Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009 பின்னர்... மக்கள் இழந்த உயிர்களை தவிர, அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2009 பின்னர்... மக்கள் இழந்த உயிர்களை தவிர, அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர்

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட  பொருளாதார மத்தியநிலையம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்து உரையாற்றிய அவர் “  யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள்.

இங்கிருந்த பெரும்பாலான தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.

கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.

அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.

வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது.

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு  வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

வடக்கில் உள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும் சென்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்கு தாயகம் இருந்தாலும் அங்கு சுதந்திரமாக வாழமுடியாமல், தெரியாத பிரதேசங்களிலும், நாடுகளிலும் அகதிகளாக வாழ வேண்டியதாயிற்று.

30 ஆண்டுகளாக அந்த இருண்ட சகாப்தம் இருந்தது. அந்த இருண்ட காலத்தில் வடக்கு மக்களின் வாழ்வுரிமையும் அபிவிருத்தியும் பறிக்கப்பட்டன. மே 19, 2009 அன்று அந்த இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடிவடையும் போது இன்று வடக்கில் உள்ள எதையும் அன்று காணமுடியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டிடங்கள், உடைந்த சாலைகள், வீடற்ற மக்கள். ஆனால் ஓரிரு வருடங்களில் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். சாலைகள் அமைக்கப்பட்டன, தண்ணீர் வழங்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன.

அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள் என்ற கதை காணப்பட்டது. அந்த மக்களை நாம் விடுவித்தோம். பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டது.

வடக்கும் தெற்கும் யாழ்தேவியால் இணைக்கப்பட்டன. வடக்கில் மாகாண சபை மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால் அந்த சகாப்தத்திற்கு 2015 இல் இடையூறு ஏற்பட்டது. 2015இன் பின்னர் நாங்கள் நாங்கள் செய்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. நல்லிணக்கம் என்ற திட்டம் வந்தது.

அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை.

புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன.

சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை.

நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2009ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம்.

ஆனால் திடீரென்று கொவிட் தொற்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எமது மக்களைப் பாதுகாக்கவே விரும்பினோம். நாம் அதை செய்தோம்.

வடக்கு மக்களைப் போன்று தென்னிலங்கை மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடிந்தது.

உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என   பிரதமர் தெரிவித்தார்.  தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.

KUMA90741-600x400.jpg

KUMA90931-600x400.jpg

https://athavannews.com/2022/1272661

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களே இறக்கவில்லை என்றவர்.. இப்ப மக்களின் உயிரிழப்பு பற்றி கதைக்கிறார் என்றால்.. இவர்கள் மக்களைக் கொன்றிருக்கிறார்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார் இந்தப் பேச்சு மூலம்.

மக்களை கொல்வது.. போர்க்குற்றம்.. அது புட்டினுக்கு அமையும் என்றால்.. ராஜபக்சக்களுக்கும் அமையும். ஆனால்.. ஏன் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள்.. இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல்.. நாட் கடத்துவதோடு.. இன்னும் இன்னும் இந்தப் போர்க்குற்றவாளிகளோடு உறவாடி வருகின்றன.

இது இந்த நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறதே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்கள் இப்போது தமிழின அழிப்பாளர்களான இராஜபக்ச குடும்பத்தின் சேவகனாக மாறி அவர்கள் கூறியதை எல்லாம் விழுங்கி இங்க வந்து வாந்தி எடுக்கிறார்.

ஆதவன் செய்தி எனும் பெயரில்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Elugnajiru said:

தமிழ்சிறி அவர்கள் இப்போது தமிழின அழிப்பாளர்களான இராஜபக்ச குடும்பத்தின் சேவகனாக மாறி அவர்கள் கூறியதை எல்லாம் விழுங்கி இங்க வந்து வாந்தி எடுக்கிறார்.

ஆதவன் செய்தி எனும் பெயரில்

செய்தியை யாழில் இணைப்பதால் செய்தியில் சொல்லப்பட்டுள்ளவைக்கு இணைப்பவர் ஆதரவு என்பது அறியாமை. 

