Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பணப் பரிசில் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பணப் பரிசில் !

 

மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

வழங்கப்படவுள்ள பணப் பரிசில் தொகை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுதமேந்திய படையினர் மற்றும் பொலிஸ் விசேட வாகனங்களையும் இதற்கு பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வௌிநாடுகளுக்கு சென்றுள்ள பாதாள உலகக் குழுவினரால் இவ்வாறான குற்றச்செயல்கள் வழிநடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மை நாட்களில் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/206752

  • கருத்துக்கள உறவுகள்

"நீ... எதை, விதைத்தாயோ... அதனைத்தான் அறுவடை செய்வாய்."
தமிழரை அழிக்க... ஆயுதத்தை தூக்கினாய். இன்று அதே ஆயுதம் 
பாதாள உலக கோஷ்டிகள் மூலம் சிங்கள மக்களை... 
நீதிமன்றம் என்றும்  பாராமல் எல்லா இடமும்...  
தினமும் துப்பாக்கி சூடு நடந்து,  உன் மக்களையே கொல்கிறார்கள்.
அத்துடன்... போதை பொருளும், கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு... 
மாணவர்கள் உட்பட,  நாடு முழுக்க பரவி விட்டது.
 

விடுதலைப் புலிகளின் 30 வருட போரில் கூட... அவர்கள் சாதாரண சிங்களைவரை  கொல்லவில்லை.
உங்கள் அரசியல்வாதிகளும், புத்த பிக்குகளும் திருந்தாத வரை.. இது தொடரும். 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பேருவளையில் மாணிக்கக்கல் வர்த்தகரிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன!

11 NOV, 2022 | 11:29 AM
image

பேருவளை, தினகொட பிரதேசத்தில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 630   தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதுடன்   சந்தேகத்தில் வர்த்தகரை கைது செய்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை பொலிஸார் சோதனையில்  ஈடுபட்டிருந்தபோது, பேருவளை நகருக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த ஒருவரை சோதனையிட்டபோது, அவரது  சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் 50 ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர்  சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவரது வீட்டிலிருந்து  3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 630   தோட்டாக்களும்  கைப்பற்றப்பட்டதாகவும்  பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/139710

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2022 at 20:26, nunavilan said:

வழங்கப்படவுள்ள பணப் பரிசில் தொகை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்

மசகு எண்ணெய்க்கப்பல் காத்துக்கிடக்கு கடலில், இறக்கப்பணமில்லை, பணப்பரிசு கொடுக்கபோகினமாமில்லை! தகவல் கொடுப்பவருக்கு பணப்பரிசு இல்லை அவர்களே மறைத்து வைத்திருந்ததாக வழக்கு சோடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் கவனம் தேவை !

By DIGITAL DESK 5

13 NOV, 2022 | 01:16 PM
image

சமூகத்தில் புழக்கத்தில் உள்ள  சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் , நாட்டில்  அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட  தரப்புக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் முறையான பொறிமுறை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139886

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்தவர்கள், கொரோனாவை ஒழித்தவர்கள்... என்று மார்தட்டும் இவர்களால்,
ஏன்.. சட்ட விரோத ஆயுதங்களையும், போதைப் பொருள் கடத்தலையும் நிறுத்த முடியவில்லை.
இவற்றை செய்வதே... இவர்களும், இவர்களுக்கு வேண்டப் பட்டவர்களும்தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

புலிகளை அழித்தவர்கள், கொரோனாவை ஒழித்தவர்கள்... என்று மார்தட்டும் இவர்களால்,
ஏன்.. சட்ட விரோத ஆயுதங்களையும், போதைப் பொருள் கடத்தலையும் நிறுத்த முடியவில்லை.
இவற்றை செய்வதே... இவர்களும், இவர்களுக்கு வேண்டப் பட்டவர்களும்தான். 

அந்த இரண்டு செயலையும் செய்தற்கான ஆதாரம் ஏதுமில்லை. சும்மா வாய்ப்பினாத்தல் தான்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.