Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தானாகவே மூச்சு அடங்கிப் போன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தானாகவே மூச்சு அடங்கிப் போன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நாடாளு மன்றில் அங்கம் வகிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று கூட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட் டம் திடீரென காலவரையறை குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இதோ முடிவுக்கு வந்துவிட்டது, தனது இறுதி யோச னையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இந்தா சமர்ப்பிக்கப்போகின்றது என்றெல்லாம் உறுதியாக நம்பப் பட்ட வேளையிலேயே, அது திடீரென மூச்சை நிறுத்தி யிருக்கின்றது.

இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை இந்தப் பணிக்காக ஸ்தாபித்தவரே ஜனாதிபதிதான். அவரே இந்தக் குழுவின் இறுதிக்கட்ட கலந்தாய்வை இடை நிறுத்தும்படி தெரிவிக்கிறார் என அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதியும், அவரது அரசில் முக்கிய பங்காற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியும் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்திக் குறிப்பிட்டதால் வேறு மார்க்கமின்றியே, கூட்டம் நேற்றுமுன்தினம் மாலையுடன் "அடங்கிப்' போனது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மாவட்ட மட்ட அளவுக்கே அதிகாரப்பகிர்வு, ஒற்றையாட்சி முறையே உறுதியாக நீடிக்கும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியும் அதனுடன் கூட்டுச்சேர்ந்துள்ள பேரின வாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியனவும் தீர்மானமாக எடுத்திருந்தன.

ஆனால் சிறுபான்மை இனத்தவரைத் திருப்திப்படுத் தும் வகையில் மாகாண மட்ட அதிகாரப்பகிர்வு, ஒற்றை யாட்சி முறைக்குப் பதிலாக ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற விட்டுக்கொடுப்புகளாவது இறுதி யோசனையில் அடங்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி (நு ஆ) போன்றவை வலியுறுத்தி வந்தன.

இந்தக் கட்சிகளின் இந்தத் "தாராளம்' வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்களின் நியாயமான எதிர் பார்ப்பை அபிலாஷையை நிறைவு செய்யவே மாட்டாது என்பது தெளிவாயினும், அதிக எண்ணிக்கையான கட்சி கள் இந்த மட்டத் தாராளத்திற்கேனும் வந்திருப்பதால் ஆளும் ஸ்ரீ. ல. சு. கவும் அதனுடன் சேர்ந்த பௌத்த, சிங்கள மேலாண்மைப் போக்குக் கட்சிகளும்கூட இதற்காவது இணங்கியேயாக வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நிமிட வெட்டு மூலம் அந்த எதிர்பார்ப்பையும் சிதறடித்து விட்டது ஆளும் தரப்பு.

தாம் ஆட்சிக்கு வந்தால் தென்னிலங்கையில் பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடல் நடத்தி இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப் பாட்டை மூன்று மாதத்துக்குள் உருவாக்கி, அதனடிப்படை யில் தமிழர் தரப்போடு தீர்வு குறித்து ஆராய்வேன் என்று மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந் தார். தமது "மஹிந்த சிந்தனை' தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதையே அவர் வலியுறுத்தியிருந்தார். அந்த வாக்குறுதிப் படி மூன்று மாதங்கள் சென்று, மேலும் ஒன்றரை வருடங் கள் கடந்து விட்டன. இன்னும் தென்னிலங்கை இணக்கப் பாட்டை உருவாக்கவேயில்லை ஜனாதிபதி மஹிந்தர்.

அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது பௌத்த சிங் களப் பேரினவாத சக்திகளை அரவணைத்து, அந்த மாயைச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் அவரது விட்டுக் கொடாப் போக்குத்தான் என்பதும் கண்கூடு.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது தீர்வு யோசனைத் திட்டத்தை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் இறுதி செய்யாவிட்டால் அந்தக் கூட்டத்தின் செயற்பாடுகளில் தான் இனிப் பங்குபற்றப் போவதில்லை என ஐ. தே. கட்சி காலக்கெடு விதித்திருந்தது. இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற நாடகத்தைக் காட்டி, சர்வதேசத் துக்கும், நாட்டுக்கும் கண்துடைப்பு வேலை செய்து கொண்டு காலத்தை இழுத்தடிக்க ஜனாதிபதி மஹிந்தரின் நிர்வாகம் முயல்கின்றது என்ற யதார்த்தம் புரிந்ததாலேயே, அந்த இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. க. இத்தகைய கெடுவை விதித்தது.

