Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்!
-----------------------------------------------------

நூற்றாண்டைத் தொட்டுவிட்ட
கவிதைகளின் பயணத்திலே 
யாராரோ வந்தாலும் போனாலும்
ஊரெங்கும் ஊர்வலமாய்
கவிபாடி நின்றாலும்
புதுக்கவிதை பாடியெங்கும்
புதுமைக் கவியானவனே
யுகமெங்கும் புகழ்சூடி
வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே!
பெண்ணென்றும் ஆணென்றும்
வேற்றுமைகள் இல்லாத
உலகொன்றைக் காண்பதற்காய்
உன்சொற்கொண்டு போர்தொடுத்து 
விடுதலையின் முரசறைந்தே
உலகின் கூன் அகலும்
நிலையைக் காண்பதற்காய்
வைரநிகர் வார்த்தைகளால்
உரைத்தாய் உய்யும்வகை
அசைத்தாய் இவ்வுலகை!
பன்முகத் திறன் கொண்டாய்
புரட்சிகர மனம் கொண்டாய்
அநீதிகளைக் கண்டெழுந்தே
அறைகூவல் விடுத்தவனே
நின் எழுத்துகளால் அரணமைத்தாய்!
பதைபதைத்தாய் துடிதுடித்தாய்
விடியலுக்காய் எழுகவென்றே
விண்ணதிரும் வரிகள் கொண்டாய்
மண்ணெங்கள் மண் என்றாய்
அறமெங்கள் மறமென்றாய்
அகலாத துணிவுகொண்டாய்
அடிமையில்லை நாமென்றாய்
மதங்களை கடக்கச் சொன்னாய்
மனிதத்தைக் காணச்சொன்னாய்!
அகந்தையை அகற்றச் சொன்னாய்
அன்பினைக் கற்கச் சொன்னாய்
அறிவினைக் பற்றச் சொன்னாய்
இருளினைக் கடக்கச் சொன்னாய்
இன்பமாய் வாழச் சொன்னாய்
கொள்கைகளில் உறுதி கொண்டாய்
கொடுமைகளை எதிர்த்து நின்றாய்
பன் நூற்றாண்டைக் கடந்தாலும்
மானிட விடுதலையின் மகத்துவமாய்
வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
பாரதியே விடுதலையிற் பாதி நீயே! 

நன்றி

அன்பார்ந்த நட்புடன்

நொச்சி
11.12.2021

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதி கவிதை அருமை 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பாரதி கவிதை அருமை 👍


படித்துப் பாராட்டி ஊக்குவித்த குமாரசாமி ஐயாவுக்கும், படித்த களஉறவுகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்!
-----------------------------------------------------

நூற்றாண்டைத் தொட்டுவிட்ட
கவிதைகளின் பயணத்திலே 
யாராரோ வந்தாலும் போனாலும்
ஊரெங்கும் ஊர்வலமாய்
கவிபாடி நின்றாலும்
புதுக்கவிதை பாடியெங்கும்
புதுமைக் கவியானவனே
யுகமெங்கும் புகழ்சூடி
வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே!
பெண்ணென்றும் ஆணென்றும்
வேற்றுமைகள் இல்லாத
உலகொன்றைக் காண்பதற்காய்
உன்சொற்கொண்டு போர்தொடுத்து 
விடுதலையின் முரசறைந்தே
உலகின் கூன் அகலும்
நிலையைக் காண்பதற்காய்
வைரநிகர் வார்த்தைகளால்
உரைத்தாய் உய்யும்வகை
அசைத்தாய் இவ்வுலகை!
பன்முகத் திறன் கொண்டாய்
புரட்சிகர மனம் கொண்டாய்
அநீதிகளைக் கண்டெழுந்தே
அறைகூவல் விடுத்தவனே
நின் எழுத்துகளால் அரணமைத்தாய்!
பதைபதைத்தாய் துடிதுடித்தாய்
விடியலுக்காய் எழுகவென்றே
விண்ணதிரும் வரிகள் கொண்டாய்
மண்ணெங்கள் மண் என்றாய்
அறமெங்கள் மறமென்றாய்
அகலாத துணிவுகொண்டாய்
அடிமையில்லை நாமென்றாய்
மதங்களை கடக்கச் சொன்னாய்
மனிதத்தைக் காணச்சொன்னாய்!
அகந்தையை அகற்றச் சொன்னாய்
அன்பினைக் கற்கச் சொன்னாய்
அறிவினைக் பற்றச் சொன்னாய்
இருளினைக் கடக்கச் சொன்னாய்
இன்பமாய் வாழச் சொன்னாய்
கொள்கைகளில் உறுதி கொண்டாய்
கொடுமைகளை எதிர்த்து நின்றாய்
பன் நூற்றாண்டைக் கடந்தாலும்
மானிட விடுதலையின் மகத்துவமாய்
வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
பாரதியே விடுதலையிற் பாதி நீயே! 

