Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம்

ShanaApril 8, 2022
 
GettyImages-1127748001.jpg

 

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணத்தை வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்து அவர்களது வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாகவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனும் சந்தேகத்தில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

http://www.battinews.com/2022/04/blog-post_768.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். கொடுத்த காசை வாங்க சென்ற பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழில். கொடுத்த காசை வாங்க சென்ற பெண், சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில்  புதைக்கப்பட்டிருந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அப்பகுதியில் உள்ளவர்கள் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயிருந்தார்.

காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அரியாலை மணியந்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தி இருந்தனர்.

அதன் போது , வீட்டு வளவினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட இடத்தினை அகழ்ந்து சோதனை நடத்த நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்துடன் வீட்டில் குடியிருந்த கணவன் , மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்களது உறவினர் முறையான இளைஞன் ஒருவர் ஆகிய மூவரை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா ,சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன் முன்னிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த போது , சுமார் 6 அடி ஆழமுள்ள  கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் மற்றுமொரு கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளையும்   மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3-8-600x338.jpg

https://athavannews.com/2022/1275875

  • கருத்துக்கள உறவுகள்

3 லட்சத்திற்கு கொலையா? மிகவும் கவலையான விடயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணியந்தோட்டத்தில் பெண் அடித்துக்கொலை – நடந்தது என்ன?

அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் குடும்பப்பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைப்பதற்கு இளைஞனின் தாயின் சகோதரி தூண்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2ஆம் திகதி காணாமற்போன குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கடந்த வாரம் மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பி.யசிந்தா (வயது-44) என்பவரே கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவுமுறையான 20 வயதுடைய இளைஞன் ஆகிய மூவர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் மற்றும் நிபுணத்துவ விசாரணைகளில் இந்தக் கொலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் வருமாறு;

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்துக்கு கடற்தொழில் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக மாதம் 25 சதவீத மீற்றர் வட்டிக்கு 3 இலட்சம் ரூபாய் மீளச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொல்லப்பட்ட பெண் வழங்கியுள்ளார்.

அந்தப் பணம் மீள வசூலிப்பதற்காக குடும்பப் பெண் பல தடவைகள் அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளார். எனினும் பணத்தை உரிய தவணையில் செலுத்துமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் வட்டிக்கு பணம் வழங்கிய பெண்ணை கொலை செய்ய பணம் வாங்கிய பெண், தனது சகோதரியின் மகனுடன் திட்டமிட்டுள்ளார். அதற்காக இளைஞனுக்கு ஹெரோயின் வாங்குவதற்கு பணம் வழங்கியுள்ளார்.

கடந்த மார்ச் 2ஆம் திகதி அந்த வீட்டுக்கு பணத்தை வசூலிக்க பெண் சென்றுள்ளார். அங்கு குடும்பத்தலைவர் கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரியின் மகனும் இருந்துள்ளனர்.

பணம் கேட்டுச் சென்ற குடும்பப்பெண்ணின் தலையில் இளைஞன் இரண்டு தடவைகள் மொட்டையான ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். அதனால் அந்தப் பெண் சரிந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார். அதன் பின்னர் சிறிய தாயாரும் இளைஞனும் சேர்ந்து தலைணையை முகத்தில் அமத்தி பெண்ணை கொலை செய்துள்ளனர்.

கடற்தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய குடும்பத்தலைவர் வீட்டுக்குள் கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தைக் கண்டு முரண்பட்டுள்ளார். அதனையடுத்து வீட்டு வளாகத்துக்குள் பள்ளம் தோண்டி பெண்ணின் சடலத்தைப் புதைத்துள்ளனர்.

எனினும் கொல்லப்பட்ட பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் வீட்டு வளாகத்துக்குள் நின்றுள்ளது. மறுநாள் அதனைப் புதைப்பதற்கு தொழிலாளி ஒருவரை அழைத்து குப்பை கொட்டுவதற்கு என பள்ளம் தோண்டியுள்ளனர். அதற்குள் மோட்டார் சைக்கிளைப் புதைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இளைஞனுக்கு ஹெரோயின் வாங்க பணம் கொடுக்க அவரது சிறிய தாயார் சில நாள்களாக மறுத்துவந்துள்ளார். அதனால் மற்றொரு வட்டிக்கொடுக்கும் நபரிடம் சென்ற இளைஞன், “வட்டி அக்காவை கொலை செய்து புதைத்துள்ளேன், பணம் தராவிடின் யாரையும் அப்பிடிதான் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

இளைஞன் போதையில் அலம்புவதாக அந்த நபர் விட்டுள்ளார். எனினும் காணாமற்போன பெண் தொடர்பில் பேசப்பட்டதனால் இளைஞன் தன்னிடம் கூறியதை அந்த நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அதனையடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். கணவன், மனைவி மற்றும் உறவுமுறை இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் அவர்களது வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டனர்.

 

https://www.virakesari.lk/article/125637

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பெண் யசிந்தாவுக்கு நடந்த கொடூரத்தை எண்ணப் பாவமாக இருக்கிறது. மறுபுறம் 25 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்து, தவிச்ச முயல் அடிப்பதுபோல், ஏழை எளியவர்களிடமும் பெரும் கொள்ளை அடித்திருப்பாரே என்பதை எண்ணும்போது, மனம் வேதனையும் கொள்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.