Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபய... சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில், "67 மில்லியன் ரூபாவை" ஹோட்டல் கட்டணமாக... செலுத்தியதாக தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

கோட்டாபய... சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில், "67 மில்லியன் ரூபாவை" ஹோட்டல் கட்டணமாக... செலுத்தியதாக தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294780

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் கோத்தா நின்ற ஒரு மாத காலத்தில்….
69 மில்லியன் ரூபா செலவளிக்கப் பட்டுளது என்றால், ஒரு நாளைக்கு…. 2 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருகின்றது.
இப்படி செலவளிக்க.. அவருக்கு கொடுக்கப் படும் பணத்தைப் பற்றி யாரும் கணக்கு கேட்கவும் முடியாது.
எல்லாம் மக்களுக்கு சேர வேண்டிய பணம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது

எங்களை திறந்த சிறைச்சாலையில் அடைத்து அழகு பாத்தார், இப்போ அவர் அதே நிலையில். ஏன் இருக்கிற  அறையில் இருந்து கூப்பிட்டால் புத்தர் பதில் கொடுக்க மாட்டாரா? தேவாலயம் வழிபட  போனவர்களை குண்டு தாக்கி கொன்றுபோட்டு, தான் மதவழிபாடு செய்ய மததலங்களுக்கு போகவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சிங்கப்பூரில் கோத்தா நின்ற ஒரு மாத காலத்தில்….
69 மில்லியன் ரூபா செலவளிக்கப் பட்டுளது என்றால், ஒரு நாளைக்கு…. 2 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருகின்றது.
இப்படி செலவளிக்க.. அவருக்கு கொடுக்கப் படும் பணத்தைப் பற்றி யாரும் கணக்கு கேட்கவும் முடியாது.
எல்லாம் மக்களுக்கு சேர வேண்டிய பணம் தானே.

முன்னாள் சனாதிபதி...சிங்கப்பூரில் மருத்துவம்  செய்த செலவு  என்று கணக்குகாட்டி...மக்கள் தலையில் அரப்பு வைப்பினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

முன்னாள் சனாதிபதி...சிங்கப்பூரில் மருத்துவம்  செய்த செலவு  என்று கணக்குகாட்டி...மக்கள் தலையில் அரப்பு வைப்பினம்..

அவர் ஊருக்கு வந்தாலும்...  100 - 150 படையினராவது நிரந்தரமாக அவரை 
மாறி, மாறி காவல் காக்க நியமிப்பார்கள். 
நாட்டுக்கு தீமை செய்த ஒருவருக்கு.. இது எல்லாம், 
மக்கள் வரிப் பணத்தில் வெட்டிச் செலவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சிங்கப்பூரில் கோத்தா நின்ற ஒரு மாத காலத்தில்….
69 மில்லியன் ரூபா செலவளிக்கப் பட்டுளது என்றால், ஒரு நாளைக்கு…. 2 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருகின்றது.
இப்படி செலவளிக்க.. அவருக்கு கொடுக்கப் படும் பணத்தைப் பற்றி யாரும் கணக்கு கேட்கவும் முடியாது.
எல்லாம் மக்களுக்கு சேர வேண்டிய பணம் தானே.

மக்களை கொன்று குவித்து விட்டு, அந்த மக்களின் பணத்தில்  மருத்துவம், மத யாத்திரை போய் மனோவியாதி, உடல்வியாதி தீர்க்க திரிகிறார் நாடு நாடாய்.  மக்களை கொன்றது இலங்கையிலும், தேவாயத்திலும். அவரோ தாய்லாந்து விகாரையில் பாவம் கழுவ முயற்சிக்கிறார். விகாரைகளை தரிசிக்க  மறுப்பு. சரியான தண்டனை! நாட்டில் காணி பிடித்து,  விகாரை விகாரையாய் கட்டியும் வழிபட முடியாமல் அலைகிறார். எங்கோ இருக்கிற போப்பாண்டவர் உதவுகிறார் அந்த மக்களுக்கு. இறையாண்மை! தொண்டை கிழிய கத்துவினம் நாடாளுமன்றத்தில். சமயம் மாற்றுகிறார்கள் என்று குறைச்சாட்டை வைத்து தங்களை மறைத்துக்கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.