அக்கெடு முடிவடைவதற்குள் நேற்று முன்தினமே இறுதி யோசனை வடிவைத் தீர்மானித்து, உறுதி செய்து, அதன் மூலம் பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கவையும் தனது செயற்பாட்டுக்குள் இழுத்து, அரவணைத்து வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு மும்முரமாக முயன்று பணியாற்றிக் கொண்டிருக்க, கடைசிக் கட்டத்தில் அதற்கு வேட்டு வைத்துவிட்டது ஜனாதிபதியின் உத்தரவு.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்த காலம் முதல், அது பற்றிய தீவிரத்தைச் சமாளிப்பதற்கும், சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றுவதற்கும், காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் இத்தகைய சர்வகட்சிக்கூட்டம், வட்டமேசை மாநாடு, பலதரப்பு ஆலோசனை, அனைத்துக் கட்சிப் பேச்சுகள் என்ற நாடகங்களை கனகச்சிதமாக அரங்கேற்றியே வந் திருக்கின்றன. ஒவ்வொரு அரசும் தனது ஆட்சிக் காலத் தைப் பூர்த்தி செய்து, தான் ஆண்டுவிட்டுப் போவதற்காக இத்தகைய அபத்த நாடகங்களை நடத்துவது வழமையே என்று இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந் தோம்.

அத்தகைய கண்துடைப்பு வேலையே இப்போதும் அரங்கேறுகின்றது என்பதை இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுதானும் ஒரு தடவை நிரூபித்து இருக் கிறது. அவ்வளவே.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கூற்றை தென்னிலங்கை கட்சிகள் யதார்த்தமாக்கிவிடக்கூடாது

வீரகேசரி நாளேடு

அரசியல் பேதங்களை மறந்து ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் திஸ்ஸவிதாரண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் தீர்வுகள் காணப்போவதில்லை என்று விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் முன்வைத்து வருகின்ற கருத்தை தென்னிலங்கை கட்சிகள் யதார்த்தமாக்கிவிடக்கூடாது என்று சர்வகட்சி ஆலோசனைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண கோரியுள்ளார். அவசியமற்ற தர்க்கங்களை முன்வைக்காது அரசியல் பேதங்களை மறந்து நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சகல அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும். மாவட்ட நிர்வாக மட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அதிகாரம் பரவலாக்கப்படும். இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

சர்வகட்சி ஆலோசனைக்குழுக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு சொன்னார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் தயாரிக்கும் ஆலோசனை குழுக்கூட்டம் உரிய பெறுபேறுயின்றி ஒத்திவைக்கப்பட்டமையை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகள் கண்டித்திருந்தன. இந்நிலையிலேயே குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக சர்வகட்சி ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் இரண்டு கட்சிகள் தங்களது தலைவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப சர்வகட்சி ஆலோசனைக்குழு ஒரு வார கால இடைவெளிக்கு பின் அடுத்த வாரம் முதல் மீண்டும் கூட தீர்மானித்தது. எனினும் இந்தக்குழுவில் இரண்டு பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனையின் பேரில் சர்வகட்சி ஆலோசனைக்குழு கடந்த ஒருவருடம் 2 மாதங்களுக்குள் 40 கூட்டங்களை நடத்தியுள்ளது. அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைக் கருத்தில் கொண்டு நான் யோசனையொன்றை சமர்ப்பித்தேன். அதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 14 கட்சிகள் தங்களது சனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தன.

