Jump to content

குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி

December 27, 2021
 

News 02 01 2 குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி

 

குருந்தூர்மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வரலாற்று தொன்மை வாய்ந்தவை என்று நிரூபிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தினரின் பலத்த பாதுகாப் புக்கு மத்தியில் இந்த நிரந்தரக் கட்டுமா னப் பணிகளை பழமையான முறைமை களுடன் தொல்பொருள் திணைக்களத் தின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிய வருகின்றது. முல்லைத்தீவு – குமுழமுனை – குருந் தூர்மலையில் சைவ மக்கள் வழிபட்டு வந்த இடத்தை பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் திணைக்களம் என்று கூறி அந்தப் பகுதியைக் கைப்பற்றியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுமார் 4 மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் அது பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்தது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத் தியிலும் பெரும் எடுப்பில், படையின ரின் ஏற்பாட்டில் குருந்தாவசோக ராஜ் மாஹா விகாரைக்கான பிரித்ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசை கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சைவர்களின் வழி பாட்டு உரிமையை மறுக்கக்கூடாது, அங் குள்ள சைவ வழிபாட்டு அடையாளங் கள் அகற்றப்படக்கூடாது என்று முல் லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் நிரந்தரமான நிர்மாணப் பணிகள் எவை யும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன் றம் கட்டளை பிறப்பித்தது. ஆனாலும், குருந்தூர் மலையில் கடந்த ஜூன் 16ஆம் திகதி அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட் டப்பட்டதோடு, மீண்டும் அப்பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பி னர் து.ரவிகரனால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல்செய் யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் கடந்த பத்தாம் திகதி முதல் ஆரம்பமாகின. இந்த நிலையில், குருந்தூர் மலையில் தொடர்ந் தும் பௌத்த சின்னங்களை நிறுவும் வகை யிலான நிர்மாணப்பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன என்று தெரியவருகின்றது.

 

https://www.ilakku.org/attempt-to-establish-permanent-buddhist-landmarks-in-gurudwara/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.