Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைநீக்கத்திற்கு கனடிய தமிழர் பேரவை வரவேற்பு -உறுதியான தொடர் நடவடிக்கைகளிற்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By RAJEEBAN

16 AUG, 2022 | 04:06 PM
image

புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள் இன்னும் தடைப் பட்டியலில் இருப்பது ஏமாற்றத்தையளிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துத் தனியார் காணிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ல் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு முழுமையாக இணங்குமாறும், தற்போதைய தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

தடைநீக்கத்திற்கு கனடிய தமிழர் பேரவை வரவேற்பு -உறுதியான தொடர் நடவடிக்கைகளிற்கு அழைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

august 27 ,28  தெருத் திருவிழா...நாங்களும் நல்லிணக்கமாய்... ரணிலைக் கூப்பிட்டு  ஒரு கொத்துரொட்டி குடுத்திருக்கலாம்....🙃

  • கருத்துக்கள உறவுகள்+

இனி கொள்ளைக்காரர் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.

கையிலையே புடிக்க முடியாது!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நன்னிச் சோழன் said:

இனி கொள்ளைக்காரர் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.

கையிலையே புடிக்க முடியாது!

எங்களுக்கு வேறு தெரிவுகள் ஏதும் உண்டா? 

இருந்தால் அவை என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே புலம்பெயர்  தமிழரின் முதலீடு வேண்டுமாயின் அவர்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படவேண்டும், இல்லையேல் தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிய முடியாது தமிழ்கட்சிகளை பயன்படுத்துவதுபோல். வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கும்போது, முதலீட்டாளர்களை அழைக்கும்போது அவர்களுக்கேற்றவாறு தங்கள் சட்டதிட்டங்களை மாற்றியமைக்கிறார்கள் இல்லையா? இங்கு அவர்கள் நிஞாயமானதை தங்களுக்குரியத்தை பேரம் பேசுகிறார்கள், உதவி வேண்டுமா? கேட்டதை நடைமுறைப்படுத்து. இல்லையா உதவி பெறுவதை மறந்துவிடு. நீ நினைத்தநேரம் தடை போடுவாய், வேண்டிய நேரம் கூப்பிடுவாய், நாங்கள் உன் அடிமையல்ல. கடன் வாங்கி போர் செய்த உனக்கே இத்தனை திமிர் என்றால், கைவிடப்பட்டு நிக்கும் உனக்கு உதவி செய்யும் எமக்கு எத்தனை திமிர் இருக்கும் என்பதை உனக்கு காட்ட வேண்டாமோ? இவரின் ஊழிக்கூத்துக்கு ஆடிய கூட்டமெல்லாம், இவர் விழுந்ததை எண்ணி மகிழ்கிறார்கள். தூக்கிவிட யாருமல்ல, எல்லாப்பக்கமும் தலையசைக்கிறார் தட்டிக்கேட்க முடியாமல்.             

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.