Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோலோகமி: தன்னைத் தானே மணந்துகொள்ள இருக்கும் குஜராத்திப் பெண் கிளப்பும் விவாதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோலோகமி: தன்னைத் தானே மணந்துகொள்ள இருக்கும் குஜராத்திப் பெண் கிளப்பும் விவாதங்கள்

  • கீதா பாண்டே
  • பிபிசி செய்திகள், டில்லி
3 ஜூன் 2022
 

பிந்து

பட மூலாதாரம்,KSHAMA BINDU

தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் 'சோலோகமி' எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது.

ஜூன் 11ம் தேதி, மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது.

அப்போது, மணப்பெண்ணுக்கான சிவப்புப் புடவையணிந்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, புனிதத் தீயை ஏழுமுறை அவர் வலம் வரப்போவதாக என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.

வடக்கிந்திய திருமணங்களில் நடைபெறும் மஞ்சள் பூசும் நிகழ்வு, சங்கீத் போன்றவையும் நடைபெறும். திரும்ணத்திற்குப் பின் அவர் இரண்டு வார தேனிலவுக்காக கோவா செல்கிறார்.

ஆனால், பிந்துவின் திருமணத்தில் ஒரு விஷயம் மட்டும் இருக்காது — மாப்பிள்ளை.

'என்னை முழுமையாக ஏற்கிறேன், பலவீனங்களோடு'

ஆம், பிந்து 'தன்னைத்தானே மணந்துகொள்ள' திட்டமிட்டிருக்கிறார். இது இந்தியாவின் முதல் 'சோலோகமி' திருமணமாக இருக்கலாம்.

"பலரும் என்னை 'மணந்துகொள்வதற்கு சிறந்த பெண்' என்று சொல்கிறார்கள்," என்கிறார் 24 வயதான சமூகவியல் மாணவரும் ப்ளாகருமான பிந்து. "நான் அவர்களிடம் சொல்கிறேன், 'நான் என்னையே மணந்துகொள்கிறேன்'."

தன்னைத் தானே மணப்பதால், தன் வாழ்வை "சுய காதலுக்கு" அர்ப்பணிக்கப்போவதாக அவர் சொல்கிறார்.

"தன்னையே மணந்துகொள்வது என்பது உங்களுக்காக நீங்களே இருப்பீர்கள் என்ற பொறுப்பு, மிகவும் உயிரூட்டமுள்ள, அழகான, மிக்க மகிழ்ச்சியான நபராக நீங்கள் வளர்ந்து பரிணமிக்க உதவும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தேர்ந்தெடுப்பது".

"இது நான் என்னுடைய அத்தனை பக்கங்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கும் ஒரு வழி. குறிப்பாக, நான் மறுக்க முயன்ற, புறந்தள்ள முயன்ற என் முகங்கள், உதாரணத்துக்கு என்னுடைய பலவீனங்கள் — அவை உடல் ரீதியான, மன ரீதியான, உணர்வு ரீதியான பலவீனங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்".

"என்னைப் பொறுத்தவரை, இத்திருமணம், என்னையே நான் முழுமையாக ஏற்றுக்கொளும் ஒரு செயல். நான் சொல்ல வருவது — நான் என்னையே ஏற்றுக்கொள்கிறேன், அழகாக இல்லாத என்னுடைய பக்கங்களையும் கூட."

தனது குடும்பம் தம்மை வாழ்த்தியதாகவும், தனது நண்பர்கள் திருமணத்திற்கு வரவிருப்பதாகவும் பிந்து சொல்கிறார்.

" 'நீ எப்போதும் புதுசா எதாவது யோசிப்ப', என்று என் அம்மா சொன்னார். ஆனால் எனது பெற்றோர், திறந்த மனதுடையவர்கள், இதை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். 'நீ சந்தோஷமாக இருந்தால் எங்களுக்கு அது போதும்,' என்றார்கள்," என்கிறார் பிந்து.

தொலைக்காட்சியிலிருந்து வாழ்க்கைக்கு

தன்னையே மணந்துகொள்ளும் முறை முதன் முதலில் அறிமுகமானது 20 வருடங்களுக்கு முன்பு. 'Sex and the City' என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் வரும் கேரி ப்ராட்ஷா (Carrie Bradshaw) எனும் பாத்திரம் இதைப்பற்றிப் பேசியது. ஆனால் அது ஒரு நகைச்சுவை தொடர்.

 

திருமண அழைப்பிதழ்

பட மூலாதாரம்,KSHAMA BINDU

அப்போதிருந்து இத்தகைய திருமணங்கள் நூற்றுக்கணக்கில் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன — பெரும்பாலும் பெண்கள் இதை செய்திருக்கிறாகள். இன்னொரு விசித்திரமான சம்பவத்தில், தன்னைத் தானே மணந்த 33 வயதன பிரேசில் நாட்டுப் பெண், மூன்று மாதங்களில் தன்னையே விவாகரத்து செய்தார்.

இந்த டிரெண்டைச் சார்ந்து பல வணிக முயற்சிகளும் தோன்றியிருக்கின்றன — திருமண ஆடைகள், மோதிரங்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவை.

ஆனால் இவையெல்லம் இன்னும் இந்தியாவில் நடக்காததனால், பிந்துவின் திருமணம் பேசுபொருளாகியிருக்கிறது.

விவாதங்கள்

மறுபுறம் மனநல நிபுணர்கள் சோலோகமி சொல்ல வரும் கருத்தினால் 'ஆச்சரியப் படுகிறார்கள்'.

