Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய அனுமதியையும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31ஆம் திகதியன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதலமைச்சர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2022/1275716

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன தமிழ் மக்களின் லேபிளில் சிங்களத்துக்கு உணவு வரத் தயாராகுதுபோல் இருக்கிறது......!   😢

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த காசை அமுக்கியவர்கள் இந்த உதவிகளையா விடப்போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. மனோ கணேசர்.. அவர்கள் உண்ட மிகுதிதான் .. தமிழர்களுக்கு கிடைக்கும்..😢

IMG-20220410-144746.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உறுதியோடு உள்ளது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் 

IMG-20220415-185727.jpg

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உறுதியோடு உள்ளதாகவும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி செய்து தருமாறும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் விவரம் பின்வருமாறு;

இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு கடிதம்

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியத் தூதரகம்

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள்

IMG-20220415-185645.jpg

உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் நிலை

இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறும் முதலமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்து, கடந்த 23-3-2022 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் துயர நிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பூர்வ உதவி

மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டும், மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத் தொகையைச் செலுத்த இயலாத காரணத்தினால், 12-5-2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளைச் உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-s-letter-to-the-union-minister-jaishankar-regarding-the-shipment-of-essential-commodities-455058.html

டிஸ்கி

கதைத்து கொண்டே இருக்காமல் சட்டுபுட்னு அனுப்பி விடுங்கப்பா..👍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாய்சொல்லில் வீரரடி - வெறும்

வாயால் வடை சுடுவதில் தீரரடி ..😢

IMG-20220429-142027.jpg

போகட்டும் .. சிங்களன்ர நெற்றிவ் ஒரிசா , பீகாரில இருந்து உதவிகள் அறிவிக்கபட்டுள்ளனவா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.