Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை!

students-girls-TNM-3-compressed.jpg

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று ( ஜூலை 17 ) நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் 204 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் பெற்றோர் கொல்லம் புறநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகார் மனுவில்,

“தேசிய தேர்வு முகமை உள்ளாடையில் இரும்பு கொக்கிகள் ஏதும் இருக்ககூடாது என அகற்றச் சொல்லியுள்ளனர். அப்படி அகற்ற முடியாவிடில் பிராவையே கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சொல்லி கட்டளையிட்டுள்ளனர். உள்ளாடையில் இரும்புக் கொக்கிகள் இருக்கக் கூடாது என்று தேர்வு அறை விதிகளில் எங்கும் சொல்லவில்லை. எனது மகள் உள்ளாடையை கழட்ட மறுத்ததால் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். எனது மகள் நீண்ட நாட்களாக நீட் தேர்வுக்கு பயின்று வந்தார். ஆனால் நேற்று சரியாக தேர்வு எழுதவில்லை. பல மாணவிகளும் அழுதுகொண்டே திரும்பிச் சென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சோதனையிடும் அதிகாரிகள் அனைத்து பெண்களையும் ஒரே அறையில் உள்ளாடைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் உள்ளாடைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தனர் என்றும் பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.
ஆனால் தேர்வு நடந்த கல்வி மையத்தின் நிர்வாகிகளோ, “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்யவும், அவர்களின் பயோ மெட்ரிக் அட்டெண்டென்ஸ் எடுக்கவும் இரு நிறுவனங்களிடம் பணியை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனங்கள்தான் இவ்வாறு செயல்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.
 

https://minnambalam.com/neet-exam-students-forced-remove-their-bra/

 

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - தேசிய தேர்வு முகமை விளக்கம்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி ஹிந்தி சேவைக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தேர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

"தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார்.

தனது புகாரில் , தனது மகளிடம் உள்ளாடையை கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்," என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்," என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உறவினரான அஜித் குமார் பிபிசியிடம் பேசுகையில், "முதலில் அவர்கள் உள்ளாடையை கழற்றும்படி கூறியுள்ளனர். பின் அவள் அழத் தொடங்கிவிட்டாள். அதன்பின் அவளை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு மாணவ மாணவிகள் கூடி இருக்கும்போது இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"நாங்கள் மாணவியின் கூற்றை பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்," என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற மாணவிகளின் பெற்றோரும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கவுள்ளதாக கோபகுமார் தெரிவித்தார்.

"இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாக கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இது முதல்முறை அல்ல

நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கன்னூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அந்த ஞாயிற்றுக் கிழமையில் அந்த மாணவியும் அவரின் தாயும் சில கிமீ தூரம் நடந்து புதிய கால்சட்டை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன்பின் தேர்வு எழுத உள்ளே சென்றபோது, மெட்டல் டிடக்டர் சோதனையில் சத்தம் வந்தது. பின் அவரின் உள்ளாடையில் உள்ள ஊக்கால் அந்த சத்தம் வந்துள்ளது. எனவே அவர் தனது தாயிடம் அதை கழற்றி கொடுத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது

அதற்கு அடுத்த வருடம், பாலக்காட்டில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்வு முகமையின் மறுப்பு

தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை.

மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-62217833

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர்

அரசினது கைக்கூலிகளான அதிகாரிகள் ஒத்துக்கொள்வார்களா? இது தனியே தென்மாநிலங்களில் மட்டும் திட்டுமிட்டு நடாத்தப்படுகிறதா என்று ஊடகங்கள் ஆய்வுசெய்து  உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். புலி எலி என்று சவுக்கெடுப்போர் இதனைப் புலனாய்வு செய்து மணியாட்டலாமே. 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

"தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார்.

😄

  • கருத்துக்கள உறவுகள்

மார்பு கச்சையால்

நீட் தேர்வில் சர்ச்சை 🤔

Welcome to modern India 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2022 at 18:16, கிருபன் said:

 

“தேசிய தேர்வு முகமை உள்ளாடையில் இரும்பு கொக்கிகள் ஏதும் இருக்ககூடாது என அகற்றச் சொல்லியுள்ளனர். அப்படி அகற்ற முடியாவிடில் பிராவையே கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சொல்லி கட்டளையிட்டுள்ளனர். உள்ளாடையில் இரும்புக் கொக்கிகள் இருக்கக் கூடாது என்று தேர்வு அறை விதிகளில் எங்கும் சொல்லவில்லை. எனது மகள் உள்ளாடையை கழட்ட மறுத்ததால் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். எனது மகள் நீண்ட நாட்களாக நீட் தேர்வுக்கு பயின்று வந்தார். ஆனால் நேற்று சரியாக தேர்வு எழுதவில்லை. பல மாணவிகளும் அழுதுகொண்டே திரும்பிச் சென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சோதனையிடும் அதிகாரிகள் அனைத்து பெண்களையும் ஒரே அறையில் உள்ளாடைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் உள்ளாடைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தனர் என்றும் பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.
ஆனால் தேர்வு நடந்த கல்வி மையத்தின் நிர்வாகிகளோ, “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்யவும், அவர்களின் பயோ மெட்ரிக் அட்டெண்டென்ஸ் எடுக்கவும் இரு நிறுவனங்களிடம் பணியை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனங்கள்தான் இவ்வாறு செயல்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.

வக்கிரம் பிடித்த.... இந்திய சட்டங்கள்.
அண்மையில்... ஊழல், துரோகம், சர்வாதிகாரம்... போன்ற பல சொற்கள் 
பாராளுமன்றில் தடை செய்யப் பட்ட  சொற்களாக அறிவித்து உள்ளார்கள்.

 

//வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.//

 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைகளைக் களட்டச் சொன்ன அதிகாரிகள் எதிர்காலத்தில் அவர்களது வீட்டுப் பெண்டுகளதும் உள்ளாடைகளை இன்னுமொருவன் களட்டச்சொல்லுவான் என்பதை மறந்துவிட்டார்கள்.

பொறுக்கி பொறுக்கி அக்கா தங்கச்சிகளுடன் புறக்கல போல கிடக்கு.

இதில் ஒரு சில அதிகாரிகள் பெண்களின் உள்ளாடைகளை லவட்டிக்கொண்டு போயிருப்பார்கள் என்பது நிச்சயம். இது ஒரு வித மனநோய்.

இவங்களை எல்லாம் பயித்தியக்காரர்களுக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார டாக்டரிடம் கொண்டாந்து விடனும்.

  • கருத்துக்கள உறவுகள்

 உள்ளாடைகளில்  " தரவுகள் காப்பி அடிக்க   " ஒழித்து வைத்திருப்பார்கள் என்பதாலேயோ .? அப்போ சூப்பர்வைசர்களுக்கு   என்ன வேலை ?
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.