நன்றி

அன்பார்ந்த நட்புடன்

நொச்சி
11.12.2021

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.. 💐

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிக்கு எழுதியது

தலைவருக்கும் பொருந்துது.

கடைசிவரை தலைவருக்கான என்றே வாசித்தேன்.

அருமை நொச்சி.

  • கருத்துக்கள உறவுகள்+
16 hours ago, nochchi said:

வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்!
-----------------------------------------------------

நூற்றாண்டைத் தொட்டுவிட்ட
கவிதைகளின் பயணத்திலே 
யாராரோ வந்தாலும் போனாலும்
ஊரெங்கும் ஊர்வலமாய்
கவிபாடி நின்றாலும்
புதுக்கவிதை பாடியெங்கும்
புதுமைக் கவியானவனே
யுகமெங்கும் புகழ்சூடி
வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே!
பெண்ணென்றும் ஆணென்றும்
வேற்றுமைகள் இல்லாத
உலகொன்றைக் காண்பதற்காய்
உன்சொற்கொண்டு போர்தொடுத்து 
விடுதலையின் முரசறைந்தே
உலகின் கூன் அகலும்
நிலையைக் காண்பதற்காய்
வைரநிகர் வார்த்தைகளால்
உரைத்தாய் உய்யும்வகை
அசைத்தாய் இவ்வுலகை!
பன்முகத் திறன் கொண்டாய்
புரட்சிகர மனம் கொண்டாய்
அநீதிகளைக் கண்டெழுந்தே
அறைகூவல் விடுத்தவனே
நின் எழுத்துகளால் அரணமைத்தாய்!
பதைபதைத்தாய் துடிதுடித்தாய்
விடியலுக்காய் எழுகவென்றே
விண்ணதிரும் வரிகள் கொண்டாய்
மண்ணெங்கள் மண் என்றாய்
அறமெங்கள் மறமென்றாய்
அகலாத துணிவுகொண்டாய்
அடிமையில்லை நாமென்றாய்
மதங்களை கடக்கச் சொன்னாய்
மனிதத்தைக் காணச்சொன்னாய்!
அகந்தையை அகற்றச் சொன்னாய்
அன்பினைக் கற்கச் சொன்னாய்
அறிவினைக் பற்றச் சொன்னாய்
இருளினைக் கடக்கச் சொன்னாய்
இன்பமாய் வாழச் சொன்னாய்
கொள்கைகளில் உறுதி கொண்டாய்
கொடுமைகளை எதிர்த்து நின்றாய்
பன் நூற்றாண்டைக் கடந்தாலும்
மானிட விடுதலையின் மகத்துவமாய்
வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
பாரதியே விடுதலையிற் பாதி நீயே! 

நன்றி

அன்பார்ந்த நட்புடன்

நொச்சி
11.12.2021

 

 

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.. 💐

படித்துப் பாராட்டி ஊக்குவிக்கும்  புரட்சிகரத் தமிழ்த்தேசியனவர்களுக்கு நன்றி.

3 hours ago, ஈழப்பிரியன் said:

பாரதிக்கு எழுதியது

தலைவருக்கும் பொருந்துது.

கடைசிவரை தலைவருக்கான என்றே வாசித்தேன்.

அருமை நொச்சி.

படித்துப் வித்தியாசமான பார்வையோடு பாராட்டி ஊக்குவிக்கும்  ஈழப்பிரியனவர்களுக்கு நன்றி.

3 hours ago, நன்னிச் சோழன் said:

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்.

படித்துப் பாராட்டி ஊக்குவிக்கும்  நன்னிச்சோழனவர்களுக்கு நன்றி. படித்துச் சுவைத்த கள உறவுகளுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.