"இது எனக்கு மிகவும் விசித்திரமான கருத்தாகத் தோன்றுகிறது," என்கிறார் மனநல மருத்துவப் பேராசிரியரும், சண்டிகரின் PGIMER Hospitalன் முன்னாள் முதல்வருமான டாக்டர் சவிதா மல்ஹோத்ரா.

"அனைவரிடமும் சுய காதல் உண்டு," என்கிறார் அவர். ஆனால் அதை நிரூபிக்க இதுபோன்ற செயல்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறார். "மேலும் திருமணமென்பது, இருவர் இணைவது."

சமூக வலைதளங்களில் இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சிலர் பிந்துவின் முடிவைப் பாராட்டினாலும், பலர் சோலோகமியைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்.

ட்விடரில் ஒருவர் 'இன்னொருவர் இல்லாதது எப்படி திருமணம் ஆகும்?' என்றார், இன்னொருவர், பிந்து குடும்பப் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்ப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

சிலர் இதனை ஒரு 'வினோதமான, துயரமான' விஷயம் என்கிறார்கள்.

ஆனால் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பிந்து சொல்வது இதுதான்: "யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் — அது ஒரு ஆணோ, பெண்ணோ, அல்லது என்னையேவோ. என்னையே மணந்துகொள்வதன்மூலம் சோலோகமியை இயல்பான ஒன்றாக்க நினைக்கிறேன். நாம் இந்த உலகத்துக்கு தனியாகத்தான் வருகிறோம், தனியாகத்தான் போகப்போகிறோம். அதனால் நம்மைத் தவிர நம்மை வேறு யார் அதிகமாக நேசிக்க முடியும்? நீங்கள் இடறி விழுந்தால், நீங்களே தான் உங்களை தூக்கி நிறுத்த வேண்டும்."

https://www.bbc.com/tamil/india-61682694

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலிகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்

ன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது.

spacer.png

சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா பிந்து அறிவித்தார். இதற்கு முன்பு இதுபோன்ற திருமணத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிப் பார்த்து அவ்வாறு யாரும் செய்துகொள்ளவில்லை என்பதையும் அவர் அறிந்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது திருமணத்தை செய்ய விரும்பினார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

ஜூன் 11 ம் திகதி அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் முடிவு செய்திருந்தார். எனினும், அக்கம்பக்கத்து வீட்டாரின் எதிர்ப்பால் திருமணத்தை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துவிட்டார். மேலும் வேறு வகையில் பிரச்சினைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர் திருமணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்திருக்கிறார்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள கோத்ரி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவரது திருமணம் நேற்று நடைபெற்றது. மொத்தம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்ச்சியில் அவரது தோழிகளும், அலுவலக சகாக்களும் கலந்து கொண்டனர்.

தனக்குத்தானே நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்ட ஷாமா பிந்து, திருமணம் நடந்ததற்கான அடையாளமாக திருமாங்கல்யத்தையும் அவரே கழுத்தில் கட்டிக் கொண்டார்.

மணமகன் இல்லாமல் இந்தத் திருமணம் இனிதே நிறைவு பெற்றது. இந்தியாவில் இதுபோன்ற ஒரு திருமணம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

spacer.png

இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில், “இந்தத் திருமணத்தை கோயிலில் நடத்தலாம் என்று விரும்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக திருமணம் நடைபெற்ற இடத்தை மாற்றிவிட்டேன். எனது வாழ்க்கையில் என்னை நானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள 7 வாக்குறுதிகளை திருமணத்தின்போது படித்தேன்” என்றார் ஷாமா பிந்து.

 

https://thinakkural.lk/article/182206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜக எதிர்ப்பை மீறி திருமணம்: தன்னைத் தானே மணந்துகொண்டார் குஜராத்தின் ஷாமா பிந்து

10 ஜூன் 2022, 05:09 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஷாமா பிந்து

பட மூலாதாரம்,KSHAMA BINDU

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (10/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். பாஜக தலைவர் ஒருவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர் இந்து திருமணச் சடங்கு முறையைப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றுறு (வியாழக்கிழமை) ஷாமா பிந்து இந்து திருமண சடங்குகள்படி தன்னையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் பிந்துவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர் என, 'இந்து தமிழ் திசை' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ': சென்னை ஐஐடிகண்டுபிடிப்பு

 

கழிவுநீர் தொட்டி

பட மூலாதாரம்,SUDHARAK

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ' கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்து உள்ளது என, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், "இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால், 'ஹோமோசெப்' ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. இது தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 எந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டு உள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், எந்திரப் பொறியியல் துறை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் ரோபோவை உருவாக்கி உள்ளனர். தூய்மைப் பணியாளர்களே ஆபரேட்டர்களாக பணியாற்றுவார்கள். ரோபோவை முழுமையாக கையாளவும், இயக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-61754945

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டேன்'' Sologamy Marriage | Kshama Bindu Marriage | Gujarat

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

''எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டேன்'' Sologamy Marriage | Kshama Bindu Marriage | Gujarat

 

தாலி கட்டிக்கொள்வதற்காக ஒரு திருமணமா ? 

வெகு விரைவில்  அவர் தனக்குத்தானே விவாகரத்தும் செய்துகொள்வார் என நம்பலாம். 

🤣

பிந்துவின் பெயர் எப்படி மாற்றமடையும் ? 

தகப்பனின் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவாரா அல்லது 

Kshama Bindu, Kshama Bindu என வருமா? 

குறிப்பு chart, முகூர்த்தம் எல்லாம் பார்த்துத்தான் திருமணம் நடந்ததா? 

..........இப்படி கேள்வி மேல் கேள்வி போட்டுக்கொண்டே இருக்கலாம்...🤣🤣

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.