Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்15 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, உங்கள் நினைவை போற்றுகிறேன். 2002 ஒஸ்லோ மாநாட்டின்போது நீங்கள் என்னிடம் சொன்ன சேதிகள் இப்ப தீர்க்க தரிசனமாகிவிட்டது.  2006ல் பேச்சுவார்தைகளில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதில் மேற்குலகம் கோபமாக இருந்தது.  உங்கள் உடல்நிலை பற்றி சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. ”பாலசிங்கத்தைத் தவிர தவிர பிறருடன் பேச ஒன்றுமில்லை. இது முடிவின் ஆரம்பம்” என மேற்குலக இராசதந்தரிகள் எச்சரித்ததை நான் தலைமைக்கு உடனேயே அறிவித்தேன். உங்கள் மரணச் சேதியை கேட்டபோது "This is the beginning of the end"  என்ற மேற்குலக இராஜதந்திரிகளின் குரல் என் காதுகளில் மீண்டும் ஒலித்தது. அண்ணா உங்கள் கடைசிகால  நிலைபாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதால் மட்டுமே நம் இனம் வெற்றியடையமுடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, poet said:

2002 ஒஸ்லோ மாநாட்டின்போது நீங்கள் என்னிடம் சொன்ன சேதிகள்

வணக்கம் பொயட் சார், 2002 ஒஸ்லோ மாநாட்டின்போது அன்டன் பாலசிங்கம் அய்யா உங்களிடம் சொன்ன சேதிகள் என்ன? சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாலி said:

வணக்கம் பொயட் சார், 2002 ஒஸ்லோ மாநாட்டின்போது அன்டன் பாலசிங்கம் அய்யா உங்களிடம் சொன்ன சேதிகள் என்ன? சொல்வீர்களா?

 எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும். 

6 hours ago, poet said:

 எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும். 

நன்றி பொயட் ஐயா. நிச்சயம் வெளியிட வேண்டும். பொய்கள் தாண்டவமடி எமது எதிர்காலச் சந்ததியையும் அழிப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கையில்,   உண்மைகளை அறிந்து அவர்களாவது சரியான வழியில் செல்ல உங்களைப் போல் விவரம் அறிந்தவர்கள் உண்மைகளை வெளியிடுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் சேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

சரி நான் புரிந்ததை பதிவு செய்கிறேன் நண்பா. கொசோவா தீர்வு பாதையில் சென்று பேரழிவைத் தடுத்து வெற்றிபெறும் சாத்தியகூறுகளை பாலா அண்ணன் உருவாக்குவதாகத் தோற்றம் இருந்த சூழலில்தான் நான் அண்ணாவுடன் பேசினேன். கொசோவோ மொடல் சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் ஆதங்கப்பட்டேன். அண்ணா இவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. என் புரிதலின் படி மிக சுருக்கமாக அவர் பேசிவற்றின் சாராம்சம். “இந்தியா உட்பட எல்லா நாடுகளோடும் பாலங்களை உடையவிட்டாச்சு.  எஞ்சிருப்பது மேற்க்குத்தான். நான் சாகமுன்னம் அந்த பாலத்தையாவது காப்பாற்றி தீர்வை கொண்டுவந்தாதான் மா----னை காப்பாற்றலாம்.  இஞ்ச சிலர் விடுகிறாங்களில்லை.  நான் செத்தா எல்லோரும் சேர்ந்து மா-------னையும் இயக்கத்தையும் எல்லோரையும்  அழிச்சிடுவாங்க.” இந்த கருத்தைத்தான் சொன்னார். அவர் விடுகிறாங்களில்லை என்று குறிப்பிட்டதுயார் என்பதை சொல்லவில்லை. என் அனுமானப்படி அவர் கஸ்றோவையும் தனக்கு முட்டுக்கட்டைபோடும் புலம்பெயர்ந்த அமைப்பின் தலைமகள் சிலவற்றையும்தான் குறிப்பிட்டார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, poet said:

 எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும். 

எப்படி நம்புவது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.