Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார்.  யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும்.

கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடுத்திருந்தும், அது தொடர்பான கள உறுப்பினர்களின் ஆதங்கங்களை உள்வாங்கிக்கொண்டு, கருத்துக்களத்தை மூடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்ததும் யாழ் இணைய உறுப்பினர்கள் ஏலவே அறிந்த விடயம். பல்வேறு சமூகவலைத் தளங்கள் உலவும் இன்றைய ஆசுவாசமற்ற அவசர உலகில், ஆழமானதும், காத்திரமானதுமான உரையாடல்களை எதிர்பார்ப்பாகக்கொண்ட யாழ் இணையமானது தனது சேவையின் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டுவருகின்றது என்பது ஓர் கசப்பான யதார்த்தம்.  

முகநூல், ற்விற்றர் போன்ற சமூகவலைத் தளங்களில் வருகையினால் கருத்தாடல்களின் கண்ணியம் குறைந்தது ஒரு சமூகமாற்றமாகவே உள்ளது. அத்தகைய கண்ணியமில்லாத கருத்துக்களும் யாழ் கருத்துக்களத்தில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதும், காத்திரமான விவாதங்கள் இல்லாதததும், யாழ் இணையத்தின் ஆக்கற்களத்தில் கள உறுப்பினர்களின் படைப்புக்கள் அருகிவருவதும் கண்கூடு.

களவிதிகளை மீறும் பதிவுகளை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு பதிவுகளிலும் முறைப்பாடு வசதி உள்ளது. எனினும் கள உறுப்பினர்கள் விதிகளை மீறும் பதிவுகளை முறைப்பாடு செய்வது ஏறக்குறைய பூச்சியமாகவே உள்ளது. மாறாக, சில கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறும் பதிவுகள் உள்ள திரிகளில் தொடர்ச்சியாக விதிகளை மீறும் பதிவுகளை இடுவதும்,  அவை நிர்வாகத்தின் பார்வைக்கு வந்து மட்டுறுத்தப்பட்டால் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுவதையும் ஒரு வழமையாகக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதற்கு முக்கிய காரணம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வாசிக்காமல் உள்ளமைதான்.

அத்தோடு யாழ் இணையத்தின் பார்வையாளர்களிலும், கருத்தாடலில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சரிவு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மேலும், யாழ் கருத்துக்களம் மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டபோது, தொடர்ந்தும் நடாத்தவேண்டும் என விரும்பிய கள உறுப்பினர்களில் பலர்கூட கருத்தாடலில் பங்குகொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது யாழ் இணையத்தைப் பார்க்காமலேயே உள்ளனர். நேரமின்மை என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நிர்வாகம் உணர்ந்துகொள்கின்றது. இதே நேரமின்மையால்தான் நிர்வாகமும் களவிதிகளை மீறும் பதிவுகளை மட்டுறுத்தமுடியாமல் உள்ளது.

இவ்வாறான யதார்த்த நிலைகளைப் புரிந்திருந்தும்,  தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும்,  யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக மட்டும் இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாகவும் ஓர் குறிப்பிட்ட காலம் வரை தொடர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

இம்முடிவு பற்றிய முக்கிய குறிப்புக்கள்:

  • யாழ் கருத்துக்களம் 25ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாள் (30.03.2023) வரை இப்போது உள்ள யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 க்கு அமைய நடாத்தப்படும்.
  • கருத்துக்களத்தில் தொடர்ந்தும் கருத்தாடலை அனுமதிப்பதா அல்லது தனியே பார்வைக்கு மட்டும் அனுமதிப்பதா என்பது பற்றிய தீர்மானம் யாழ் களம் 25 ஆவது அகவைக்குள் செல்லும் நாளில் (30.03.2023) தெரியப்படுத்தப்படும். யாழ் கருத்துக்களத்தின் போக்கு, கருத்துக்களின் பார்வை எண்ணிக்கை, கருத்தாடல்களின் தரவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
  • இணையவன், நிழலியுடன், நியானியும் யாழ் கருத்துக்களப் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். நுணாவிலான் தொடர்ந்தும் கருத்துக்கள நிர்வாகத்தில் இருந்து மட்டுறுத்தலுக்கு துணைபுரிவார்.
  • யாழ் இணையத்தை நடாத்த கள உறுப்பினர்களிடம் இருந்து பண உதவி ஏதும் கோரப்படமாட்டாது. கள உறுப்பினர்கள் கட்டண விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள உதவ முடிந்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • கருத்தாடலில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமலும், களவிதிகளை மதிக்காமலும் கருத்துக்கள் வைக்கும் கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையாகவோ, நிரந்தரத் தடையாகவோ கூட இருக்கலாம்.

யாழ் கருத்துக்களம் தொடர்ந்தும் இயங்க யாழ் கள உறவுகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

"நாமார்க்கும் குடியல்லோம்"


நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • Like 8
  • Thanks 11
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂
    • இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.