Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதியரசர் பகவதியை அவமதித்த சிங்களர் -ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் பகவதியை அவமதித்த சிங்களர்

ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்.

இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமன்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது "சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு" என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி ஆவார்.

ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை இராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இலங்கையைச் சேர்ந்த எட்டுப்பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை விசாரணைக் கமிஷன்கள் சட்டப்படி அதிபருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் உள்ளன. விசாரணை கமிஷனின் உறுப்பினர்கள் யாவரும் அதிபரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களென்று அந்தச் சட்டம் கூறுகிறது. விசாரணை கமிஷன் தலைவரது ஒப்புதல் பெறாமலேயே கமிஷனின் உறுப்பினர்களை நீக்கவும், நியமிக்கவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை கமிஷன் நடுநிலையாக இயங்க முடியாது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் முதலிய மனித உரிமை அமைப்புகள் விமர்சித்து வந்தன.

இந்த நெருக்கடியின் காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கை அரசின் விசாரணை கமிஷனது நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்படுமென அறிவித்தார். பல்வேறு நாடுகளும் இந்தக் குழுவுக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் "சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு" ஆகும். அதன் தலைவராக இருக்கும் நீதிபதி பி.என். பகவதியைச் சேர்த்து மொத்தம் பதினோரு பேர் அந்தக் குழுவில் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் டூயி, பங்களாதேஷைச் சேர்ந்த டாக்டர் கமால் ஹுசைன், சைப்ரஸ் நாடடைச் சேர்ந்த ஆன்ட்ரூ மாங்ரோ மாட்டிஸ் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அரசின் விசாரணைக் கமிஷனுடைய செயல்பாடுகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி ஆவணங்களைப் பார்வையிடவும் சாட்சிகளை விசாரிக்கவும் சர்வதேசக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இடைக்கால அறிக்கையொன்றை அந்தக் குழு அதிபரிடம் அளிக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜூன் முதல் தேதி சர்வதேசக் குழு தனது இடைக்கால அறிக்கையை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வழங்கியது. அதைப் பெற்றுக்கொண்டபின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தமக்கு திருப்தியளிக்கின்றன என்று ராஜபக்சே கூறியிருந்தார்.

இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனின் நடவடிக்கைகளைப் பற்றி அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு தனது அபிப்பிராயங்களை விரிவாக எடுத்துரைத்திருந்தது.

அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு எத்தகைய கருத்துக்களைத் தெரிவித்தது என்ற குழப்பம் மக்களிடம் நிலவிவந்த சூழலில்தான் பகிரங்க அறிக்கையொன்றை சர்வதேசக் குழு வெளியிட்டது.

விசாரணைக் கமிஷனின் நடவடிக்கைகள் பற்றித் தமது கடுமையான அதிருப்தியை சர்வதேசக் குழு அந்த அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது. "2006-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட போதிலும் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை அது முதற்கட்ட விசாரணைகளைக் கூட நடத்தவில்லை. விசாரணை மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல் முதலியவற்றுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை" என்று சர்வதேசக் குழு வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி "இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகாரமோ, சக்தியோ விசாரணைக் கமிஷனுக்கும் இல்லை. சர்வதேசக் குழுவுக்கும் இல்லை. ஆனால், அத்தகைய அதிகாரம் இந்த அமைப்புகளுக்கு இருப்பதுபோல இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு பொய்யான கருத்தைப் பரப்பி வருகின்றனர்" என்றும் அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குழுவின் இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஆக்ஷன் கோந்தர் லா ஃபேம்" என்ற தொண்டு நிறுவனத்தின் பதினேழு ஊழியர்கள் இலங்கையில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருந்த அந்த ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டனர். திரிகோணமலை மாவட்டம் மூதூரில் நடந்த அந்தப் படுகொலை சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச நெருக்குதலின் காரணமாகவே ராஜபக்சே, விசாரணைக் கமிஷனை அமைத்தார். அதன்பின்பும் விமர்சனங்கள் தொடர்ந்ததால் சர்வதேசக் குழுவையும் ஏற்படுத்தினார். அவற்றை அமைத்ததன் மூலம் சர்வதேச அமைப்புகளின் வாயை மூடிவிடலாம் என்பதுதான் ராஜபக்சேவின் திட்டம், விசாரணைக் கமிஷன் அமைத்ததாகவும் இருக்க வேண்டும், உண்மைகள் வெளிப்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்படுத்தப் பட்டவைதான் இந்த அமைப்புகள்.

