Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த தலைமையில்... அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும், முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

மஹிந்த தலைமையில்... அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும், முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆரதவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.

புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.

அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

https://athavannews.com/2022/1277836

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களை மாற்றி என்ன முன்னேற்றம் உண்டாகும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

அமைச்சர்களை மாற்றி என்ன முன்னேற்றம் உண்டாகும்?

அமைச்சர்களை மாற்றுவதால்… முன்னேற்றம் இல்லை என்று,
கோத்தா, மகிந்த ஆகியோருக்கும் தெரிந்து இருக்கும்.
கோத்தா வீட்டுக்குப் போ… போராட்டம் ஆரம்பித்தவுடன், ஜனாதிபதி இடத்தைப் பிடிக்க…
பசில் ராஜபக்ச திட்டம் போட்டவராம். 
மகிந்தவால் மூன்றாம் முறை ஜனாதிபதியாக வர முடியாது என்பதால்….
பசிலுக்கு அந்த ஆசை வந்திருந்தது.

ஆனால்…. மகிந்தவுக்கும், மனைவி சிராந்திக்கும்…. நாமலை ஜனாதிபதி ஆக்கும் எண்ணம் இருந்தது. அதனால்… பசிலை, தனியே அமைச்சரவையை விட்டு நீக்கினால்….
சகோதர சண்டை அம்பலப் பட்டுப் போகும் என்பதற்காக….
ஒட்டு மொத்த அமைச்சரவையையே… ராஜினாமா செய்வதாக அறிவித்த போது,
பல அமைச்சர்களும் உடனே ராஜினாமா செய்து விட்டார்கள்.
பசில் கடைசி வரை… ராஜினாமா கடிதத்தை கொடுக்காமல் இழுபறிப் பட்டு,
அடுத்த நாள் தான் கொடுத்தார். பசிலால் தமது பதவிக்கு வர இருந்த நெருக்கடியை சமாளித்து விட்டாலும்…

மக்கள்   போராட்டம் தொடர்வதால்….
நாமல்…. ஜனரதிபதியாக வருவதில், கோத்தாவுக்கு விருப்பம் இல்லை.
அதனால்…. சிராந்தி ராஜபக்ச, கோத்தா மீது… பயங்கர கடுப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

அமைச்சர்களை மாற்றுவதால்… முன்னேற்றம் இல்லை என்று,
கோத்தா, மகிந்த ஆகியோருக்கும் தெரிந்து இருக்கும்.
கோத்தா வீட்டுக்குப் போ… போராட்டம் ஆரம்பித்தவுடன், ஜனாதிபதி இடத்தைப் பிடிக்க…
பசில் ராஜபக்ச திட்டம் போட்டவராம். 
மகிந்தவால் மூன்றாம் முறை ஜனாதிபதியாக வர முடியாது என்பதால்….
பசிலுக்கு அந்த ஆசை வந்திருந்தது.

ஆனால்…. மகிந்தவுக்கும், மனைவி சிராந்திக்கும்…. நாமலை ஜனாதிபதி ஆக்கும் எண்ணம் இருந்தது. அதனால்… பசிலை, தனியே அமைச்சரவையை விட்டு நீக்கினால்….
சகோதர சண்டை அம்பலப் பட்டுப் போகும் என்பதற்காக….
ஒட்டு மொத்த அமைச்சரவையையே… ராஜினாமா செய்வதாக அறிவித்த போது,
பல அமைச்சர்களும் உடனே ராஜினாமா செய்து விட்டார்கள்.
பசில் கடைசி வரை… ராஜினாமா கடிதத்தை கொடுக்காமல் இழுபறிப் பட்டு,
அடுத்த நாள் தான் கொடுத்தார். பசிலால் தமது பதவிக்கு வர இருந்த நெருக்கடியை சமாளித்து விட்டாலும்…

மக்கள்   போராட்டம் தொடர்வதால்….
நாமல்…. ஜனரதிபதியாக வருவதில், கோத்தாவுக்கு விருப்பம் இல்லை.
அதனால்…. சிராந்தி ராஜபக்ச, கோத்தா மீது… பயங்கர கடுப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.

சிறி, இது உண்மையான, கேள்விப்பட்ட கதையா அல்லது இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்தது போலவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நீர்வேலியான் said:

சிறி, இது உண்மையான, கேள்விப்பட்ட கதையா அல்லது இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்தது போலவா?

நீர்வேலியான்…. இதனைப் பற்றி, சில பத்திரிகையாளர்களும் சொன்னார்கள்.
இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை உடனடியாக இல்லாமல், சிறிது காலத்தில் ஏற்படுத்த மேற்குலகு விரும்புகின்றதாம்….. அதற்காக அனுப்பி வைக்கப் பட்டவர்தான், புதிய அமெரிக்க தூதுவரும், பசில் ராஜபக்சவும் என்கிறார்கள்.

மகிந்த, கோத்தா மேல்…. இன்னும் மக்கள் வெறுப்பு ஏற்பட்டு..
மீண்டும் அரசியலுக்கு வராமல் பண்ணுவதற்குத்தானாம்…
அந்த கால தாமதம் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்க, அப்படித்தான் தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:
53 minutes ago, நீர்வேலியான் said:

சிறி, இது உண்மையான, கேள்விப்பட்ட கதையா அல்லது இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்தது போலவா?

நீர்வேலியான்…. இதனைப் பற்றி, சில பத்திரிகையாளர்களும் சொன்னார்கள்.
இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை உடனடியாக இல்லாமல், சிறிது காலத்தில் ஏற்படுத்த மேற்குலகு விரும்புகின்றதாம்….. அதற்காக அனுப்பி வைக்கப் பட்டவர்தான், புதிய அமெரிக்க தூதுவரும், பசில் ராஜபக்சவும் என்கிறார்கள்.

மகிந்த, கோத்தா மேல்…. இன்னும் மக்கள் வெறுப்பு ஏற்பட்டு..
மீண்டும் அரசியலுக்கு வராமல் பண்ணுவதற்குத்தானாம்…
அந்த கால தாமதம் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்க, அப்படித்தான் தெரிகின்றது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.