Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழிவாங்கும் படலம் ஆரம்பமா? கோ கோத்தா ஹோம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் செயற்பாட்டாளர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பழிவாங்கும் படலம் ஆரம்பமா? கோ கோத்தா ஹோம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் செயற்பாட்டாளர் கைது

 

 

 
இன்று காலை பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்தியவர்களால் வீட்டிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தற்போது மோதரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தங்களை மோதரை பொலிஸார் என தெரிவித்தவர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றனர்.
FPU7bI0XIAEJsV--300x300.jpg
இதேவேளை முன்னதாக அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
FPU5eISaMAQ5DAi-300x247.jpg
தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்தியவர்களால் அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் எனினும் மோதரை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறு எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்தார் என ஊடகவியலாளர் அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் மோதரை பொலிஸ் நிலையத்தின் குற்றவிசாரணை பிரிவினரே தாங்களே அவரை சில வேலைக்காக அழைத்து சென்றனர் என அனுருத்த பண்டாரவின் தந்தை தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/172567

 

  • கருத்துக்கள உறவுகள்

இளம் சமூக செயற்பாட்டாளரின் கைதுக்கு பொலிஸார் தெரிவித்துள்ள காரணம் 

Published on 2022-04-02 20:35:55

 
 

 

இளம் சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

“சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக குறித்த  28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கம்பளை, எத்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளனர்.

 

http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Screenshot_20220402-194241_Drive.jpg

 

 
  • கருத்துக்கள உறவுகள்

அதே பாணி, அதே காரணம், தமிழர் கடத்தி காணாமற் செய்யப்பட்டதும் இவ்வாறே. சுயநலவாதிக்கு இனம், மதம், குடும்பம், நாடு என்றொரு பக்தியும் இல்லை. மக்களை ஏமாற்றி தனது இலக்கை அடைய போர்த்திக்கொள்ளும் போர்வைகள் இவை. இதை சிங்கள மக்கள் தெரிந்துகொள்ள நம்மைப்போல் அதிக விலை கொடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அதே பாணி, அதே காரணம், தமிழர் கடத்தி காணாமற் செய்யப்பட்டதும் இவ்வாறே. சுயநலவாதிக்கு இனம், மதம், குடும்பம், நாடு என்றொரு பக்தியும் இல்லை. மக்களை ஏமாற்றி தனது இலக்கை அடைய போர்த்திக்கொள்ளும் போர்வைகள் இவை. இதை சிங்கள மக்கள் தெரிந்துகொள்ள நம்மைப்போல் அதிக விலை கொடுக்க வேண்டும். 

மனித உரிமை ஆணையம்… உடனடியாக தலையிட்டதால் காப்பாற்றப் பட்டார்.
இல்லையேல்… பத்தோடு பதினொன்றாக, தாம் கைது செய்யவில்லை என்று சாதித்து இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

மனித உரிமை ஆணையம்… உடனடியாக தலையிட்டதால் காப்பாற்றப் பட்டார்.
இல்லையேல்… பத்தோடு பதினொன்றாக, தாம் கைது செய்யவில்லை என்று சாதித்து இருப்பார்கள்.

இப்போதைக்கு ஆறுதலடையலாம். இவையெல்லாம் பழக்கப்பட்ட, மனனம் செய்யப்பட்ட பதில்கள். மாட்டுபட்டால் வேறொரு காரணம். மனித உரிமை ஆணையத்துக்கு தெரியாததல்ல. முரண்டு பிடித்தால் பழையது கிளறப்படலாம், சர்வதேசம் வேற அவதானிக்குது அதனால் தப்பினான் பிள்ளை என்று பெற்றோர் நிம்மதியடையலாம். இப்படி எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் இருந்திருந்தால் நாம் இழந்த எத்தனையோ பேர் இன்று எம்முடன் இருந்திருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை !

இளம் ஊடகர்... அனுருத்த பண்டாரவுக்கு பிணை !

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமை தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

https://athavannews.com/2022/1274539

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.