள் ஏற்றல் மற்றும் இறக்குமதிக்காக 8 ரூபா தொடக்கம் 10 ரூபாய் மாத்திரமே கிடைக்கப் பெறுகிறது.அத்தியாவசிய பொருட்களின் விலையும்,வாழ்க்கை செலவும் தினசரி அதிகரித்த நிலையில் உள்ளது அவ்வாறான நிலையில் சேவை கட்டணத்தை அதிகரிப்பது அவசிமாகும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட நாட்டாமிகள் குறிப்பிட்டனர்.

மலைநாடு மற்றும் ஏனைய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரகறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் வியாபார நடவடிக்கைகளில் தாம் நட்டமடைவதாக மரகறி சில்லறை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனனர்.

மலைநாடு மற்றும் ஏனைய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சகல மரகறிகளின் கிலோகிராமின் சில்லறை விலை 400 ரூபாவை காட்டிலும் அதிகரி;க்கப்பட்டுள்ளன.உரம் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மரகறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

உர பிரச்சினை காரணமாக  மரகறி விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து  சந்தையில் கரட் ஒருகிலோகிராம் 550 ரூபாவிற்கும்,லீக்ஸ் 500 ரூபாவிற்கும்,போஞ்சி ஒருகிலோகிராம் 600 ரூபாவிற்கும்,கத்தரிக்காய் ஒருகிலோகிராம் 400,கறிமிளகாய் ஒருகிலோகிராம் 600 ரூபாவிற்கும் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மரகறிகளின் விற்பனை விலை என்றும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன விலையேற்றத்தின் காரணமாக  250 கிராம் மரகறிகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வட்டக்காய்,மரவள்ளி கிழங்கு ஆகியவை மாத்திரம் தான் தற்போது குறைந்த விலைக்கு பெற முடிகிறது.அவற்றையும் மூன்று வேளையும் எவ்வாறு உண்பது என நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை 19/=

ஆனால் முட்டைப் பொரியல் 70/= 😭

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி விலைகள் பன்மடங்கு உயர்வு : கோதுமை மாவுக்கு திடீர் தட்டுப்பாடு ?

(கே.மொரின்)

 

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளந்த சந்தைகளில் அவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

Articles Tagged Under: மரக்கறி விற்பனை | Virakesari.lk

 

இன்று கொழும்பு புறக்கோட்டை, வெள்ளவத்தை, நாரஹென்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள மரக்கறி சந்தைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் 320 ரூபாவாகவும், 1 கிலோ கரட் 400 ரூபாவாகவும், 1 கிலோ  பீட்ரூட் 240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் நுகர்வோர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பசுமை விவாசாயக் கொள்கையை அடுத்து இராசாயனப் பசளை முற்றாக தடைப்பட்டுள்ளமை என்பவையே இதற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.

இதன் விளைவாக மரக்கறி உள்ளிட்ட பெரும்பாலன பயிர்களின் அறுவடை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மரக்கறி விலை உயர்ந்ததோடு அவற்றுக்கு  தட்டுபாடும் நிலவி வருகின்றன.

இதன் அடிப்படையில் உற்பத்தி வீதம் குறைவதினால் மரக்கறிளின் விலை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் விலை அதிகரிப்பினால் நுகர்வோரின் வருகையும் குறைந்துள்ளது. இதனால் மரக்கறி வியாபாரிகளும், விவாசாயிகளும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந் நிலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை கேள்வி குறியாகியுள்ளது. மற்றும் வருகின்ற நாட்களில் இதனை விடவும் நெருக்கடி ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை இன்று கோதுமைமாவுக்கு பலத்த தட்டுப்பாடு காணப்பட்டது. கோதுமைமாவை கொள்வனவு செய்ய வந்த நுகர்வோர் பலர், வெறுங்கையுடன் வீடு திரும்ப நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மரக்கறி விலைகள் பன்மடங்கு உயர்வு : கோதுமை மாவுக்கு திடீர் தட்டுப்பாடு ? | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.