Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூநகரியில் 8 இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

IMG-20220209-WA0006.jpg

இன்று (09)  கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள்  கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள  அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20220209-WA0011.jpg

IMG-20220209-WA0013.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனால் என்ன! தற்போது மின்வெட்டு நேரம், அடுப்பெரிக்க உதவுமே.😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிழம்பு said:

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இதை ஏலத்திலை எடுத்து என்ன கோதாரியை செய்யிறது?

IMG-20220209-WA0011.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழைய வண்டிகளை கடலில் அமிழ்த்துவதை போல் இவற்றையும் இந்திய ரோலர்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் அமிழ்த்தி விட்டால் அவர்களின் தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளில் மாட்டுப்பட்டு தடை செய்யப்பட்ட வலைகள் அறுபட்டு போகும் மீண்டும்  அவர்கள் வருவதுக்கு யோசிப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

பழைய வண்டிகளை கடலில் அமிழ்த்துவதை போல் இவற்றையும் இந்திய ரோலர்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் அமிழ்த்தி விட்டால் அவர்களின் தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளில் மாட்டுப்பட்டு தடை செய்யப்பட்ட வலைகள் அறுபட்டு போகும் மீண்டும்  அவர்கள் வருவதுக்கு யோசிப்பார்கள் .

இதைத்தான் நானும் யோசித்தேன்! ஆனால் நம்ம, இல்லை .......... இல்லை....... கடற்தொழில் அமைச்சர் நேரடியாக களமிறங்கி தன் வருமானத்திற்கு வேட்டு வைக்கமாட்டார்.

5 hours ago, பிழம்பு said:

இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 அதுதானே! இதில் எப்படி அவர்கள் தொழில் செய்தார்கள்? அதை ஏன் விற்கவேண்டாமென வேண்டுகோள் வைக்கிறார்கள்? அப்படி உதவாததை ஏன் ஏலத்தில் விடுகிறார்கள்? வாங்குகிறார்கள்? என்பதிலேயே கேள்விகள்  உண்டு. இதன் மூலம் ஒரு பகை உணர்வு மூட்டி விடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழனுக்கு ஆதரவாக எந்தக்குரலும் எழக்கூடாது, யாரிடமும் ஆதரவு தேடி போகக்கூடாது தனிமைப்படுத்தப்பட்டு தனது காலடியில் இருக்கவைக்க செய்யும் திட்டமிட்ட நடவடிக்கை  இது,  தமிழ்நாட்டுத் தமிழன் தானாக நமது கடல் வலையத்துக்குள் வராமல் விட்டாலும் சிங்கள மீனவர் இறக்கப்படுவார்கள் நமது வளத்தை சூறையாட. கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவாக இருந்தவனை திட்டமிட்டு அழித்து, கையேந்தவும், ஏங்கவும் வைத்துவிட்டான் சோம்பேறிச் சிங்களவன். நான் சொல்லவில்லை சிங்கள அமைச்சரே சொல்கிறார். இருந்தாலும் தனிச்சவருக்கு சொல்லிபோடாதைங்கோ பிறகு அவருக்கு கெட்ட கோவம் வரும் சிங்களவரை சோம்பேறிகள் என்றால். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.