Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தினை எண்ணியவர் கைது!

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பொதுமக்கள் அரச கட்டடத்தை முற்றுகையிட்டதன் பின்னர் காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒருவரே இவர் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1292660

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!

போராட்டத்தை ஒடுக்குவதோடு, எதிர்காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் வரக்கூடாதென்பதற்கான அடக்குமுறை தொடரப்போவதற்கான அறிகுறியாகவே இந்தக் கைது நடவடிக்கை. தெரிந்தெடுத்துக் கைதுசெய்வதன் ஊடாக  தனிமனிதக் குற்றமாக்கித் தனிமைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கைது நடவடிக்கை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

போராட்டத்தை ஒடுக்குவதோடு, எதிர்காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் வரக்கூடாதென்பதற்கான அடக்குமுறை தொடரப்போவதற்கான அறிகுறியாகவே இந்தக் கைது நடவடிக்கை. தெரிந்தெடுத்துக் கைதுசெய்வதன் ஊடாக  தனிமனிதக் குற்றமாக்கித் தனிமைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கைது நடவடிக்கை. 

சரியாக சொன்னீர்கள், நொச்சி.
இந்த வார நக்கீரன் வார இதழில்… மெல்ல கொல்லும் நஞ்சு என்று, ரணிலை வர்ணித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரூ.1.78 கோடியை உடன் கையளிக்கவும்

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்களால், அங்கிருந்து கைப்பற்றப்பட்டு கையளிக்கப்பட்ட 17.8 மில்லியன் (1.78 கோடி) ரூபாயை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, நேற்று (28) கட்டளையிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

பொலிஸாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் அது தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதவான் குறித்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு கட்டளையிட்டார்.

அதுமட்டுமின்றி பணம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில், குறித்த நான்கு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரூ-1-78-கோடியை-உடன்-கையளிக்கவும்/175-301313

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றிலே போட்டாலும்அளந்து போடவேணும் என்று சொல்வார்கள். இவர்களிடம்  சாட்சியோடு  எண்ணிக்கொடுத்ததையே இன்னும்  உரிய தரப்பிடம்  ஒப்படைக்கவில்லை, எண்ணாமல் கொடுத்திருந்தால் சுருட்ட வசதியாக இருந்திருக்கும். எண்ணியவர் கைது, வாங்கியவர் என்னவானார்? அவரை வாங்கிய பணத்தோடு கைது செய்து பணத்தை சரி பார்க்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் நாம் விடும் அறிவித்தல் என்னவெண்டால், கோத்தாவின் கோவணத்தையும் எடுத்தவர்கள் கையளித்து விடுங்கள். நேற்று கோத்தாவின் கொடியை கொண்டு போய், படுக்கையில் விரித்து படுத்தவரை கைது செய்துள்ளார்கள்.

அவரை செக் பண்ணி பார்த்திருக்க வேண்டும்... சிலவேளை கோத்தாவின் கோவணத்தை போட்டுக் கொண்டிருக்க கூடும்.

கோவணம் இல்லாமல்,கோத்தா சிங்கப்பூரில், வீட்டினுள் முடங்கி போய் இருக்கிறார். தயவுடன் அதை கொடுத்து உதவுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இத்தால் நாம் விடும் அறிவித்தல் என்னவெண்டால், கோத்தாவின் கோவணத்தையும் எடுத்தவர்கள் கையளித்து விடுங்கள். நேற்று கோத்தாவின் கொடியை கொண்டு போய், படுக்கையில் விரித்து படுத்தவரை கைது செய்துள்ளார்கள்.

அவரை செக் பண்ணி பார்த்திருக்க வேண்டும்... சிலவேளை கோத்தாவின் கோவணத்தை போட்டுக் கொண்டிருக்க கூடும்.

கோவணம் இல்லாமல்,கோத்தா சிங்கப்பூரில், வீட்டினுள் முடங்கி போய் இருக்கிறார். தயவுடன் அதை கொடுத்து உதவுங்கள்.

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை குறித்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

https://athavannews.com/2022/1292833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஜனாதிபதி மாளிகையில் இருந்து... மீட்கப்பட்டதாக கூறப்படும், பணத் தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தொகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், குறித்த பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பணத்தொகை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1292855

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and people standing

ஜனாதிபதி மாளிகையில்... பணத்தை எண்ணியவர்கள், 
கட்டிலில் படுத்தவர்களை... கைது செய்ய முடியும் என்றால்..
உடற்பயிற்சி செய்த, போலீஸ்காரரையும் கைது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைகொள்ளையடிக்கிறவனுக்கு உயர் பதவி, வெளிநாட்டு உல்லாசம். கொள்ளையடித்து பதுக்கிய பணத்தை எண்ணி உரியமுறையில் கையளித்தவர் கைது. விசித்திரமான நாட்டில் வினோதமான சட்டம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.