சர்வதேச அளவில் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்ததன் மூலம் தமது அரசின் நடவடிக்கைகளுக்கு அந்த நாடுகளின் ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ராஜபக்சே முயற்சித்தார். அதைத்தான் இப்போது நீதிபதி பி.என். பகவதி அம்பலப்படுத்தி உள்ளார்.

சர்வதேசக் குழுவின் பகிரங்க அறிக்கை வெளியானதும் ஆத்திரமடைந்த சிங்கள அரசு நீதிபதி பகவதியைக் கடுமையாக விமர்சித்தது.

இலங்கையின் அட்டர்னி ஜெனரல், "சர்வதேசக் குழு தனது வரம்பை மீறிவிட்டது" எனக் கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து ஜூன் பதினைந்தாம் தேதி சர்வதேசக் குழு தனது இரண்டாவது பகிரங்க அறிகையை வெளியிட்டது. விசாரணைக் கமிஷன் முறையாகச் செயல்படாததற்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகமே காரணம் என்று குறிப்பிட்டிருந்த நீதிபதி பகவதி தேசிய, சர்வதேசிய சட்டங்களுக்குப் புறம்பான முறையில் அட்டர்னி ஜெனரலின் அணுகுமுறை உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தார். நீதிபதி பகவதி தலைமையிலான குழுவில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பதால் இந்தப் பிரச்சினை பெரிதாகிவிடாமல் கட்டுப்படுத்தும் விதமாக ராஜபக்சே தலையிட்டு சமாதான கடிதமொன்றை நீதிபதி பகவதிக்கு எழுதியிருக்கிறார். இதனிடையே சர்வதேச குழுவின் இடைக்கால அறிகையை ஆய்வு செய்ய ராஜபக்சே இன்னொரு கமிட்டியை நியமிக்கப்போகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையெல்லாம் சர்வதேச சமூகத்தை ஏய்ப்பதற்கு சிங்கள அரசு ஆடும் நாடகங்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இலங்கை விவகாரம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்து முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டு வரும் "இன்டர்நேஷனல் க்ரைசிஸ்" குரூப்" என்ற அமைப்பு ஜுன் பதினான்காம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் இலங்கை அரசின் விசாரணை கமிஷன் பற்றி கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் ஆதரவோடு நடத்தப்படும் படுகொலைகள் ஜனநாயகத்துக்கு சவாலாக உள்ளன. சர்வதேச சமூகம் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் மேலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கும் அந்த அறிக்கை, ஐ.நா. சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என வற்புறுத்தியுள்ளது.

- ஜுனியர் விகடன்

நவம்பர் 2005க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.

ராஜபக்சே இலங்கை அரசின் விசாரணை கமிஷனது நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்படுமென அறிவித்தார்.

சர்வதேச குழுவின் இடைக்கால அறிகையை ஆய்வு செய்ய ராஜபக்சே இன்னொரு கமிட்டியை நியமிக்கப்போகிறார்

இதற்கெல்லாம் என்ன அர்த்தம், எப்படி இதை சர்வவேச சமுகம் ஜீரணிக்கின்றது?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஒத்து ஊதுகின்றது (ஜால்ரா போடுகின்றது) என்று அர்த்தம்.சர்வதேசம் தமிழர்கட்கு ஒன்றுமே செய்யாது தங்களின் சுய நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.