Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ

By T Yuwaraj

31 Aug, 2022 | 06:38 AM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை.

மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். 

இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன.

இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் நியாயமான நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 கேள்வி - அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் உள்ளதா?

பதில் - இந்த இணையனுசரணை நாடுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்திருக்கும் நாடுகளாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிறந்த நிலையிலிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

 காணாமல்போனோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு விவகாரம் ஆகியவற்றின் நாம் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை எட்டியிருப்பதுடன் இப்பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டுமென்ற நியாயமான நோக்கத்துடன் செயலாற்றிவருகின்றோம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அதற்குரிய தீர்வு தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதுமாத்திரமன்றி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை மிகவும் வெளிப்படையாகவே முன்னெடுத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

 

https://www.virakesari.lk/article/134717

 

  • கருத்துக்கள உறவுகள்

காணிகளை அபகரிக்க  தொல்பொருள் ஆராட்சி என தொடங்கி இருக்கும் குழு பற்றி அமைச்சர் வாயே திறக்கவில்லை. அரசாங்க அனுசரணை இல்லாமல் இவர்கள் இயங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணாக்கியன் 2 தடவை கனடா வந்திட்டார்....தமிழ் முசுலிம்களையும் 2தடவை பார்த்திட்டார்...இனி வேலை சுகம்தானே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

சாணாக்கியன் 2 தடவை கனடா வந்திட்டார்....தமிழ் முசுலிம்களையும் 2தடவை பார்த்திட்டார்...இனி வேலை சுகம்தானே...

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

குரானுக்கான தேவை அதிகரிக்கும்போது மீண்டும் வருவார். மழைக்கால் இருளானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதை வெகு விரைவில் புரிந்து கொள்வார் சாணக்கியன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

நிச்சயம் அடுத்த தெருத் திருவிழாவில் பிரதி பலிக்கும்.....இந்த முசுலிம் பூத் பற்றிய படங்கள்  இருக்கு...அந்த கருவின்விபடி... தமிழ் தம்முடையது..தமிழை வளர்த்ததே தாம்தான் என்பதுடன்...ஆங்கில மொழிபெயர்ப்பில் அசுரப்பு,கக்கீமின் பாராளூமன்ற உரைகளும்...இது ஒரு நீண்ட நோக்குப் போல் தெரிகிறது..

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.