Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்-காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்க செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்-காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்க செயலாளர்

பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

November 26, 2021
 
spacer.png
 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில்,  “ஊடக சந்திப்பின் போது உங்களுடைய நோக்கத்திலிருந்து மாறி, தொடர்ச்சியாக நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை கூறமுடியுமா?” என ஊடகவியலாளரால் வினவப்பட்ட போது,  பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் எந்த அரசியல் கட்சியிலோ அல்லது அரசியல்வாதி மீதோ குற்றம் சுமத்தவில்லை. 2015ஆம் ஆண்டு எங்கள் போராட்ட காலத்தில் வவுனியா வன்னியன் விடுதியில் ஒரு சந்திப்பின் போது,  தேர்தலுக்கு பின்னர் காணமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை தான் முன்னின்று தீர்ப்பதாக சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.

அதற்கு பின்னர் சம்பந்தன் ஐயா அரசோடு இணைந்து செயற்பட்ட போது அரசியல் கைதி, காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாவி தன்னிடமில்லை என கூறியிருந்தார். அந்த அடிப்படையில் மக்கள் ஓர் சிறிய அமைப்புக்களாக உருவாகி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

இந்த போராட்டத்தின்  நான்காம் நாள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான்விஜயரத்ன, காணாமல்  ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பது, அரசியல் கைதிகளுக்கான விடுதலை , பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல் போன்றவற்றிற்கு தான் தீர்வினை பெற்றுதருவதாக அலரிமாளிகை உயர்மட்ட சந்திப்புக்கு அழைத்திருந்தார். அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்திருந்தனர். அதில் அழையா விருந்தாழியாக சுமந்திரனும் வந்திருந்தார்.

இதன் போது “காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக தன்னுடன் தான் கதைக்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கமும் தன்னுடன் தான் பேச வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் பேசக்கூடாது” என்று  சுமந்திரன் கூறியிருந்தார்,

இதன் அடிப்படையில் தான் நாங்கள் சுமந்திரன் தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்திருந்தோம்.  தமிழ்மக்களுகான நீதிக்கு, தீர்வுக்கு தடையாக இருப்பதோடு  தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்கு அவர் முடக்குகிறார் என்பதையும் அறிந்து கொண்டோம். பின்னர் நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வவுனியாவில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு காணி உறுதியினை கையளித்திருந்தார். ஆனால் காணியில்லாமல் எத்தனையோ தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.இந்த சூழலில் இச் செயற்பாட்டை நாம் ஒரு குற்ற செயலாகவே பார்க்கின்றோம்.

இவ்வாறான கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்பதையிட்டு மகிழ்சியடைகின்றோம். நாங்கள் நேரடியாக ஒரு பொது விவாதத்திற்கு வர தயாராக இருக்கின்றோம். பகிரங்கமாக சுமந்திரனிடம் எங்களுக்கு அவர் செய்த விடயங்களை பட்டியலுடன் கேள்வி கேட்க தயாராக இருக்கின்றோம். பொது விவாதத்திற்கு அவர் தயாரானால் பதிலளிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/we-are-ready-if-sumanthiran-ready-for-public-debate/

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

பின்னர் நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வவுனியாவில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு காணி உறுதியினை கையளித்திருந்தார். ஆனால் காணியில்லாமல் எத்தனையோ தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.இந்த சூழலில் இச் செயற்பாட்டை நாம் ஒரு குற்ற செயலாகவே பார்க்கின்றோம்.

சுமத்திரன் தமிழர்களுக்கா அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட நபர் அல்ல என்பதுக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேணும் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் தமிழர்களுக்கா அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட நபர் அல்ல என்பதுக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேணும் ?

4000 குடும்பங்கள் என்பது சரியான தகவலா  ? 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

4000 குடும்பங்கள் என்பது சரியான தகவலா  ? 

பிழையான தகவல் பரப்புரை செய்தால் சுமத்திரன்  கேஸ் பைல் பண்ணிடுவார் அதுவும் கோடிக்கணக்கில் கனடா  கணக்கு வழக்கு கேட்ட பெண்மணிக்கு கேஸ் போட்ட வள்ளல் அல்லவா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

பகிரங்கமாக சுமந்திரனிடம் எங்களுக்கு அவர் செய்த விடயங்களை பட்டியலுடன் கேள்வி கேட்க தயாராக இருக்கின்றோம். பொது விவாதத்திற்கு அவர் தயாரானால் பதிலளிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

பட்டியலெல்லாம் போட்டு கேள்வி கேட்டால் ஐயா தாங்கமாட்டார் எழுதிகொடுங்கோ.

11 hours ago, Kapithan said:

4000 குடும்பங்கள் என்பது சரியான தகவலா  ? 

இல்லை நாலு வீடுதான் கொடுத்தார். கொடுத்தால் நம்மக்களுக்கு காணாது என்று நினைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பிழையான தகவல் பரப்புரை செய்தால் சுமத்திரன்  கேஸ் பைல் பண்ணிடுவார் அதுவும் கோடிக்கணக்கில் கனடா  கணக்கு வழக்கு கேட்ட பெண்மணிக்கு கேஸ் போட்ட வள்ளல் அல்லவா 🤣

பொது அறிவைக் கொஞ்சம் உபயோகித்து பதில் கூறலாமே ☹️

1 hour ago, satan said:

பட்டியலெல்லாம் போட்டு கேள்வி கேட்டால் ஐயா தாங்கமாட்டார் எழுதிகொடுங்கோ.

இல்லை நாலு வீடுதான் கொடுத்தார். கொடுத்தால் நம்மக்களுக்கு காணாது என்று நினைத்திருப்பார்.

உன்களுக்கும் மேலே கூறப்பட்ட அதே பதில்தான் சாத்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வவுனியாவில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு காணி உறுதியினை கையளித்திருந்தார். ஆனால் காணியில்லாமல் எத்தனையோ தமிழ் மக்கள் இருக்கிறார்கள்

நாலு வீடா நாலாயிரம் வீடா  என்பது இங்கு பிரச்சனையில்லை. நம் மக்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள், நம் மக்கள் வீதியில் திக்கற்றவர்களாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை கேட்க நாதியில்லை, அந்த மக்களின் பிரதிநிதி என்று புலம்பெயர் தேசங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார், சர்வதேச கூட்டங்களில் சொல்லிக்கொள்கிறார்   ஆனால் சிங்களவர், முஸ்லீம்கள் கூப்பிட்ட குரலுக்கோ கூப்பிடாமலோ ஓடோடி  திரிந்தால் நம்மை யார் பார்ப்பது? நம் தேவைகளை யாரிடம் முறையிடுவது?  ஒரேயடியாக அவர்களின் பிரதிநிதியாக அவர்போகலாம் யாரும் விமர்சிக்கப்போவதில்லை.  அப்போ தெரியும் இவர் யாரை வைத்து வியாபாரம் செய்தார் என்பது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

பொது அறிவைக் கொஞ்சம் உபயோகித்து பதில் கூறலாமே ☹️

உங்களுக்கு தெரிந்த பொது அறிவை இங்கு கொட்டுங்க பார்ப்பம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.