Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில்

 

 

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ABC ஊடக வலையமைப்பின் ‘வெளிநாட்டு நிருபர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதியின் நேர்காணல் வருமாறு :

கேள்வி – அண்மைக்காலமாக பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அது நெருக்கடியைத் தீர்க்குமா?

ஜனாதிபதி – அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ,எனது வீட்டுக்கு தீ வைப்பதன் மூலமோ, பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் ஒன்றிணைவதன் மூலமோ எங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கேள்வி – மக்களை கைது செய்வதன் மூலமோ அல்லது அவர்களை தடுப்பதன் மூலமோ இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜனாதிபதி – சட்டத்தை மீறியவர்களை கைது செய்கிறோம். நான் அதைச் செய்பவன் அல்ல. உங்கள் நாட்டைப் போலவே, பொலிஸார் செய்கிறார்கள். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பதை பொலிஸாரே தீர்மானிக்கின்றனர். அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டுள்ளன.

கேள்வி – அருட்தந்தை ஜீவந்த, மாணவர் சங்கத் தலைவர் வசந்த போன்ற பலர்…

ஜனாதிபதி – இந்தச் சிறிய அளவிலான சம்பவங்களை என்னிடம் கேட்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் பெரும்பான்மைக்கு நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி – இந்த நிலையில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

ஜனாதிபதி – இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு தீர்வு தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.

கேள்வி – உங்கள் நாட்டில் உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா?

ஜனாதிபதி – நாட்டில். ஆம். IMFக்கு செல்வதுதான் சரி என நான் தான் சொன்னேன். அதனால் தான் எனக்கு ஆதரவளிக்கும் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/208761

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில்

உப்பிடித்தான் முதலும் ஒராள் பினாத்திக்கொண்டு திரிஞ்சவர்....பிறகு மாலைதீவு,சிங்கப்பூர்,தாய்லாந்து எண்டு ஓடுப்பட்டு அலைஞ்சு திரிஞ்சது தெரியும் தானே 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில்

 

 

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ABC ஊடக வலையமைப்பின் ‘வெளிநாட்டு நிருபர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதியின் நேர்காணல் வருமாறு :

கேள்வி – அண்மைக்காலமாக பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அது நெருக்கடியைத் தீர்க்குமா?

ஜனாதிபதி – அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ,எனது வீட்டுக்கு தீ வைப்பதன் மூலமோ, பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் ஒன்றிணைவதன் மூலமோ எங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கேள்வி – மக்களை கைது செய்வதன் மூலமோ அல்லது அவர்களை தடுப்பதன் மூலமோ இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜனாதிபதி – சட்டத்தை மீறியவர்களை கைது செய்கிறோம். நான் அதைச் செய்பவன் அல்ல. உங்கள் நாட்டைப் போலவே, பொலிஸார் செய்கிறார்கள். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பதை பொலிஸாரே தீர்மானிக்கின்றனர். அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டுள்ளன.

கேள்வி – அருட்தந்தை ஜீவந்த, மாணவர் சங்கத் தலைவர் வசந்த போன்ற பலர்…

ஜனாதிபதி – இந்தச் சிறிய அளவிலான சம்பவங்களை என்னிடம் கேட்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் பெரும்பான்மைக்கு நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி – இந்த நிலையில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

ஜனாதிபதி – இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு தீர்வு தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.

கேள்வி – உங்கள் நாட்டில் உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா?

ஜனாதிபதி – நாட்டில். ஆம். IMFக்கு செல்வதுதான் சரி என நான் தான் சொன்னேன். அதனால் தான் எனக்கு ஆதரவளிக்கும் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/208761

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒரு பாராளுமன்ற அங்கத்துவம் கூட கிடைக்கவில்லை இவர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தார் அதையே மறந்து விட்டான் அணில்.  🤣 எந்த மரத்தில் பழம் உண்டோ அந்த யாருடையதாயிருந்தாலும் அதில் தவியிருந்து பழத்தைக் சாப்பிட்டு கொண்டு நீ இருந்த மரத்தையே வீழ்ந்தி விட்டாய்  துணிவு இருந்தால் பொது தேர்தல் மூலம் உனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும்’ 😄

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ,எனது வீட்டுக்கு தீ வைப்பதன் மூலமோ, பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் ஒன்றிணைவதன் மூலமோ எங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்சனைகளை காலங்காலமாக அவ்வாறுதானே மாறி மாறி வந்த  சிங்கள அரசாங்கங்கள்  கையாண்டன.  இப்போ மட்டும் ஏன் இவருக்கு இந்தக் கேள்வியெழுந்தது? தன் வீடு எரிந்ததாலா?  அதையும் நிருபர் தன் கேள்வியில் இணைந்திருக்க வேண்டும்! 

இப்போ இவர் லண்டனுக்கு போயிருக்கிறார் என நினைக்கிறன். திரும்பி வரும்போது என்ன சவால் இவருக்கு காத்திருக்கிறதோ?  சாதாரணமாக தேர்தலில்   ஏற்பட்ட தோல்வியை, அல்லது மற்றவர்களுக்கு வரும் புகழ்ச்சியை தாங்கிக்கொள்ளாது தள்ளி விழுத்தும் ராஜபக்ஸாக்கள் தமது அரசியல் கனவு பாதியில் பறிக்கப்பட்டு தாம்  விரட்டப்பட்டதை எப்படி சகித்துக்கொவார்கள்? நரியார் அதை எவ்வாறு தாண்டுவார்? பொறுத்திருந்து பாப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.