Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வகட்சி கூட்டத்தில் பசில் ரணில் கடும் வாக்குவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி கூட்டத்தில் பசில் ரணில் கடும் வாக்குவாதம்

 

 

 
சர்வகட்சிகூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தன்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ranil33-300x200.jpg basil4444-300x200.jpg
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்,ஆனால் அதனை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அதனை வெளியிட்டுவிட்டார்கள் என குறிப்பிட்டார்,இது குறித்த சந்தேகத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி அறிக்கையை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சீற்றத்துடன் பதிலளித்த நிதியமைச்சர் என்னிடம் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை உள்ளது ஆனால் அது நகல்வடிவம் மாத்திரமே என குறிப்பிட்டார்.
உங்களிற்கு நகல்வடிவ ஆவணம் வேண்டுமா என பசில் ரணிலை பார்த்து கேட்டார் இதற்கு பதிலளித்த ரணில் உங்களால் முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என தெரிவித்தார்.
ஆனால் நிதியமைச்சர் அதற்னு மறுப்பு தெரிவித்தார்.

Thinakkural.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

நரி உள்ளே இறங்கிவிட்டது .

நரியின் நல்லாட்சி காலத்திலும் கடன்களை வாங்கியிருந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ரணிலின் கேள்வியினால்... தடுமாறினார், பஷில் − சர்வகட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது தடுமாறிய பஷில் ராஜபக்ஷ, “இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்கமுடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிடமுடியும்.” என பதிலளித்திருந்தார்.

https://athavannews.com/2022/1273098

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

Thinakkural.lk

தினக்குரல் காரருக்கும் ஆதவன்காரருக்கும் அங்கு நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள் கிடைக்கவில்லை போல் உள்ளது அரசியல் தெரியாத கூட்டம் ஊடகம் நடத்தினால் இப்படித்தான் அரைகுறையாய் ஆடவேண்டி வரும் தமிழ்வின் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்று சத்தியம் பண்ணும் அது பாட்டுக்கு பலமுறை விலைப்பட்டுக்கொண்டு இருக்குது .

ரணில் சொன்னாராம் பிழைகள் பற்றி கதைப்பது என்றால் இந்த தீவுக்கு வந்த தமது மூதாதையர் விஜயனின் வருகையில் இருந்து பிழை கண்டுபிடடிப்பம் என்று இது ஒரு முக்கியமான விடயம் .

ஆனால் அண்மையில் பிரமானந்த சீடர் விக்கியர்  சிங்களமும் தமிழரும் ஒரு குடியில் இருந்துபரவியவர்கள் என்று புதுசா உளறிக்கொட்டியவர் அவர் வந்த வேலையை பார்ப்பதை விட்டு சரித்திர ஆரட்சியாளர் ஆனவர் எப்போது என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழ்வின் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்று சத்தியம் பண்ணும் அது பாட்டுக்கு பலமுறை விலைப்பட்டுக்கொண்டு இருக்குது .

அவர்களை குறை சொல்லி பயனில்லை. அவரவர் விளங்கிக்கொள்ளும் திறமையைப்பொறுத்து, அவரவர்க்கு வழங்கப்படும் திறையைப்பொறுத்து செய்தி வெளிவரும்.

1 hour ago, பெருமாள் said:

விக்கியர்  சிங்களமும் தமிழரும் ஒரு குடியில் இருந்துபரவியவர்கள் என்று புதுசா உளறிக்கொட்டியவர் அவர் வந்த வேலையை பார்ப்பதை விட்டு சரித்திர ஆரட்சியாளர் ஆனவர் எப்போது என்று தெரியவில்லை .


தமிழரே இலங்கையின் ஆரம்ப வரலாறு கொண்டவர்கள், முடிந்தால் சர்வதேசத்தின் முன்னிலையில் விவாதிப்போம் வாருங்கள் என்று அழைத்தவர். இப்படியொரு பல்டி அடிக்கிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதனாற்தான் சிங்களம் பதில் சொல்லாமல் மௌனம் காக்குது. வாயிலிருந்து விழும்  ஒவ்வொரு சொல்லுக்கும் வாய் மூட முன் அர்த்தம் கண்டுபிடித்து மல்லுக்கு நிற்கும் சிங்களம், ஏன் இவ்வளவு மௌனம் காக்குது? என்பது கேள்விக்குறியே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.