Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

கொழும்பு  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உக்ரேனிய பிரஜைகளின் படங்களைப் பார்த்து ரசிக்க, மிகுந்த ஆசையாக உள்ளது. 😍 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!

ஐரோப்பாவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவில் உக்ரைனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையில் உள்ள உக்ரைன் சமூகத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனிய பிரஜைகள், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்து’, ‘போரை நிறுத்து’ மற்றும் ‘ரஷ்யா வீட்டிற்கு செல்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி  ‘ரஷ்யா தொடங்கிய ‘முழு அளவிலான போர்’ இராணுவம் மற்றும் பொதுமக்களிடையே முதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கோசமெழுப்பினர்.

தங்கள் குரலை உலகம் கேட்க வேண்டும் என்றும் உக்ரேனிய பிரஜைகள் இதன்போது தெரிவித்தனர்.

அமைதியான உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரவும் பகலும் இடைவிடாது தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன என்றும் இலங்கையில் வசிக்கும் உக்ரேனியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன என்றும் உலகம் ரஷ்யாவை தீர்க்கமாக தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், இது சர்வதேசத்தின் நேரம் என்றும் இதனை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரை நிறுத்த அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

 

Protest-1-4.jpg

Protest-8-1.jpg

Protest-7-1.jpg

Protest-6-1.jpg

Protest-10-1.jpg

Protest-9-2.jpg

Protest-4-4.jpg

Protest-5-3.jpg

Protest-2-3.jpg

https://athavannews.com/2022/1269110

##############   #################   ###############

கதறு... நல்லாய் கதறு, தொண்டை கிழிய  கதறி  அழு.
அப்பதான்... எமக்கு, சந்தோசமாக இருக்கும்.  😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலிடேக்கு போன இடத்திலையும் உணர்ச்சி ததும்ப அரைக்காற்சட்டையோடை  ஆர்ப்பாட்டமாம்.....😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன என்றும் உலகம் ரஷ்யாவை தீர்க்கமாக தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், இது சர்வதேசத்தின் நேரம் என்றும் இதனை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள இராணுவம் தமிழர் எல்லைகளுக்குள்  சட்ட விரோதமாக புகுந்து கோரத்தாண்டவம் ஆடியபோது நாங்களும் சர்வதேசத்தின் உதவியை வேண்டி கூக்குரல் எழுப்பினோம், காத்திருந்தோம். புலம் பெயர்ந்தோர் இரவு பகல் பாராமல் தெருக்களில் ஆதரவுக்காய் அலைந்தனர், மனித உரிமைகள் என்று பாடம் நடத்தும் நாடுகளை எல்லாம் தட்டினார்கள். அப்போ நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இவர்களின் கூக்குரல் இலங்கைக்கு ஒன்றும் புதிதில்லை, ஆனால் அது எப்படி பிரதிபலிக்கும் என்பதே கேள்வி. ரஷ்யா போர் தொடுத்தது சரி என்குமா? இல்லை தவறு என்று கண்டிக்குமா? தானும் இதே நிலையில் இருந்ததை மறுக்குமா? அல்லது இது அதன் மனச்சாட்சியை உறுத்துமா? கண்டிப்பாக இல்லை, அதுதான் தன்னிலை மறந்து உபதேசம் செய்யுதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.