Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படுவதுடன், அவ்வாறு திகதிகள் வழங்கப்பட்ட சுமார் 600 பேரின் கடவுச்சீட்டுகள் நாளாந்தம் வழங்கப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வாடிக்கையாளர் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1288384

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்கள் உட்பட வெளிநாடு சென்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்! இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

Sri Lanka RefugeesSri Lanka Economic CrisisSri Lankan political crisis

1 மணி நேரம் முன்

 நாடு கடத்துமாறு அறிவித்தல்

உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்ற வைத்தியர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளியாக்கியுள்ளது.

பதிவி நீக்கம்

உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறாமல் வைத்தியர்கள் வெளிநாடு சென்றால், நிறுவன சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து விலகியவர்கள் என பதிவை நீக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சில வைத்தியர்களும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்வோர்

முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்த நாட்டுக்கு போயிருப்பார்கள் இவ்வளவு பேரும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச ஆட்கள்… அவுஸ்திரேலியாவுக்கு போய்க் கொண்டு இர்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் எதுவுமே உற்பத்தி,அபிவிருத்தி செய்யாமல் வெளிநாட்டு பணத்தை மட்டும் வைத்து என்ன செய்யப்போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள பவுத்த நாடு எனச்சொல்லி, தமிழரை வந்தேறு குடிகள் என அவர்களது பாரம்பரிய பூமியிலிருந்து விரட்டியடித்து, அகதிகளாக, ஏதிலிகளாக அலைய வைத்து மகிழ்ந்தவர்கள், இன்று அதே நிலையில். "நீ எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறாயோ, அதே அளவையால் உனக்கு திருப்பி அளக்கப்படும்." ராஜபக்ஷக்களும்,  இனவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நாள் வரும், அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.