Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் சடலமாக  கண்டெடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் சடலமாக  கண்டெடுப்பு!

spacer.png

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

போய்.. காணியை.. கடையை திருப்பித் தா.. என்றிருப்பாவோ.. வழமைப்படி.. போட்டுத் தள்ளி இருப்பார்கள்.. ஆக்கிரமிப்பாளர்கள்.

முன்னரும் இன்றைய சொறீலங்கா சனாதிபதி.. செயலாளராக இருந்தப்போ.. தன் கடைத்தொகுதியை கேட்டுப் போனவரை.. இராணுவக் கூலிகளை வைச்சு போட்டுத்தள்ளியதும் இதே நபர்களே. 

சொறீலங்கா பொலிஸ்.. தேடி... ம்ம்.. நடக்கிறதா கதையுங்கோ. சொறீலங்கா போகும் போதே.. கூடிய அவதானம் அவசியம். தூதரக... மட்டத்திற்கு தகவல் சொல்லிட்டுப் போவது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

முன்னரும் இன்றைய சொறீலங்கா சனாதிபதி.. செயலாளராக இருந்தப்போ.. தன் கடைத்தொகுதியை கேட்டுப் போனவரை.. இராணுவக் கூலிகளை வைச்சு போட்டுத்தள்ளியதும் இதே நபர்களே. 

சொறீலங்கா பொலிஸ்.. தேடி... ம்ம்.. நடக்கிறதா கதையுங்கோ. சொறீலங்கா போகும் போதே.. கூடிய அவதானம் அவசியம். தூதரக... மட்டத்திற்கு தகவல் சொல்லிட்டுப் போவது நல்லது. 

கனடாபிரஜை  என்று நினைக்கிறன் அவருக்கு நடந்தது. பயத்தில்  வெளியில் வராமல் எத்தனையோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

போய்.. காணியை.. கடையை திருப்பித் தா.. என்றிருப்பாவோ.. வழமைப்படி.. போட்டுத் தள்ளி இருப்பார்கள்.. ஆக்கிரமிப்பாளர்கள்.

முன்னரும் இன்றைய சொறீலங்கா சனாதிபதி.. செயலாளராக இருந்தப்போ.. தன் கடைத்தொகுதியை கேட்டுப் போனவரை.. இராணுவக் கூலிகளை வைச்சு போட்டுத்தள்ளியதும் இதே நபர்களே. 

சொறீலங்கா பொலிஸ்.. தேடி... ம்ம்.. நடக்கிறதா கதையுங்கோ. சொறீலங்கா போகும் போதே.. கூடிய அவதானம் அவசியம். தூதரக... மட்டத்திற்கு தகவல் சொல்லிட்டுப் போவது நல்லது. 

 

3 minutes ago, satan said:

கனடாபிரஜை  என்று நினைக்கிறன் அவருக்கு நடந்தது. பயத்தில்  வெளியில் வராமல் எத்தனையோ?

ஆம்…. அரியாலையில் நடந்த உண்மைச் சம்பவம். 😢

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

ஆம்…. அரியாலையில் நடந்த உண்மைச் சம்பவம். 😢

கிளிநொச்சியிலும் தனது கடைத்தொகுதியை கேட்டுப் போனவரை.. அதே கடைத்தொகுதியை ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவம் வெட்டிக் கொன்றிருந்தது. இதே கோத்தா அப்பே பாதுகாப்புச் செயலர். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

கிளிநொச்சியிலும் தனது கடைத்தொகுதியை கேட்டுப் போனவரை.. அதே கடைத்தொகுதியை ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவம் வெட்டிக் கொன்றிருந்தது. இதே கோத்தா அப்பே பாதுகாப்புச் செயலர். 

உண்மை. அவர் கோத்தாவோடு நேரடியாக தொடர்பு கொண்டு தன் நிலத்தை தரும்படி கேட்டுள்ளார். அவரது மடிக்கணனி அதற்கு சாட்ச்சி. அவரை துரத்தி துரத்தி வெட்டி, கொன்று, மடிக்கணணியையும் திருடி சென்றதோடு கதையை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் இதே நிலை கோத்தாவுக்கு வெகு விரைவில் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை : கைதான கணவன், மனைவிக்கு விளக்கமறியல்

லண்டனிலிருந்து கிளிநொச்சிக்கு திரும்பிய பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதான கணவன் மனைவி இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Courts.JPG

கடந்த  26 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் நேற்று (29-1-2021) கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் நேற்று மாலை  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.virakesari.lk/article/119926

  • கருத்துக்கள உறவுகள்

நகைகளை அபகரிக்கவே மூதாட்டி அடித்துக் கொலை!

“கிளிநொச்சி அம்பாள்குளத்தில் தனித்திருந்த மூதாட்டியிடமிருந்து நகைகளை அபகரிக்கவே அவரை அடித்துக்கொன்றேன்” என்று, மூதாட்டியின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடப்பட்ட நகைகளும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கொலைசெய்த பின்னர், சடலத்தை சந்தேகநபர் உரப்பையொன்றில் போட்டு கட்டியுள்ளார். நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து, அவரது மோட்டார் சைக்கிளைப்பெற்று, அதில் ஸ்கந்தபுரத்துக்கு சடலத்தை எடுத்துச்சென்று, மரப்பாலத்தின் கீழ் வீசியுள்ளார்.

மூதாட்டியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ஒரு சங்கிலி, மோதிரம், ஒரு சோடி காதணி, ஒரு சோடி வளையல் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் வீடு ஒன்றில் வசித்துவந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது -67) என்பவர் , பிரிட்டனில் தனது மகனுடன் வசித்துவந்தநிலையில், இலங்கைக்குத் திரும்பி கடந்த 3 வருடங்களாக கிளிநொச்சி உதயநகர் பகுதியிலுள்ள தனது காணியை பராமரிப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து, தனியாக தங்கியிருந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வங்கிக்குச்சென்று திரும்பியிருந்தநிலையில் அவர் காணாமற்போயிருந்தார் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன் தினம், யூனியன்குளம் பகுதி ஆற்றிலிருந்து உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

https://newuthayan.com/நகைகளை-அபகரிக்கவே-மூதாட்/

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இப்ப கள்ளர் தொல்லை கூடுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இங்க இப்ப கள்ளர் தொல்லை கூடுது.

"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி." வறுமை என்பதைவிட பேராசை கூடிப்போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.