முன்வைக்கப்பட்ட யோசனைகள், ஆலோசனைகளின் பேரில் பிரதான பிரச்சினைகளை வகைப்படுத்தி ஒன்றுக்கொன்று தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி சகல விடயங்களிலும் பொது இணக்கப்பாட்டுக்கு சர்வகட்சி ஆலோசனைக்குழுவினால் வரமுடிந்தது. எனினும் சில யோசனைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இனப்பிரச்சினை தீர்வுகாண்பதற்காக சர்வகட்சி ஆலோசனைக்குழு தனது இறுதியோசனையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்திருந்தது. எனினும் ஆலோசனைக்குழுவில் இணக்கம் காணப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக குழுவில் அங்கம் வகிக்கின்ற இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் இருவர் தங்களது கட்சித் தலைவர்களுக்குடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் அடுத்தவாரம் சர்வகட்சி ஆலோசனைக்குழு கூடாது. கடந்த திங்கட்கிழமை சர்வகட்சி ஆலோசனைக்குழு கூடியபோது பொதுவான இனக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதோடு இரண்டு பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இரு பிரச்சினைகளையும் கூறி சர்வகட்சி ஆலோசனைக்குழுவில் செயற்பாட்டை சிக்கலடைய செய்ய விரும்பவில்லை.

இணக்கம் காணப்பட்ட விடயம் தொடர்பாக கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கைக்கு இணங்கி அடுத்த வாரம் முதல் சர்வகட்சி ஆலோசனைக்குழுவை கூட்டுவதற்கு ஏகமனதாகவே தீர்மானித்திருந்தோம். எனினும் தீர்வுத் திட்டத்தை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்காமையினால் சர்வகட்சி ஆலோசனைக்குழுவில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறித்திருக்கிறார். இதனையிட்டு நான் வருத்தம் அடைகின்றேன். எனினும் ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சார்பாக சர்வகட்சி ஆலோசனைக்குழுவில் பங்குபற்றும் சொக்ஷியிடம் இறுதி யோசனை சமர்ப்பிப்பதை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை காலம் தாழ்த்துமாறு எழுத்துமூலம் கோரியிருந்தார். எனினும் எம்மால் காலம் தாழ்த்தமுடியவில்லை. வரலாற்றைப் பார்க்கின்றபோது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் தீர்வு காண முன்வராது என்று விடுதலைப்புலிகள் கூறிவருகின்றனர். இலங்கை அரசாங்கத்தோடு கையொப்பமிடுவதில் அர்த்தமுமம் இல்லை. ஆட்சியில் இருக்கும் கட்சி எதிர்க்கட்சியாகும் போது அந்தக் கையொப்பம் நடைமுறைப்படுத்தப்படுவதில்ல

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இலங்கையில் எந்தவொரு கட்சியும் மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வையேனும் தமிழர்களுக்காக அனுமதிக்கப் முன்வரவில்லை. எந்தவொரு கட்சியும் தேர்தல் பிரச்சாரங்களில் தாம்மால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியுமென இனிமேல் காதில் பூச்சுற்ற முடியாது.

பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சனைக்குத் தீத்வுகாண முடியுமென அறிக்கை விடுபவர்கள் தங்களது கருத்து முற்றிலும் சாத்தியமற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமாதான ஜனநாயக தேவதையாக தன்னைக் காட்டிக் கொள்ளும் சங்கரி போன்றவர்கள் இது தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்கள் ?

தனிநாடு ஒன்றே தமிழர்களுக்கான தீர்ப்பு என்ற எமது நம்பிக்கை இதன்மூலம் வலுப்பெறுகிறது.

30 வருடமாய் எந்த ஒரு தீர்வையும் எதிர்த்து வந்த பௌத்த பேரினவாதிகள் எந்த ஒரு தீர்வு யோசனையையும் ஆதரிக்க போவதில்லை... தாங்களாக சிங்களவர் ஒரு தீர்வை கொடுப்பார்களாக இருந்தால் அவர்கள் இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசிய ரீதியிலும் தோற்க்கும் போதுதான்.... அரசியல், பொருளாதாரம் இரண்டிலும் அரசு தோற்க்க ஆரம்பித்து விட்டது.. இதன் முடிவு இரானுவத்தையும் பாதிக்கும் போது தமிழரின் விடிவு தடுக்க் முடியாதது ஆகிவிடும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.