Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்!

பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மே 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

police-2-600x265.png

https://athavannews.com/2022/1286308

  • கருத்துக்கள உறவுகள்

பலவருடங்களுக்கு முன் இது நான் நம்பிக்கையோடு எழுதியது. இன்று ஓரளவு பொருந்துகிறது, ஏற்கெனவே பதிந்தேனோ தெரியவில்லை. அதனால் இப்போ இணைக்கிறேன்.

என் இனத்தின் கதையை முடித்துவிட்டேன் என கனவு கண்டாய் நீ!

நினைத்தாயா கதை மாறுமென?

மேடையேறி பைத்தியம் போல் உளறுகிறாய்,

உன்னை நீயே பாராட்டுகிறாய் மாலை போட்டு!

ஊழிக்கூத்துக்கு கூடி உடுக்கடித்த கூட்டம்

ஊமையாய் தலைகுனிந்து இப்போ தப்புத்தாளம் போடுது,

நீ போட்ட வேஷம் வெளியே தெரிய வர

நல்ல பிள்ளையாய் நீ நடிக்க வெளிக்கிட்டு

தனித்தீவாகி விட்டாய், உணரவில்லை  உன்   நிலையை   நீ!

உன்னோடு கைகொடுத்தவரெல்லாம்  தயங்குகிறார்கள்.

முடிந்தது கதை மறைத்துவிட்டேன் உண்மையை,

அடக்கி விட்டேன் தமிழரை, மறந்து விட்டனர் யாவற்றையும்

என கணக்கு போட்டாய்.

உன்னால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு ஆவியும் ஒவ்வொரு விதமாய் துரத்தும் உன்னை.

மரணத்திற்காய் மறத்தி உன்னை மன்றாடி இருக்க மாட்டாள்,

மானமிழந்த மிருகங்களினால் தன் கற்பு பறி போய் விடக்கூடாதே என்று தான் கெஞ்சியிருப்பாள். 

கறை படியா  வெள்ளைத்துணியைபோர்த்தி சிரித்த முகத்துடன் வந்தாளாம்,

கதை அளிக்கிறான் காட்டுமிராண்டி!

பத்து வேடைநாய்,  நிர்வாண உடல், வருமா சிரிப்பு?

இரத்தக்காட்டேரிகளிடம் காவு போகப் போகிறேனே என பேதலித்தவளை

பேலிப்பயல் விளங்காமல் உளறுகிறான்.

கற்போடு வாழ்ந்த கன்னியின் கற்பு காக்க

இயற்கை அன்னை கொடுத்த சேலையை

கந்தையாக்கினாய், காரிகையோடு சேர்த்து.

முடிந்தது கதையென்று பேர் கொட்டினாய்

நினைத்தாயா? இடிபோல ஒவ்வொரு உயிரும் எழுமென்று!   

மக்ரேயின் சணல் பொய்யென்று உலகம் சொல்கிறதென்றாய்,

விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என

ஓடுகிறாய் ஒவ்வொரு நாட்டிலுமிருந்து.

இருந்துப்பார்! விதி உன் கதையை முடிக்காதிருந்தால்,

ஊத்தையளையும், பொய்களையும்  சரித்திரமாய் கொண்ட

உன் மகா வம்ஷமும், மஹிந்த சிந்தனையும் உன்னை காறி உமிழும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பலவருடங்களுக்கு முன் இது நான் நம்பிக்கையோடு எழுதியது. இன்று ஓரளவு பொருந்துகிறது, ஏற்கெனவே பதிந்தேனோ தெரியவில்லை. அதனால் இப்போ இணைக்கிறேன்.

என் இனத்தின் கதையை முடித்துவிட்டேன் என கனவு கண்டாய் நீ!

நினைத்தாயா கதை மாறுமென?

மேடையேறி பைத்தியம் போல் உளறுகிறாய்,

உன்னை நீயே பாராட்டுகிறாய் மாலை போட்டு!

ஊழிக்கூத்துக்கு கூடி உடுக்கடித்த கூட்டம்

ஊமையாய் தலைகுனிந்து இப்போ தப்புத்தாளம் போடுது,

நீ போட்ட வேஷம் வெளியே தெரிய வர

நல்ல பிள்ளையாய் நீ நடிக்க வெளிக்கிட்டு

தனித்தீவாகி விட்டாய், உணரவில்லை  உன்   நிலையை   நீ!