செய்தியில் உள்ள விடயங்களை ஏற்காமுடியாவிட்டால் அவற்றை மறுதலித்துக் கருத்துக்களை வைக்கவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஊடக ஒழுங்கு என்பது இப்போது வேறுவிதமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது எந்தக்காலத்தில் எதை நாம் பிரசுரிக்கவேண்டும் என்பதை பெரும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்மானிக்கிறார்கள், அவர்களது கட்டமைப்பையும்மீறி தவறுதலாகச் சில உண்மைகள் அதுவாகவே வெளிவந்துவிடுகின்றன அதற்க்குச் சரியான உதாரணம் நேற்றைய மகிந்தவின் யாழ் வரிகையயொட்டி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் சிங்களத் தொலைக்காட்சி ஊடகமொன்றில் காட்டசிப்படுத்தப்பட்டது காரணம் இராஜபக்ஸக்களை இப்போது ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் உலக ஒழுங்கு தெரியாத்தனமாக அதையும் காட்சிப்படுத்துகிறது.
ஆனால் நாம் வெட்டி ஒட்டுதலின்போது தவறுதலாக சில செய்திகளை எம்மவர்மத்தியில் விட்டுச்செல்கிறோம் இந்த யார்களப்பார்வையாளர்களில் கருத்துக்கள அங்கத்தவர்களாக இல்லாத யாரேனும் உந்தாள் சொல்லுறது சரிதானே எனும் நிலைப்பாட்டுக்கு வந்திடக்கூடாது மற்றப்படி தமிழ் சிறி அவர்கள் நீண்டநாள் யாழ் களத்தின் உறவு அவரைத்தனிப்பட்ட ரீதியில் வசைபாடுவது எனது எண்ணம் இல்லை அப்படி யாழ் களமும் தமிழ் சிறி அவர்களும் கருதினால் எனது இடுகைஅயி நீக்கவும் தவிர அப்படியான மனெளளைச்சலுக்காக நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

தமிழ்சிறி அவர்கள் இப்போது தமிழின அழிப்பாளர்களான இராஜபக்ச குடும்பத்தின் சேவகனாக மாறி அவர்கள் கூறியதை எல்லாம் விழுங்கி இங்க வந்து வாந்தி எடுக்கிறார்.

ஆதவன் செய்தி எனும் பெயரில்

 

1 hour ago, Elugnajiru said:

உலக ஊடக ஒழுங்கு என்பது இப்போது வேறுவிதமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது எந்தக்காலத்தில் எதை நாம் பிரசுரிக்கவேண்டும் என்பதை பெரும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்மானிக்கிறார்கள், அவர்களது கட்டமைப்பையும்மீறி தவறுதலாகச் சில உண்மைகள் அதுவாகவே வெளிவந்துவிடுகின்றன அதற்க்குச் சரியான உதாரணம் நேற்றைய மகிந்தவின் யாழ் வரிகையயொட்டி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் சிங்களத் தொலைக்காட்சி ஊடகமொன்றில் காட்டசிப்படுத்தப்பட்டது காரணம் இராஜபக்ஸக்களை இப்போது ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் உலக ஒழுங்கு தெரியாத்தனமாக அதையும் காட்சிப்படுத்துகிறது.
ஆனால் நாம் வெட்டி ஒட்டுதலின்போது தவறுதலாக சில செய்திகளை எம்மவர்மத்தியில் விட்டுச்செல்கிறோம் இந்த யார்களப்பார்வையாளர்களில் கருத்துக்கள அங்கத்தவர்களாக இல்லாத யாரேனும் உந்தாள் சொல்லுறது சரிதானே எனும் நிலைப்பாட்டுக்கு வந்திடக்கூடாது மற்றப்படி தமிழ் சிறி அவர்கள் நீண்டநாள் யாழ் களத்தின் உறவு அவரைத்தனிப்பட்ட ரீதியில் வசைபாடுவது எனது எண்ணம் இல்லை அப்படி யாழ் களமும் தமிழ் சிறி அவர்களும் கருதினால் எனது இடுகைஅயி நீக்கவும் தவிர அப்படியான மனெளளைச்சலுக்காக நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

 

2 hours ago, கிருபன் said:

செய்தியை யாழில் இணைப்பதால் செய்தியில் சொல்லப்பட்டுள்ளவைக்கு இணைப்பவர் ஆதரவு என்பது அறியாமை. 

செய்தியில் உள்ள விடயங்களை ஏற்காமுடியாவிட்டால் அவற்றை மறுதலித்துக் கருத்துக்களை வைக்கவேண்டும்.

 

எழுஞாயிறு அவர்களே... உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகின்றது.
ஆனால்... சிங்கள அரசு, எம்மை... எவ்வளவிற்கு முட்டாளாக  நினைக்கின்றது,
என்பதனை... யாழ்.கள வாசகர்களும் அறிய வேண்டும் என்பதற்காக..

நமக்கு உடன் படாத, செய்திகளையும் இணைப்பது வழமை.

அதற்காக... நீங்கள், என்னுடன் கோவிக்காதீர்கள் ப்ளீஸ். 🙂
நன்றி... கிருபன் ஜீ. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என   பிரதமர் தெரிவித்தார்.  தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.

 

19 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும்.

கதிரைக்கு கொண்டு வந்தவர்கள் துரத்துகிறார்கள், இவர்களே என்னைத் தெரிந்தெடுத்தார்கள்! என்று அறிக்கைவிட்டவர், போ என்று சொல்லிவிட்டார்கள். தஞ்சசம் தேடி வந்து புலம்புகிறார். தானே தன் வாயால் மாட்டுப்படுகிறார்.

 

19 hours ago, தமிழ் சிறி said:

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்

வேண்டாம் என்று எறிந்த கல்லும் வேளைக்கு உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.