Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுந்தூர் மலையில் விகாரைகட்ட சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை – புலம்பும் தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு  விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது.

வடக்கில் சிங்களவர்கள் இருக்க கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

போராட்டகாரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள். நாட்டை முன்னேற்றவும், ஊழல் மோசடியை ஒழிக்க வேண்டும் எனவும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மனிதாபிமானத்துடன் கருத்துரைக்கும் நபர்கள் வடக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க அவதானம் செலுத்தவில்லை.

தெற்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களினால் மக்கள் பொருளாதார ரீதியில் பயனடைகிறார்கள். வடக்கில் பெரும்பாலான தொல்பொருள் சின்னங்கள் உள்ளன.

600 தொல்பொருள் சின்னங்கள் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் தொல்பொருள் சின்னங்கள் அபிவிருத்தி செய்தால் வடக்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.

இதற்கு ஏன் தமிழ் தலைமைகள் என குறிப்பிட்டுக்கொள்கிறவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. தெற்கில் ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள், வடக்கில் தனி ஈழம் தொடர்பில் கருத்துரைத்து பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்.“ எனக் அந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

‘நாங்கள் இருவரும் வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றோம்.

குறிப்பாக குறுந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவேதான் எங்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையினை இந்த தேரர் முன்னெடுத்துள்ளார்.

தற்போது இலங்கையில் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக ஒருமித்து பயணிக்கும் நிலையில் இவ்வாறான சிலரின் செயற்பாடுகளினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதன்காரணமாகவே இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு நாம் தடைகளை ஏற்படுத்துகின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறுந்தூர் மலையில் விகாரைகட்ட சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை – புலம்பும் தேரர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் : நீதிமன்றத்தின் கட்டளையை  நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் : பொலிஸார் நகர்தல் பத்திரம் தாக்கல்

கே .குமணன் 

 

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் 14 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

IMG_4239.jpg

ஆனால் தற்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்றுவது   தொடர்பில் சிக்கல் நிலை இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகவும் இந்த கட்டளையை  நடைமுறை படுத்தினால் இனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படலாம் என தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

IMG_4241.jpg

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜென்ரல் மற்றும்   பிரதிநிதிகள் நீதிமன்றில் இந்த வழக்குவிசாரணைக்காக  முன்னிலையாகியுள்ளனர்.

IMG_4240.jpg
 

 

https://www.virakesari.lk/article/131792

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா என்னமா நகர்த்துறாங்க நகர்த்தல் பத்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகவும் இந்த கட்டளையை  நடைமுறை படுத்தினால் இனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படலாம் என தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில்

தென்பகுதியில் கோத்தா கோ கம, ரணில் கோ கம கொந்தளிப்பை பொலிஸார் திசைதிருப்பி  இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை போலீசார் மேல் சுமத்த வேண்டும். ஆதாரமாக போராட்டக்காரர் கூற்று "அரசாங்கமே இன, மத, மொழி முரண்பாட்டை வளர்த்து இனங்களை பிரித்து வைத்ததாக போராட்டக்காரர் கூறியிருக்கிறார்கள். அதோடு அத்தகைய முரண்பாடுகளுக்கு தாம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாக அறிவுறுத்த வேண்டும். தமிழர் பிரதேசத்தில் விகாரை கட்டினால் தென்பகுதி கொந்தளிக்குதாம், வடக்கில் தங்கள் நிலத்தில், தங்கள் வழிபாட்டுத் தலத்தை அழித்து, வழிபட விடாமல் தடுத்தால் அவர்கள் கொந்தளிக்க மாட்டார்களா? எது நீதி? இதை, விகாரையை அழித்து தமிழர் ஆலயம் அமைத்தால் தென்பகுதி சும்மா இருக்குமா? தென்பகுதி நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு கொடுக்கும்?  அடுத்தமுறை இத்தனைக்கும் விடையோடு வாருங்கள் என்று பொலீசாரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்களை அமைக்கவில்லை : புனர்நிர்மாணமே நடைபெறுகிது : தொல்லியல் திணைக்களம் நீதிமன்றில் தெரிவிப்பு

Published by Vishnu on 2022-07-19 17:33:29

 
 

கே .குமணன் 

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று குறுந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த கட்டுமானங்களை அகற்றுமாறும் அதனை அகற்றியபின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தொல்லியல் சின்னங்களை உரியவாறு பாதுகாக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தது. 

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து 19 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

கௌரவ நீதவான் ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்றுவரும்  இன்றைய வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் ஆஜராகியிருந்தார் . அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.  

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய  நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார். 

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று  2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு தற்போது கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.-

குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்களை அமைக்கவில்லை : புனர்நிர்மாணமே நடைபெறுகிது : தொல்லியல் திணைக்களம் நீதிமன்றில் தெரிவிப்பு : உண்மையை ஆராய நீதிபதிகள் குருந்தூர் மலைக்கு விஜயம் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.