உன்னோடு கைகொடுத்தவரெல்லாம்  தயங்குகிறார்கள்.

முடிந்தது கதை மறைத்துவிட்டேன் உண்மையை,

அடக்கி விட்டேன் தமிழரை, மறந்து விட்டனர் யாவற்றையும்

என கணக்கு போட்டாய்.

உன்னால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு ஆவியும் ஒவ்வொரு விதமாய் துரத்தும் உன்னை.

மரணத்திற்காய் மறத்தி உன்னை மன்றாடி இருக்க மாட்டாள்,

மானமிழந்த மிருகங்களினால் தன் கற்பு பறி போய் விடக்கூடாதே என்று தான் கெஞ்சியிருப்பாள். 

கறை படியா  வெள்ளைத்துணியைபோர்த்தி சிரித்த முகத்துடன் வந்தாளாம்,

கதை அளிக்கிறான் காட்டுமிராண்டி!

பத்து வேடைநாய்,  நிர்வாண உடல், வருமா சிரிப்பு?

இரத்தக்காட்டேரிகளிடம் காவு போகப் போகிறேனே என பேதலித்தவளை

பேலிப்பயல் விளங்காமல் உளறுகிறான்.

கற்போடு வாழ்ந்த கன்னியின் கற்பு காக்க

இயற்கை அன்னை கொடுத்த சேலையை

கந்தையாக்கினாய், காரிகையோடு சேர்த்து.

முடிந்தது கதையென்று பேர் கொட்டினாய்

நினைத்தாயா? இடிபோல ஒவ்வொரு உயிரும் எழுமென்று!   

மக்ரேயின் சணல் பொய்யென்று உலகம் சொல்கிறதென்றாய்,

விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என

ஓடுகிறாய் ஒவ்வொரு நாட்டிலுமிருந்து.

இருந்துப்பார்! விதி உன் கதையை முடிக்காதிருந்தால்,

ஊத்தையளையும், பொய்களையும்  சரித்திரமாய் கொண்ட

உன் மகா வம்ஷமும், மஹிந்த சிந்தனையும் உன்னை காறி உமிழும்.

அடேங்கப்பா.... சாத்தானுக்கு, கவிதையும் எழுத வருமா.
நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட வலிகள் உணர்ச்சியை தூண்டியது சிறியர்! கிறுக்கி ஆறுதல் அடைந்தேன் அப்போது. அவ்வளவு வெறி! ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் எதிரியின் வீழ்ச்சியை காண.  என்னை காரணமில்லாமல் விழுத்தியவன், அதை ரசித்தவன் கால் தடக்கி விழுவான் என்று காலம் எனக்கு பலதடவை உணர்த்தியிருந்தது. வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு இந்தநாள் மகிழ்ச்சிக்காய்  காத்திருந்தேன், தவறவில்லை. நாங்களும் சேர்ந்துதான் அனுபவிக்கிறோம், இதை எங்களுக்கு விதியாக்கி மகிழ்ந்தவன்  அனுபவிப்பதில் எனது கவலை பாதியாகிவிட்டது.  இது நாங்களாக தேடவில்லை எங்கள்மேல் திணிக்கப்பட்டது. ஆனால் இது அவன்  தானாக தேடிக்கொண்டது வெற்றி மமதையில்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழிச்சியின் வலியை இதைவிட உயிர்ப்பாய் எந்தக் கவிஞனாலும் சொல்ல முடியாது.......தலைவணங்குகிறேன் satan எங்களின் மனவலியை வெளிப்படுத்தியதற்கு......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, suvy said:

ஒரு தமிழிச்சியின் வலியை இதைவிட உயிர்ப்பாய் எந்தக் கவிஞனாலும் சொல்ல முடியாது.......தலைவணங்குகிறேன் satan எங்களின் மனவலியை வெளிப்படுத்தியதற்கு......!  🌹

நன்றி சிறியர், சுவியர் உங்களுக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.